இசை ஒன்று இசை மீட்டும் அழகை
இன்று நான் கண்டேன் ,
என்னவளின் குரல் கேட்டலே மயங்கி போவேன்
அவள்மீட்டும் இசைக்கு சொல்லவா வேண்டும்
எந்த கவிகனும் வாசிக்க முடியாத
இசை ஸ்வரங்களை ஒரு நொடி
பொழுதில் என்னவளின் பொன் கரங்களால்
இசை மீட்டுவாள்,
எத்தனை முறை பார்த்தாலும்
கேட்டாலும் சலிக்காத திரைப்படம்,
என்னவளின் அழகு கரங்கள்
கொண்டு மீட்டும் இசை ஸ்வரங்கள்,
அவளின் இசைகேட்டு
குயில்களும், குருவிகளும்
கூனிக்குறுகி தோற்றுப்போகும்,
அவள் மீட்டும் இசையின் அழகைபார்த்து ,
என்னவள் இசைமீட்டும் தருணம்
அவளருகில் நான் இல்லாத நேரம்
அவளின் மனதில் ஒரு சோகம் என்னவன்
அருகில் இல்லையே !
இசைக்கருவியுடன் தனிமையாய்
சூரியன் மறைந்து நிலவு வரும் நேரம்
அழகான மாலைபொழுது
கடற்கரை ஓரம் அமர்ந்து
இசை ஸ்வரங்களை மீட்ட ,
அவளின் அழகு கண்டு மயங்கிய நான்
என்னவளின் இசையை கேட்டதும்
அவளின் பாதங்களை தொட்ட கடல்நீரை போல
மாறி அவளின் பொன் பாதத்திற்கு
முத்தத்தால் நன்றி சொன்னேன் ,
நிலா போல அழகுகொண்ட
என்காதலியை பார்த்ததும்
வான் நிலாவும் விழித்துக் கொண்டது ,
நான் மட்டும் இன்னும் விழிக்கவில்லை
கண்ணே காத்திரு காலம் கனியட்டும்
உன்மனதளவில் வாழ்க்கை நடத்திய நான்
உன் இடது கைகொண்டு அழைத்து செல்வேன் !