Author Topic: வாழையின் மருத்துவ குணங்களும் பயன்களும்....  (Read 670 times)

Offline kanmani

வணக்கம் நண்பர்களே..!

மனித வாழ்வில் இன்றியமையாத ஒரு அங்கமாகவே இருந்துவருகிறது வாழை. வாழைமரத்தில் அனைத்துப் பாகங்களும் பயன்படுகிறது என்பதை ஆதிநாள் முதலே மனிதன் கண்டறிந்துகொண்டான். அதனால்தான் எந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருந்தாலும் வாழைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். மணப்பந்தலில் வாழை, மரண வாசலிலும் வாழை.. என ஒவ்வொரு நல்லது கெட்டதிற்கும் வாழையைப் பயன்படுத்துவதன் மூலம் வாழையின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம். இத்தகைய வாழை மரத்தின் பாகங்கள் நமக்கு எவ்வாறெல்லாம் பயன்படுகிறது? அதன் மருத்துவ குணங்கள் என்னென்ன?
Medicinal properties of banana
Medicinal properties of banana

வாழை இலையில் சாப்பிடுவது நல்லதா? இது என்னங்க கேள்வி... எல்லா வீட்டு விஷேசங்களுக்கும், பொது விழாக்களுக்கும் வாழை இலைதானே பயன்படுத்துகிறோம் என்கிறீர்களா? நீங்கள் நினைப்பதும் சரிதான்.

இன்றையச் சூழலில் வாழையிலைச் சாப்பாடு என்பது மிகவும் அருகிவிட்டது. ரெடிமேடாக தயாராகிய பிளாஸ்டிக் தட்டுகள்,பிளாஸ்டிக் டம்ளர் போன்றவையே பல நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஆரோக்கிய கேட்டை விளைவிக்கும். வாழையின் மகத்துவத்தை கொஞ்சம் பார்ப்போமே..

வாழை இலையின் மருத்துவ குணங்கள்:
(The medicinal properties of banana leaf)
banana tree
வாழை மரம்
வாழைமரத்தின் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. அதிலும் இலையின் பங்கு மகத்தானது. வாழையிலையில் சாப்பிடுவதால் முகம் பொலிவு பெறும். வாழையின் மற்றப் பகுதிகள் அனைத்தும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பழம், வாழைப்பூ ஆகியவற்றை உடலின் உட்புறம் மருந்தாக பயன்படுத்திறோம். உடலின் வெளிப்புறத்தில் மருந்தாக பயன்படுவது இந்த வாழை இலை.

தீக்காயம் குணமாக:

வாழை இலை சருமத்தில் ஏற்படும் பல காயங்கள் தீக்காயங்கள் உட்பட குணமாகப் பயன்படுகிறது.

தீக்காயம், வெந்நீர்பட்டு ஏற்பட்ட காயம், கொதித்த சூடான எண்ணைய் பட்ட காயம் போன்றவற்றிற்கு வாழையின் குருத்து இலையை எடுத்து காயத்தின் மீது சுற்றி குருத்து இலையை கட்டாக போடலாம்.

மேலும் தீக்காயங்கள், சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்களை வாழையிலையில் தேன் தடவி படுக்க வைக்க வேண்டும். இவ்வாறு தினமும் ஒரு சில மணிநேரம் வாழையிலையில் தேன் தடவி படுக்க வைப்பதன் மூலம் விரைவாக தீக்காயங்களிலிருந்து குணம்பெறலாம்.

வாழை வேரின் பயன்:
(Use of banana roots:)
குடற்புழுக்கள், நீரிழிவு, அமில நோய், தொழுநோய், இரத்த சோகை போன்ற நோய்களை வாழையின் வேர் குணமாக்குகிறது. இதற்கு வாழையின் வேரை எடுத்து நெருப்பில் சுட்டு வரும் சாம்பலை தேனுடன் குழைத்து சாப்பிட மேற்கண்ட நோய்கள் குணமாகும்.

வாழைப்பழத்தின் பயன்:
(Use of banana fruit)
நேந்திரம் வாழைப்பழத்துடன் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து பழத்துடன் குழைத்து சாப்பிட்டு வர கடுமையான இருமல் மட்டுப்படும்.

