கடை விழியில் விழுந்து கண் மடலில் தவழ்ந்து
கரு விழியில் நுழைந்து என் உயிரில் கலந்தாய்
வெந்த புண்ணில் மயிலிறகால் மை தடவி
நொந்த இதயமதை நேர் படுத்தி அரவணைத்து
என் சொந்த புத்தி தன்னை மழுங்கவைத்து
காதல் எனும் போர்வையால் போர்த்திட்டாய்
நாடு விட்டு நாடு சென்று நாலுகாசு சம்பாதிச்சு
திரும்பிவந்து திருமணத்தில் இணைவோம் என்றாயே
காத்திருந்து நாட்கள் புரையோடிப் போயின
காலங்கள் யாவும் வேரோடி விழுத்துவிட்டு
மாற்றான் முற்றத்தில் மலர்ந்த மல்லிகையானேன்
வேற்றான் உன்னை மனதில் சுமக்கிறேன்
தாலி என்னும் வேலிக்குள் தன்மயமாக்கினான் முறைமாமன்
பெண்ணை கட்டிக்கொடுத்தால் போதும் என்று என் வீடடார்
விதியை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று அபலை நான்
பெண்களின் மனங்கள் கற்பாறைகளா? கண்ணாடித் துண்டுகளா?
புரியாத சமுதாயமும் சம்பிரதாயங்களும்
ஊரை விட்டு எட்டொண்ணாத் தூரத்தில் போகிறேன்
உன்னைவிட்டு, மனதில் சுமந்து மட்டும் போகிறேன்
கொண்டவன்தான் இனி தஞ்சம் என்று போகிறேன்
வாய் வார்த்தைகளை அமுதம் என்று நம்பினேன்
பொய் வார்த்தைகளை உன்னுடன் விட்டு போகிறேன்
யாருக்கு யார் என யாரோ எழுதிவிடடான்
இனி நீ யாரோ ....நான் யாரோ....!!!