ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 150
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/150.png)
காதல் ...
வாழ்க்கை ஒரு மரதன் என்று சொல்லாமல் சொல்லுகிறது இந்த புகைப்படம் ...
காதலும் மரதன் போல தானே.. விளையாட்டாக போய்விட்டது இந்த சூழ்நிலையீல்..
காதலுக்காக உயிர் விட்ட காலம் போய் .. காதல் எனும் பேர் சூட்டி இனொரு உயிர் கொடுக்கும் காலம் வந்து விட்டது ...
மரத்தானில் வெற்றி தோல்வி இருக்கும் ... காதலிலும் வெற்றி தோல்வி இருக்கும் .. அதை வெற்றியாக பெயர்சூட்டுவது நம் கையீல் தானே உள்ளது ..
மரத்தானில் வெற்றிக்கு பின் மகிழ்ச்சியும் தோல்விக்கு பின் கண்ணீரும் தான் அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை காண்கிறோம் ...
காதலில் வெற்றிக்கு பின் கண்ணீரும் .. தோல்விக்கு பின் மகிழ்ச்சியும் .. தானே மிஞ்சுகிறது இவுலகில்
...காதல் புனிதமானது ... என் வாழ்நாள் முழுவதும் உன் கைகளை கோர்த்து என் மூச்சி நிற்கும் வரை உன் வாழ்வில் பயணிக்க வேண்டும் ...
என்று முன்னோர்கள் காதலித்தார்கள் ...
நீ இல்லை என்றால் நான் மரணித்து விடுவேன் என்று சொல்லுவதும் அவள் தானே .. அவனை விட்டு சென்று வேறு ஒருவன் கையை பிடிப்பதும் அவள் தானே ..
எதையும் எதிர் பார்க்காமல் காதலித்த பாவத்திற்கு பரிசாக கிடைத்தது மது சூது போதை ... இதை தானே இவுலகில் காண்கிறோம் ...காதலும் மரதன் போல தான் ஒவொருவர் வாழ்க்கையிலும் ஓடி கொண்டே போகிறது தடைகள் இன்றி ..
எதிர் பாராமல் காதலிக்கும் ஒவொருவர் வாழ்க்கையிலும் விளையாடி தான் பார்க்கிறது காதல் ...
இந்த மரதன் விளையாட்டு காதல் எப்பொழுது முடிவுக்கு வரும் ... ஆண் மகனின் வாழ்க்கை அழிந்த பிறகா?
*`~•°ஜெஸினா°•~`*