உயிர் தாக்க ஒருவன் ...அதை படம் பிடிக்க ஒருவன் !
உயிர் காக்க துடித்து ஏங்கும் கைகள் !...
காப்பாற்றும் எண்ணம் இல்லை இங்கு யாருக்கும் ...
மனிதம் இங்கு மரித்து போனதா ..
புனிதம் இன்று பொய்த்து போனதா ?
கொலையை கூட கூரூரமாய் படம் பிடிக்கும்
வேடிக்கை நாய்களே !இல்லை இல்லை !
நன்றி உள்ளவை அவை !
ஐந்தறிவு கொண்ட பிற விலங்குகளை
கொன்று தின்னும் கொடிய சிங்கம் , புலி கூட ...
சேற்றில் விழுந்த யானையையும் ..
ஆற்றில் விழுந்த கரடியையும்..
மலை விளிம்பில் மாட்டி கொண்ட குரங்கை ..
பள்ளத்தாக்கில் விழுந்த பன்றியை கூட
தன் இரை என்று எண்ணாது..
இரக்கமாக நடந்து கொள்ளும் !
ஆறறிவு என்று சொல்லி கொண்டு ...
இதயத்தை கழட்டி வைத்து விட்டு ..
கைகளை நீட்டி காப்பாற்றாமல் ..
உன் ஒளிப்பதிவு திறன்கு கை தட்டலை
எதிர் பார்க்கும் நீ ...ஒரு அரக்கன் !
கொலை வெறி கொண்டு துரத்தி ..
துப்பாக்கியோடு நிற்கும் இவனை கூட
மன்னித்து விடலாம் மனிதனாய் ...
ஆனால்...
காப்பாற்றும் திறம் இருந்தும் ..
மனித நேயம் இல்லாத உன்னை ...
மரணம் கூட மன்னிக்காது போ.!
இன்றும்கூட நியாயம் கேட்டு ..
தன்னை தீ இட்டு கொளுத்தி கொண்டு
வேதனையில் துடித்து அலறி ...
காப்பாற்றுங்கள் என்று கதறிய பெண்ணை
படம் பிடித்து காசு பார்க்கும் ..
கொடூர ஊடகங்களே !
மன நலம் பிறழ்ந்த மாக்களே ! உங்களுக்கு
கொரனவை விட மற்றும்
ஒருகொடிய நோயே தோன்றட்டும்!
மடியட்டும் ! மனித குலம் அழியட்டும் !
அப்பொழுதாவது புது உயிர்கள் தோன்றட்டும்
அங்கு ஜீவனும் மனிதமும் மலரட்டும் !