ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 135
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/135.jpg)
நான் நானாகவே வாழ ஆசை
இந்த சமூகத்தில் எனக்கு
மகள், சகோதரி, தாய், மனைவி
மருமகள், மங்கை, மடந்தை
என்று எனக்கு பல நிலைகள்
நிலா, பூ, மேகம்
மின்னல், மயில்
மான், பட்டாம்பூச்சி
என்று பல உவமை பெயர்கள்
பள்ளியில், கல்லூரியில்
பேருந்தில், பணியிடத்தில்
வீட்டில், நாட்டில், பொதுஇடத்தி
நான் நானாகவே வாழ ஆசை
தாய்நாடு, தாய்மொழி
நதி, தெய்வம், குலவிளக்கு
குத்துவிளக்கு என்று
பலரூபங்களில் போற்றப்படும் நான்
இது என்உயிர், என்உடல்
என்உணர்வு, என்வாழ்வு
தேகம்தாண்டி அதன்உள்ளே
எனக்கென்று ஒரு மனமுண்டு
மாணமுண்டு
உயிருடன்கூடிய உணர்வுண்டு
கயவனே என்னையும்
உன்னைப்போலவே சகமனுசியாய் வாழவிடு
பெண் என்பவள் போகப்பொருள் இல்லை
என்பதை ஆண்கள் உணரும்வரை
விடியல் தொலைதூரமே.
[/size][/color]
credit goes to gaby and niru