FTC Forum
Special Category => Poll => Topic started by: benser creation on February 07, 2012, 03:06:14 AM
-
vivatha kalathil theeerppu valanguvadhu avasiyama..???avasiyam illaiya..???
-
விவாத களத்தில் எல்லோருடைய விவாதங்களின் மூலம் அதை வாசிப்பவர்களே நீதிபதியாக அவரவர் மனதிற்கு எது சரி என்று எடுத்துகொள்ள ஏதுவாக அமையும். விவாதகளத்தில் தீர்ப்பு என்பது அவசியமில்லாத ஒன்று என்பது எனது கருத்து.யார் அவரவர் பங்குக்கு நல்ல கருத்துக்களை எடுத்து வைக்கிறார் என்பதே முக்கியம்.
-
நண்பர் பென்செர் அவர்களே இந்த பொது மன்றத்தில் மிக முக்கிய நபர் என்ற அடிப்படையில் ''விவாதம்'' பற்றி உங்களுக்கு விளக்க கடமை பட்டுள்ளேன்!
முதலில் நீங்கள் விவாதத்திற்கும் பட்டிமன்றத்துக்கும் உள்ள வேறுபாடு மற்றும் வரைவிலக்கணத்தை அறிந்து கொள்ளுங்கள்.
பட்டிமன்றம்:
பட்டிமன்றம் என்பது இரு தரப்பினர் ஒரு நடுவரை வைத்து ஒரு தலைப்பில் விவாத்தித்து அதிலுள்ள நிறை குறைகளை நடுவர் முன் எடுத்து சொல்லி இறுதியில் ஒரு நீதியான தீர்ப்பை நடுவர் தருவது பட்டிமன்றத்தின் வரைவிலக்கணம் ஆகும்.
விவாதம்:
விவாதம் என்பது மக்கள் முன்னிலையில் இரு தரப்பினர் ஒரு தலைப்பில் அதில் உள்ள நிறை குறைகளை எடுத்து சொல்வதும். இதன் தீர்ப்பை விவாதத்தை பார்வையிடும் மக்கள் (பொது மன்றத்தில் வாசகர்கள்) எது நேர்மையான நடுநிலையான வாதம் என்பதை விவாதத்தின் போக்கையும் சுட்டிக்காட்டப்படும் ஆதாரங்களின் அடிப்படையிலும் அவர்களே நல்ல ஒரு தீர்ப்பை தனக்குத்தானே எடுத்து கொள்வது விவாதத்தின் வரைவிலக்கணம் ஆகும்.
வேறுபாடு:
இங்கு நீங்கள் விவாதத்திற்கும் பட்டிமன்றத்துக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் பென்செர். இங்கு நடைபெறுவது விவாதம் பட்டிமன்றம் அல்ல. இதற்க்கு வாசகர்கள் தான் விவாதத்தின் போக்கையும் அடிப்படை ஆதரங்களையும் நேர்மையான வாதத்தையும் வைத்து தங்களுக்குள் ஒரு தீர்ப்பை கொடுத்துகொள்ள வேண்டும். இங்கு தீர்ப்பு பகிரங்கமாக வழங்கப்பட மாட்டாது. அப்படி வழங்கப்பட்டால் அது விவாதம் அல்ல பட்டிமன்றம். இங்கு நடைபெறுவது விவாதம் மட்டுமே.
நண்பர் பென்செர் அவர்களே நமக்கு என்றாற்போல் வரைவிலக்கணங்களை மாற்றிக்கொள்ள முடியாது. ஆகவே விவாதத்திற்கு தீர்ப்பு வழங்க வேண்டிய அவசியம் இல்லை நண்பரே.
நம் கருத்து சரியா தவறா என்பதை விவாதத்தின் போக்கில் எதிர் தரப்பினர் நம்மை விட சிறந்த வகையில் ஆதரங்களையும் கருத்துகளையும் எடுத்து சொன்னால் பொறாமைக்கு அப்பாற்பட்டு அதை எற்றுகொல்வது என்பது தான் நல்ல விவாதம் புரிபவரின் பண்பாகும். அது நமக்கு இருக்கிறதா என்பதை நாமே சுய பரிசோதனை செய்து கொள்வோம்!
