பால்,
நன்னாரி சர்பத்
கடல் பாசி-
பஞ்சாபி மற்றும் வட இந்திய கடைகளில் கிடைக்கிறது. அதை கோந்த் கதிரா Edible Gum அல்லது CHINA GRASS என்றால் கிடைக்கும்
கடல்பாசியை தண்ணீரீல் சுமார் 12 மணிநேரம் ஊறவிடவேண்டும்.
இது தண்ணிரீல் ஊறி இதன் கொள்ளளவு பல மடங்கு பெருகி வெண்மையாக ஊறிய சவ்வரிசி போல் ஆகி விடும்.
இதை ஒருகரண்டி ஒரு கிளாசில் போட்டு, ஐஸ் போட்டு அதற்கு மேல் வேண்டிய அளவு நன்னாரி சர்பத் சேர்க்கவேண்டும்.
பிறகு ஐஸ் பால் கொண்டு கிளாசை நிறைத்துவிட வேண்டும்.
ஜிகர்தண்டா ரெடி.
இன்னும் கொஞ்சம் சுவை வேண்டுமென்றால் இதற்கு மேல் வெண்ணிலா ஐஸ்கீரிம் அல்லது 33% விப்பிங் கீரிம் சேர்க்கலாம்.