ஜோக்கர் அண்ணா வணக்கம் ...
உருக வைக்கும் கவிதை !!!
''பிரிவு '' வாழ்வில் என்றும்
நிரந்தரமான ஒன்று !
உடமைகள் உணர்வுகள்
உறவுகள் இறுதியாக
உயிரும் என்றாவது ஒருநாள்
தேகத்தை விட்டு பிரிந்துவிடும் !!
வரிகள் ஒருவித வலியைச்
சுமந்து செல்கின்றது !!
''முடிவிலா பாதை என நினைக்கையில்
பாதையின் முடிவில் தென்பட்ட மதில்சுவர்
பிரிவு என்பது யாராலும்
மறுக்கமுடியாத வலி ...
இந்த பிரிவுக்கு தான்
என் மேல் எத்தனை
பிரியம்..''
வாழ்வில் எதுவும் எவரும்
நிரந்தரமில்லை ..இதுவே நிதர்சனம் !!!
வாழ்த்துக்கள் அண்ணா !!
தொடரட்டும் கவிப்பயணம் !!!