-
Vanakkam bensar !
Nadandhadhu ennanu enakku theriyaadhu irundhum edhuvaa irundhaalum neee konjum porumaiyaai kaakanum bensar! Pesuvom vaadhippome vivaadhippome karuththuchamar kooda purivome karuththil mattum.podhuvil thanimanidha thaakudhal thavirpome ! Pirar purindha thavaraii naamum purivaanein. Thaazhmaiyaana veindukoal !
-
பென்செர் அவர்களே,
யூசுப் பிரசுரம் செய்தது உங்களுடைய சந்தேகத்துக்கான விளக்கமே தவிர வேறு இல்லை. இங்கே பொது மன்றத்தில் உங்களை இடித்துரைத்தோ , நக்கல் செய்தோ பிரசுரிக்கவில்லை. எளிமையான முறையில் விளக்கம் மட்டுமே கொடுத்திருந்தார். அதற்கு நீங்கள் பதிவு செய்த பதில் பதிவு ஆரோகியமனதல்ல. எனவே அதை நீக்கி உள்ளோம். அரட்டை அரங்கிலே எதுவும் கருத்து மோதல் என்றால் அதை இங்கே வந்து பதிவு செய்வது கூடாது. எதிர் காலத்தில் இது போன்ற பதிவுகள் அமையாவண்ணம் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்.
விவாத மேடையில் தீர்ப்பு அவசியமா இல்லையா என்று வாக்கெடுப்பும் நடத்தி இருந்தீர்கள். ஆனால் அதை நீக்காமல் விட்டு இருக்கலாம். யாரேனும் இது போன்ற வினா எழுப்பும் பொழுது அவர்களுடைய சந்தேகத்திற்கு பொது மன்ற உறுபினர்களின் இந்த வாக்கு பதிவு விடையாக அமைந்திருக்கும்.
-
forum nan remove pana solli msg paniten avanga pannala then inga na rply panama irundhatha chat la vadhu kindal panna enna artham adhai keka mattingala yarum enn niyayam enaku rply pana thonala nan pannala na vera nik la pona avarukku enna..?? pathil alikka mudiyamal vera nik la vandhu olinjukitu irukiya nala polapuda nu sonna kovam varatha..???epaum unga pakkame niyayam irukiratha katti kollukireergal
-
அரட்டை அரங்கத்தில் நடக்கும் விடயங்களுக்கு பொதுமன்றம் எப்படி பொறுப்பாகும். இங்கே என்ன பதிவு செய்யப்பட்டு இருக்கிறதோ அதற்கு மட்டுமே இங்கே பதிலளிக்க வேண்டும். அரட்டை அரங்கிலே நடந்த விடயம் என்றால் அங்கேயே பதில் சொல்லி இருக்கலாமே அவரிடம் ? இங்கே பொதுமன்ற உறுப்பினர்கள் இங்கே பதிவு செய்திருக்கும் பதிவுகளை மட்டுமே படித்து செயல்படுவார்கள் என்பதே உண்மை.இந்த விசயத்தில் மேலதிக விவாதம் அவசியமில்லை என கருதுகிறேன்.
-
idharkkum nan pathil alikkanumnu thaan inga sonnen ealrum pakattumnu inga nadakum nigalvai ange paasangu pannuvadhu thavarillayaa..??any way indha topic na remove pana virumburen
-
இது வாக்கெடுப்பு களம் . இங்கே வாக்கு பதிவுகள் மட்டுமே இருக்க வேண்டும். அல்லது அதை ஒட்டிய கருத்துக்கள் பதிவு செய்ய வேண்டும். வாக்கெடுப்பு உங்களுக்கு சாதகமாக அல்லது பாதகமாக இருந்தாலும் அவை நீக்கபடாமல் இருக்க வேண்டும். இப்பொழுது வாக்கு பதிவு செய்த பகுதி உங்களால் ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டது. அரட்டை அரங்கத்திலே நடந்த விடயங்களை இங்கே விவாதமாக தொடர்வது முறை அல்ல. எனவே இந்த தலைப்பில் மேலதிக பதிவுகள் செய்யாதவாறு இந்த தலைப்பை முடக்கி வைக்கிறேன்.