பிரபஞ்சம் இதை சுற்றியே நம் வாழ்க்கை , ஆனால்
பிரபஞ்சம் என்பது பெண்மையை
குறியிடலாம், கடவுள் பிரபஞ்சத்தின் தாய்!
அவள் என்ற சொல்லை தாண்டி , வாழ்க்கை பயணத்தில் பல பரிமானங்களின் நம்முடன அவளே !
நம்மை பூமிக்கு அறிமுகப்படுத்தும் ஓர் அழகி அவளே !
குடும்பத்தின் ஆதாரம் தாய், நமது லட்சியமும் அவளே!
வேதங்களில் ஒரு கோட்பாட அமைத்தது ஒரு பெண் அவளே!
தனி தன்மைகளும் ஒவ்வொரு சமூகத்திற்கும், நாட்டிற்கும் ஒரு அடையாளம் அவளே!
இழப்புகளின் வலியோடு, இடை செருகும் பழிகளோடு , என்று நேர் நோக்கு பார்வையோடு அவளே !
பல வடிவமாக நம்மிடம் தோன்றி
ஒரு சேர நிற்பதுவும் அவளே !
பண் முகம் கொண்ட திறமைகள், தியாகங்கள் எல்லாம் அவளே!
உன் பாதை மீதான முட்களை கூட
பூவாக மாற்றுபவள் அவளே!
நீ போகாத இடம் கால் பதிக்காத தடம் எவ்வுலகிலும் இல்லை,
அவளே உன்னை இப்பிறவியில் காண கண்கோடி இல்லை!!
நீ மகள் தங்கை தாய் மனைவி தோழி முதியவள் என்று பல வார்த்தைக்குள் அடங்காத பிரபஞ்சத்தின் சக்தி அவளே!!
வேறென்று மண்ணைப் பிடித்து குடும்ப பாரம் வேலை பழு சுமக்க மட்டுமே அவளே!
பிற்போக்கு வாத ஏகாதிபத்தியின்
வித்துகளை கற்றுக் கொடுக்க
பாரதியாக பெரியாராக கண்ணதாசனாக காந்தியாக இருப்பதும் அவளே!
முகம் மாறும் நிறம் மாறும் மோகம் மாறும் ஆசை மாறும் ஆனால் அன்பிற்கும் உண்டோ அடைகும் தாழ் அவளே!
பெண்மை பற்றி ஓர் வரியில் எழுதி விடலாம் , ஒரு வரியில் எழுத அவள் வெறும் கவிதை இல்லை ஒரு மாகாவியத்தின் முத்து, என்றும் அலையாத அழிக்க முடியாத பிறப்பிடம் அவளே!
எதற்கும் யாருக்கும் எங்கும் அஞ்சோம் அவளே!
பெருமை கொள்கிறேன் மாதராய் பிறந்திடவே!!!!