கம்பீரம்..
பொருளீட்ட வெளிநாடு சென்ற தலைவன்,
அங்கே ஒரு பெண்ணின் காதல் வலையில்,
தன்னை மறந்து களியாட்டத்தில் இருக்கிறான்
என்ற செய்தி கேட்ட தலைவிச் சொன்னாள்..
இது உண்மையானால், அவனுடன் உறவாடிய இவ்வுடலை
தீக்கிரையாக்கி, இம்மனதை ஈரேழு ஜென்மத்திற்கும்
காதல் வயப்படாமல் சபிப்பேன் என்று...
போரில் புறமுதுகிட்டு ஓடுகையில், பின்வந்து தாக்கிய
அம்பினால் உன் மகன் மாய்ந்தான் என்ற செய்தி கேட்ட தாய் கூறியது..
ஒருபோதும் நான் இதை நம்ப மாட்டேன், ஒருவேளை இது உண்மையானால், அவனிற்கு பால் வார்த்த இந்த மார்பகங்களை அறுத்தெறிவேன் என்றாள்...
அந்தத் தலைவி தன் காதலின் மேல் வைத்த நம்பிக்கையும், இத்தாய்
தன் மகனின் வீரத்தின்பால் வைத்த நம்பிக்கையும் கம்பீரமே..
ஒவ்வொரு தோல்வியின் பொழுதும், நம்பிக்கையின்மையால்
நிலைகுலைந்து போகாமல்.. அடுத்த அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு
மனிதரும் வெளிக்காட்டுவது.. கம்பீரம்..
அடுத்த தலைப்பு ::: பாவம்(sin)