வீரமே ஜெயம்...
வீரனே,
வீசிடும் வில் அம்பும்,
ஏந்திடும் வாளும்
பல்லாயிரம் கதைகள் கூறும்
மக்கள் உன் மேல் வித்திட்ட
நம்பிக்கைதனை,,...
சினம் கொண்ட சிங்கத்தின்
கர்ச்சனைக்கு ..
மதம் கொண்ட யானைகளும்
சரணடைந்து விடுவது...
மாசற்ற வீரத்தின்
அடையாளமல்லவா,,
வனத்தின் ராஜாவென
பட்டம் சூடிட
வலிமையான உடலும்
நேர்கொண்ட பார்வையும்
காரணமல்லவா,,
போர்க்களத்தில்
போராளிகள் பல ஆயுதமேந்தி
ஆராவாரமாய் நகர்ந்தாலும்
துணிச்சலின் உச்சம்..
இலக்கின் மேல் உள்ள தப்பாக்குறி,
ஓர் போர் வீரனின் அடையாளமாய் திகழ்வதும்..
சிங்கத்தின் ஒப்புதலேயாம்..
புலவர்கள் பல புரட்சிகள் பாடினும்,
வரலாறாய் பொதிந்தது ..
போராட்டங்கள் பலதிற்கு முகம் கொடுத்திட்டவர்களான்..
சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிட
தன்னம்பிக்கையின்
தழம்பலிலாமையே காரணமாய்,,
கதிரவன் உதித்திட ..
கார் மேகம் தாழம் பாடிட...
தென்றல் பூவிதழ்தனைத் தூவிட...
வெற்றி மகுடம் சூடிட வா.....!!