Author Topic: மாங்கனி - வெங்கனியாள் கனிந்தாள் செங்கனியாய்  (Read 46511 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
ஹாஹ்ஹா உண்மைதான், பாவம் தான் பசங்க, இவ்வளவுதான் கூருனு பொண்ணுங்களாவது புரிஞ்சுகலாம் இல்லையா ?

இந்த கோரிக்கையை அகில உலக வாலிபர்கள் சார்ப்பாய் வைக்கிறேன் எல்லா பெண்ணகளிடத்தும்,  நாங்க‌ என்ன வச்சுட்டா வஞ்சன பண்றோம், புரிஞ்சுக்கோங்க‌
« Last Edit: April 09, 2013, 02:14:26 PM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: மாங்கனி - சோர்ந்தான் ஏறு
« Reply #46 on: September 21, 2012, 02:25:10 PM »
சோர்ந்தான் ஏறு


பனிக்காற்று போல்ப்பாவை பிணைந்தி ணைந்து
பருவநெஞ்சில் பக்குவமாய் படர்ந்து றைந்து
மணிக்கணக்கு தெரியாமல் மயங்கி ஆர்ந்து
மயிலிறகு போன்றுமேனி முழுதும் ஊர்ந்து
இனிக்காற்று நுழைந்துவிட இடமே இல்லை
என்பதுபோல் நெருங்கிடுவாள் என்று எண்ணி
மனக்கணக்கு போட்டுவந்த நினைப்ப னைத்தும்
மரத்தூளாய் பொடிந்ததனால் மறவன் சோர்ந்தான்

வெறுமையொன்று வேகமாக ஊடி நெஞ்சின்
விளிம்புவரை மீதமின்றி இருப்புக் கொள்ள
இறும்பாடை பூண்டிருக்கும் சேர வீரன்
வெறும்பானை போலானான் வஞ்சி சொன்ன
வெறுப்பான வார்த்தைகளும் நெஞ்சில் வந்து
நெருநெருக்க வெடித்திட்டான் அவ்வப் போழ்து
கறுத்துப்போ னமுகில்போல் முணுமு ணுத்தான்
கருத்துப்போ னால்முனகா தென்ன செய்வான் ?

திருவோடாய்த் தனைஏந்தி பாவை வீட்டுத்
தெருவோடு பொடிநடையாய் நடக்க லானான்
ஒருநிலையில் புத்திநிற்க வில்லை; எண்ணம்
ஒருநொடியும் மௌனமாக இல்லை; தாபம்
பெருமணலாய் அவனுள்ளே விரிய; தானே
சிறுகாசாய் அதில்தொலைத்து விட்டான்; போரில்
பெருயானை எலாம்வீழ்த்தும் வீரன் பாவம்
மனயானை அடக்கமுடி யாமல் தோற்றான்
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மாங்கனி - பாவம் ஏறு
« Reply #47 on: September 21, 2012, 03:09:31 PM »
Quote
ஒருநொடியும் மௌனமாக இல்லை; தாபம்
பெருமணலாய் அவனுள்ளே விரிய; தானே
சிறுகாசாய் அதில்தொலைத்து விட்டான்; போரில்
பெருயானை எலாம்வீழ்த்தும் வீரன் பாவம்
மனயானை அடக்கமுடி யாமல் தோற்றான்

எந்த பெரிய வல்ல வீரனும் இந்த வியாதி வந்துவிடால் இப்டித்தான் போலும் ... ஹஹா .. அருமை ஆதி 
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
நெஞ்சம் தெளிந்தான் ஏறு

நிமிர்ந்துநடக் கும்சேரன்
நினைவுநோவ முதன்முதலில்
நிலைசாய்ந்த மரம்போல
தலைசாய்ந்து நடந்தான்..

சிம்மம் போன்ற வீரன்
விம்ம தயரானான்

கூர்வேல் கொண்டு
குற்றினாலும் வேலேயுடையும்
அம்மிப்போற் தின்மார்ப்பு அமைந்தவன்
குண்டூசி எறிந்தாலே
குலைந்திடும் அளவிற்கு
மனவலி குன்றியிருந்த போதில்

கூர்வேலோடு வந்தொருவன்
குனிந்து வணங்கி "தளபதி
தார்வேந்தன் தன்மனைக்கு
தங்களை அழைக்கின்றான்"
என்று தகவல் சொன்னான்

"இம்"மென்று சொன்னான் எனினும்
"உம்"மென்றே இருந்தான் ஏறு

அடர்ந்த மௌனம் உடைய
அதிரும் குரலால் சேவகன்
"அரசன் உம்மை
அழைக்கிறான்" என்றான்

ஆழ்ந்த உறக்கதில்
அரண்டு எழுந்தவன் போல்
எதிர் நின்றவனைப் பார்த்து
விதிர்விதிர்க்கும் இதழ்களால்
"வருகிறேனென சொல்" என்றான்

விடைபெற்றான் சேவகன்
உடைப்பட்ட நெஞ்சொடு
நடையிட்டான் தளபதி
அவனை கவனியாமல்..

