அன்பே நீ ஒரு அழகிய பூந்தோட்டம்
உனதருகில் இருந்து உனை காக்கும்
தோட்டக்காரனாய் நான்..!
ஆருயிரே உன்னை நிழலாக
பின் தொடர விரும்பவில்லை
உன் கை கோர்த்து உன்னுடன்
சேர்ந்து வரவே விரும்புகிறேன்..!
இன்பமே, உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடிப்பொழுதும்..!
ஈடில்லா உனது புன்னகையில்
குறிஞ்சி பூக்களும் தோற்றிடுமே..!
உனதழகில் தொலைந்திடுவேன் என தெரிந்தும்
மீண்டும் தொலைந்திட எண்ணுகிறேன்..!
ஊன்றுகோலாய் நீ இருக்க அன்பே
உலகம் சுற்றுவேன் உன்னுடன்..!
எப்பொழுதும் நாம் இணைந்திருக்க
இறைவனிடம் வேண்டுவேனடி..!
ஏட்டில் எழுதப்படாத காவியத்தை
நம் வாழ்நாளில் படைப்போமடி..!
ஐம்பொன்களினால் செய்த சிற்பமடி
நீ எனக்கு..!
ஒன்றல்ல இரண்டல்ல அன்பே உன்னுடன்
ஈரேழு ஜென்மங்கள் வாழ வேண்டுமடி..!
ஓராயிரம் ஆண்டுகளும் போதாதென
பிரம்மனிடம் சண்டையிட தோணுதடி..!
புரியாத காதலும் இல்லை
புரிந்தால் அதில் சுவராஸ்யம் இல்லை..!
புரியாத புதிராக என்றும் புதியவளாய் நீ எனக்கு
புரிந்தும் புரியாமலும் என்றும் நான் உனக்கு..!