Author Topic: வானம்  (Read 856 times)

Offline JS

வானம்
« on: August 03, 2011, 11:41:32 AM »

பாற்கடலின் அம்சம் போல,
சுற்றித் திரியும் திமிங்கலமாய்
உன் அங்கங்கள் இருக்க,
போதை தரும் நெருப்பாய்
விண்மீன்கள் படர,
எழில் கொஞ்சும் சாரலாய்
உன் தேகம் அமைய,
உன் விலை என்ன அழகே !
தேடி வரும் காற்று
உன்னை அலைகழிக்க,
புகை வண்ணமாய் நிற்கிறாய்...


மொட்டு அவிழ்ந்த மலர் போல,
விரிந்து இருக்கிறாய்...
நீயே உலகம் என்று
சுற்றி வரும் நிலவு,
விடிந்தால் வெள்ளிச்சம்
உன் சொந்தம் என்பதை
அறியாதோ...!!
அழகிய விண்கலன்கள்
உன்னில் பாய
நீ அதை ஏற்பாயோ !!...


வானமே...
நீ ஒரு வெள்ளி பரிசு
பறந்த வெளியில் எங்களை
ஆட்டுவிக்கும் உண்மை பரிசு
கதிரவனின் சாயலில்
உன் மஞ்சள் முகம்
வெண்பனித் தூரலில்
அது போதை தரும்
பறவைகள் பறக்கையில்
நீ ஒரு வெள்ளி ரதம்
மொத்தத்தில் நீ ஒரு அழகு வலம்...!!!
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வானம்
« Reply #1 on: August 03, 2011, 02:43:46 PM »
iraivanum srusdiyile andam oru alaguthaan....  nalla kavithai ;)