FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on February 05, 2023, 02:52:05 PM
-
நீரின்றி வரப்பும், வயலும் வாடுதே.
நிலத்தில் நீரே ஆதாரம் ஆதலால் ,
நீர் அதை நித்தம் வயல் தேடுதே.
விதைத்தவன் உள்ளம் இங்கு உருகுதே.
உழைப்பின் விளைச்சளை தேடுதே..
விதைத்தவன் விலைக்கு மதிப்பில்லை,
எவனோ! வைக்கும் விலையில் மனிதமே
இல்லை.
உழைப்பிற்கு ஊதியம் இங்கில்லை,
இருப்பினும் உழைப்பவன் உழைப்பதை
நிறுத்தவில்லை.
உழவனின் உள்ளம் அது நிறைவு பெற.
விதைத்தவன் உறங்கினாலும், விதைகள்
அது உறங்காதே.......
MN-AARON.......