ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 219
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/0Latest/OU/219.jpg)
இருள் நிறைந்ந சூழலிலே ..
பிறப்பெடுக்கும் ஓர் இனம்தான்!
இமை திறக்கும் போதினிலே ..
தன் நிலையை தான் மறந்தான்!
விழி கொண்டு காண்கின்ற..,
திசையாவும் பல நிறம்தான்!
பிரித்தறியும் மனிதர்க்கு .,
அத்திறனும் ஓர் வரம்தான்!
நிறம் பிரிக்கும் கதிரவன்தான்!!
அத்தனைக்கும் ஆதியாம்..
நிறம் பிரித்தல் நியாயமில்லை..
அவன் சொல்லும் நீதியாம்!
சுற்றுகின்ற பூமியை.
உற்று நீயும் பார்த்திடு..
கற்று தேர்ந்த நல்லோரின்..
கருத்தை கொஞ்சம் கேட்டிடு..
படைப்புகள் பலவான போதும்..
ஓர் அடைப்புக்குள் யாவரும் சமமே..
என்று நீ உணர்நதிட்டால் போதும்..
உயர்ந்திடும் மனிதத்தின் குணமே!!!
அன்பர்களுக்காக கருப்பன் பீன்....
[/size][/color]