மன அழுத்தத்தைப் போக்க:
(To get rid of stress )
மன அழுத்தத்தைப் போக்க வாழையிலையில் ஐஸ் கட்டிகள் வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.

குழந்தைகளின் அரிப்பு நோயைக் குணப்படுத்த:
(The erosion of curing children)
குழந்தைகளுக்கு டயாஃபர் போன்றவை அணிவதால் ஏற்படும் அரிப்புகளைப் போக்கவும், கொசுக்கடியிலிருந்து காக்கவும் வாழை இலையை முக்கிய மூலப்பொருளாக்க் கொண்டு தயாரிக்கப்படும் கிரீம்கள் உதவும். இவற்றை வீட்டிலும் தயாரிக்கலாம். வாலையிலையுடன், ஆலிவ் எண்ணை, தேன்மெழுகு இவற்றைக் கலந்து கீரிம்போல செய்து பயன்படுத்தலாம்.

அழகுப் பொருட்களில் வாழை:
(Banana in the use of cosmetic products)
வாழை இலையில் கிருமி நாசினி இருப்பதால் இவை, விஷ ஜந்துக்கள் கடித்தல், தேனீக்கடி, சருமத்தில் ஏற்படும் அரிப்புகள் ஆகியவற்றிற்கு ஏற்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. அழகுப் பொருட்களிப் பயன்படுத்தப்படும் Allantoin என்னும் பொருள் வாழையிலிருந்தே எடுக்கப்படுகிறது.

தோல்நோய் நீங்க:
(To remove the skin disease:)
தோலில் ஏற்படும் வெடிப்புகள் போன்ற தோல் பிரச்னைகள், பொடுகுத் தொல்லை, சிரங்கு, சொறி ஆகியவற்றிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்ய:
(To correct abdominal problems)
அஜீரணக் கோளாறுகளை வாழைப்பழம் சரிசெய்கிறது.
தேனுடன் வாழைப்பழம் கலந்து இருவேளை சாப்பிட்டு வர அஜீரணக்கோளாறுகள் நீங்கும்.

மூலநோய் குணமாக:
(To cure piles )
அரைக்கப் தயிருடன், ஒரு டம்ளர் இளநீர், ஒரு டீஸ்பூன் தேன், இவற்றுடன் வாழைப்பழத்தையும் பிசைந்து இருவேளை சாப்பிட்டு வர மூல நோய் மற்றும் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.


வாழை - சில சுவராஷ்யமான தகவல்கள்:
(Special news for banana tree)

இந்தியாவில்தான் வாழைப்பழம் உற்பத்தி அதிகம்.

வருடத்திற்கு மூன்று லட்சம் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆசிரியாவில் தோன்றிய வாழை, மற்ற வெப்ப மண்டல நாடுகளான ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் பரவியிருக்கிறது.

வாழைமரம் எனச் சொல்வதே தவறு. மரத்திற்குரிய குணங்களில் எதுவும் அதில் இல்லை.. அதாவது கிளைகள், கடினமான தண்டு, கடினமான வேர்கள் இவை எவையும் இதில் காணப்படுவதில்லை.. எனவே இது மரவகையைச் சேர்ந்தது அல்லது. இது ஒரு தாவரம்.

வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன்படும். எனவே இது ஒரு பூரண மருத்துவ குணம் கொண்ட தாவரமாகும்.

வாழை நார் கொண்டு பட்டுப்போன்ற மிருதுவான துணிகள் நெய்யப்படுகின்றன. ஜப்பானின் பாரம்பரிய ஆடைத் தயாரிப்பில் இது பயன்படுகிறது.

வாழை அனைத்துவித்திலும் பயனுள்ளதாக இருக்கிறது..அதேபோல ஒரு முறை வாழைக் குலைத்தள்ளிய பிறகு இறந்துவிடுகிறது.. ஆனால் அதன் சந்ததிகள் வாழைமரம் கூடவே தோன்றிவிடுவதால் வாழை ஓரிடத்தில் தன்னுடைய சந்ததிகளை விட்டுச்செல்லும். எனவேதான் பெரியோர்கள் வாழ்த்தும்போது "வாழையடி வாழையாக வாழ்வாயாக" என வாழ்த்துவர்.