இன்று வானில் புளூ மூன் அரிய காட்சி
புதுடில்லி : ஒரே மாதத்தில் இரண்டு முழுநிலவு (பெளர்ணமி) தோன்றும் நிகழ்வு, இந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளது. ஆண்டின் ஒவ்வொரு மாதமும் ஒரு பெளர்ணமி மற்றும் ஒரு அமாவசை வரும். ஆனால், இந்தாண்டின் ஆகஸ்டு மாதத்தில், 2 பெளர்ணமிகள் மற்றும் 2 அமாவசைகள் வருகின்றன. இன்று இம்மாதத்தின் இரண்டாவது முழுநிலவு (பெளர்ணமி) தினம் ஆகும். இந்த முழுநிலவை, அறிவியல் அறிஞர்கள் புளூ மூன் என்று பெயரிட்டுள்ளனர். இதேபோன்றதொரு நிகழ்வு, அடுத்து 2015ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி நிகழ உள்ளதாக அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.