FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 14, 2012, 05:35:48 PM

Title: நன்றியுரை !
Post by: aasaiajiith on March 14, 2012, 05:35:48 PM
விரும்பியோ ,வேண்டுமென்றோ ,விழுந்ததில்லை 
எதிர்பாராத இந்த சிறு இடைவேளை

சிறிதானதுதான் என்றாலும் இவ்விடைவேளை
கடந்து முடிந்ததுவரை  ஒரு கடும்வேளை

நேற்றுவரை நான் பதித்திடும் பதிப்பு முழுதும்
பொத்தாம் பொதுவானதே என்றிருந்தேன்

அடடா ! என் பதிப்பின் முழு மதிப்பை
உங்கள் பதிலால் இன்றுணர்ந்தேன்

அற்பனிவன் சொற்ப வரிகளுக்கு, பத்தியமாய்
நித்தியமாய், சிற்பங்களின்  பாராட்டும் சீராட்டுமா?

உயிர் சிற்பங்களே !

உங்கள் நிலை ஈதென முற்பமே அறிந்திருந்தால்
சத்தியமாய் அந்த  இடைவேளைக்கு ஒரு இடைவெளி  குறைத்திருப்பேன்  !

இச்சிறப்பை ,சிந்தித்தாலே சித்தமெல்லாம் நித்தம் சிணுங்கும்
சந்தித்தால் ???
சுத்தமாய் சத்தமே நின்றுவிடும் ! :-\
Title: Re: நன்றியுரை !
Post by: suthar on March 15, 2012, 01:03:45 AM
காதிருப்புக்காய்  காத்திருந்த
கண்கள் எல்லாம்
கவி புனைந்த கவியை
கண்டுவிட்ட மகிழ்ச்சியில்
திளைப்பதிர்க்குள்ளகவே
சிற்பங்களுக்கு நன்றியுரை அந்த 
சிற்பங்களை  செதுக்கிய
சிற்பியே.....
சித்தம் கலங்காதே
சிந்தனையில் உள்ள நம்மொழியை
கண்டுவிட்ட களிப்பில் வந்த
ஆனந்த துளிகள்  அந்த
ஆச்சர்ய துளிகள்......
Title: Re: நன்றியுரை !
Post by: RemO on March 21, 2012, 10:05:00 AM
ajith ini idaiveli vilama kavithai kodunga
nantriurai nalaruku

suthar neenga ungal karuthai sona kavithai kuda very nice
Title: Re: நன்றியுரை !
Post by: suthar on March 21, 2012, 09:41:07 PM
thanx remo...
aana oru vishayam ivanga ezhutharatha paatha nama zero nu nalla theriyuthu....
ajith, tamil, shruthi, angel ivanga kuda poti potu ezhutha mudila
athan forum onum post ila.....
Title: Re: நன்றியுரை !
Post by: RemO on March 22, 2012, 01:48:44 AM
suthar ithu than avaiyadakkama :S

neenga unga name ah miss panitinga machi