கொடியிடையாள் வார்த்தை
இடிப்படையால் தன்னை
தாக்கியதில் தப்பில்லை
நோக்கத்தையும் உண்ட
ஏக்கத்தையும் சொல்ல
சென்றநேர முமிடமும்
நன்றில்லை என்பதனால்
நன்மனதின் எண்ணத்தையும்
நஞ்சென்று எண்ணிவிட்டள்..

தவநிலையே பூண்டாலும்
சரசத்துக் கேயழைக்கும்
அவலநிலை அவள்நிலை
துவன்ட‌மன துயரைதானே
துவட்டிக் கொண்டான்
சமாதானம் ஆனான்..

தொடாமல் பேசியிருந்தால்
சுடாமல் பேசியிருப்பாள்
கெடாமல் இருந்திருக்கும்
கௌரவமென்று காற்று
உலவும் சருகாக
புலம்பிக் கொண்டான்..

ஆறாத ரணம்தான்
ஆனாலும் அவளுகாய்
ஆற்றிக் கொண்டான்
அவள்தானே பேசினாலென்று
தேற்றிக் கொண்டான்

கொஞ்சம் தெளிந்ததும்
நெஞ்சம் இளகியது
அஞ்சுக நினைவால்
அயர்ச்சியை துடைத்தான்

வாமனை யென்ற
கோமகம் நினைவுவர‌
கோமனை நோக்கி
மாமறன் ஏகினான்..
அன்புடன் ஆதி

Offline Anu

Re: மாங்கனி - பாவம் ஏறு
« Reply #49 on: September 25, 2012, 12:18:20 PM »
இப்டிதான் சமயம் அறியாமல் இந்த பசங்க பேசப்போய் ... திட்டு வாங்குறதே பொழப்ப போச்சு ... இனிக்கு நேற்று இல்ல அன்னிக்கும் இதுதான் வழக்கம் போல .. ஆதி தங்கை கவி கையாள்கை நெறியோடு அருமையாய் உள்ளது ... நிச்சயமாக இந்த காவியத்தை உங்கள் பெயரில் நூலாக வெளியிட்டால் என்ன
romba nalla iruku aadhi
en vendukolum idhu thaan aadhi :)
ippadivum kavithai ezhuda mudiyumaanu thonudhu..
kavithaiya ezhudaravanagluku  ookkuvipaagavum
padikiravangalukum nal anbalippagavum irukum..
en vaazthukkal :)


Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: மாங்கனி - பாவம் ஏறு
« Reply #50 on: September 25, 2012, 12:35:57 PM »
உங்களை போல நல்ல வாசிப்பனுபவம் உள்ளவரிடம் இருந்து கிடைத்த இந்த வார்த்தைகள் மிக பெரிய அங்கீகாரம்

இந்த கவிதைகள் என் கவிதை திறமையை செம்மை படுத்திக் கொள்ள கூராக்கி கொள்ள நான் செய்யும் முயற்சி

மரபுப்பாக்கள் எழுதி பார்த்து வார்த்தைகளை கையாளும் நுணுக்கங்களை கற்று கொண்டிருக்கிறேன்

எவ்வளவோ பெரிய ஜாம்பவாங்கள் இருக்கிறார்கள் அவர்கள் முன் நானெல்லாம் சிறு தூசு அக்கா
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மாங்கனி - பாவம் ஏறு
« Reply #51 on: September 25, 2012, 01:26:59 PM »
Quote
ஆறாத ரணம்தான்
ஆனாலும் அவளுகாய்
ஆற்றிக் கொண்டான்
அவள்தானே பேசினாலென்று
தேற்றிக் கொண்டான்

இந்த பசங்களுக்கு ரோசமே வராதா .... எவ்ளோ திட்டினாலும் இபோ வரத்து செட் ஆனா வரும் .. ஹிஹி  அருமையான மனநிலை விளக்கம் ஆதி
                    

Offline Gotham

Re: மாங்கனி - பாவம் ஏறு
« Reply #52 on: September 25, 2012, 01:33:34 PM »
Mananilai villakkam alla. ithu thannilai vilakkam. G A. :D

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மாங்கனி - பாவம் ஏறு
« Reply #53 on: September 25, 2012, 02:07:37 PM »
ஒ அப்போ ஆதியும் காதலில் தொபுகடீரா  ;D ;D
« Last Edit: September 25, 2012, 02:09:53 PM by Global Angel »
                    

Offline Gotham

Re: மாங்கனி - பாவம் ஏறு
« Reply #54 on: September 25, 2012, 02:09:08 PM »
எனக்கு எதுவும் தெரியாது..  :P

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மாங்கனி - பாவம் ஏறு
« Reply #55 on: September 25, 2012, 02:11:01 PM »
கூட்டு களவாணிங்களா இருப்பாங்களோ மை லோர்ட் ::)
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: மாங்கனி - பாவம் ஏறு
« Reply #56 on: September 25, 2012, 02:12:28 PM »
G A, Gotham,

என்னை வச்சு காமிடி கீமிடி பண்ணலையே
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மாங்கனி - பாவம் ஏறு
« Reply #57 on: September 25, 2012, 02:18:22 PM »
கோல்மால் அசிஸ்டன்ட்  இதுதான்   G A கோதம் கு அர்த்தமா  ::) ::)
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
வெங்கனியாள் கனிந்தாள் செங்கனியாய்

தாபமகன் போனபின்பு
கோபமயில் படுகையிலே
தூபபுகை போல்மெல்ல அமர்ந்தாள் - தனை
தூக்கத்தில் எறிந்துவிட நினைந்தாள்..

தலையணையில் தலைசாய்த்தாள் தளிர்மங்கை
உலையிட்ட இறும்பாய்ச் சிவந்தகண்கள்
இளைப்பாற மெல்லிமைப்போர்த் தினாளெனினும்
அலகழிக்கும் எண்ணங்கள் தேங்கனியை
உறங்கவிட வில்லைஉள்ளம் வெதும்பினாள்
கரமிட்டு தன்காதல் சொன்னாலும்
தரம்கெட்டு நடக்காத அம்மகனை
சுரம்கெட்ட வார்த்தைகளால் தூற்றினோமே
வருந்தமுற்றாள் கருத்தெல்லாம் அவனையள்ளி
இருத்திவிட்டாள் தந்தவறை எண்ணியெண்ணி
இறுக்கமுற்றாள் நினைவலையை அவந்திசையில்
திருத்திவிட்டாள் காதல்தீ கொளுத்தவிட்டாள்..

கடைப்பால் உடைப்பெடுத்த மடைப்போல் பொங்க
இடைப்பால் ஈர்ப்புண்டோர் மத்தியில் காம
தடைப்போட்டு காதல்நி னைப்புக்கு என்பால்
விடைக்கேட்டு வந்தவரின் நெஞ்சம்புண் ணாக
நப்பளித்து பேசிவிட்டே னேநொந்து கொண்டாள்
தப்பாய் நம்மிடம் நடந்தி ருந்தாலும்
இப்பால் அதனையெவர் பெரிதாக நினைப்பார்
குப்பைப்பூ தானேவென் றிழித்துரைத் திருப்பார்
ஆனால் அந்தமகன் அறத்தோடு நின்றார்
தானாய் ஊறும்பால் கிண்ணத்தை மண்ணில்
வீணாய் தள்ளிவிட்டேன் தேடிவந்த வாழ்வை
நானே தவறவிட்டேன் வெங்கனியாள் கண்கள்
தழும்பினாள் இனியென்னை காண்பாரோ என்று
புலம்பினாள் சம்மதம் சொன்னாலும் கொள்வாரோ
குழம்பினாள் எவ்வாறு அவர்முன்போய் நிற்பேன்
கலங்கினாள் வெதும்பினாளே வேதனைநெஞ் சோடு..
« Last Edit: April 09, 2013, 02:17:26 PM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இந்த பொம்புளைன்களே இப்டிதான் ... கொள்ளுங்க எசமான் கொள்ளுங்க :D :D   கொல்லுங்க ... அருமை ஆதி அவசரத்தில் இப்படிதான் பெண்கள் வாயை விடுவார்கள் அப்புறம் உக்காந்து பொலம்புறதே பொழப்பா இருக்கும் அதுவும் அழகான பொண்ணுங்கண்ணா கேட்கவே வேண்டாம் .