19.இரண்டாவது மனைவியும் இறந்து விட்டார்
இதை அறியாமல் நீங்கள் அவனுக்கு உங்கள் இஷ்டப்படி திருமணம் செய்து வைத்துவிட்டீர்கள். அது உங்கள் தவறு. இப்போ இரண்டாவது திருமணம் செய்து வைத்த அந்த பெண்ணும் இறந்து விடுவாள். எனவே இனிமேலாவது அம்மா அவனுடைய சொந்த வாழ்க்கையில் நீங்கள் தலையிடாதீர்கள். எந்த விஷயத்தையும் உங்கள் மகன் இஷ்டத்திற்கு விட்டு விடுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும். இதைகேட்ட சத்தியதாய்க்கு தான் மிக பெரிய தவறு செய்து விட்டோ ம் என்று நினைத்து மிகவும் வேதனைப்பட்டார். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் தன் மனதிற்குள்ளே வைத்து கொண்டார். பிறகு உடல் நலம் இல்லாமல் படுக்கையில் கிடக்கும் சதானந்தவதிக்கு தினமும் வீட்டிற்கு வந்து நோயை பார்த்து கவனித்துச்செல்லும்படி ஒரு நல்ல டாக்டரை அமைத்தார் எம்.ஜி.ஆர் அவர் தன் தன்னுடைய குடும்ப டாக்டர் B.R. சுப்பிரமணி (BRS) இவர் நிரந்தரமாக எம்.ஜி.ஆர் குடும்ப டாக்டராகிவிட்டார். 1950 முதல் 1976 வரை அவர் நடித்த படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது. எம்.ஜி.ஆர் என்ற பெயருடன் புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்ற பெயர்களும் மக்களால் சூட்டப்பட்டது.
இவருடைய மூத்த நடிகர்கள் ஆசான்கள், பாராட்டும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்து வந்தார். இதற்கு இடையில் தற்போது குடி இருக்கும் வீட்டை நமக்கு சொந்தமாக வாங்கனும் இதைபற்றி வீட்டுக்காரரிடம் பேசுங்கள் என்று எம்.ஜி.சி. அவர்களிடமும் தன் தாயாரிடமும் சொன்னார். அதன்படி அவர்களும் அதை பற்றி மிகவும் முயற்சி எடுத்துமிக குறைந்த விலைக்கு பேசி முடித்தார்கள். இந்த விஷயத்தை தன் அண்ணனிடம் சொல்லி மகனே நீ போய் வீட்டு ஓனரைப் பார்த்து பேசினால் இந்த வீடு நமக்கு சொந்தமாகி விடும். அதன்படி எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு நாள் சூட்டிங் இல்லாத நாள் அன்று வீட்டுக்காரர் வீட்டிற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் சென்றார். அங்கு அந்த நேரம் வீட்டில் வீட்டுக்காரரும் இருந்தார். அன்று ஞாயிற்றுக்கிழமை அவரிடம் நான் தான் எம்.ஜி.ஆர் தங்களிடம் ஒரு 5 நிமிடம் பேசனும் அடியேனுக்கு அனுமதி கிடைக்குமா என்றார். உடனே அவர் வாங்க, வாங்க 5 நிமிடம் என்ன 10 நிமிடமே பேசலாமே என்ன விஷயம் சொல்லுங்க எம்.ஜி.ஆர் அய்யா நான் பேசப்போவதை கேட்டு கோபப்படக்கூடாது (தவறாக நினைத்து) நாங்கள் குடி இருக்கும் தங்களுடைய வீட்டை விற்க போவதாக கேள்விபட்டோ ம். அப்படி அந்த வீட்டை விற்பதாக இருந்தால் அதை எங்களுக்கே விலைக்கு கொடுத்து உதவுங்கள் என்று மிக பணிவோடு கேட்டார். வீட்டுக்காரர் சற்று யோசனை செய்து விட்டு அதை நான் இப்போதைக்கு விற்பதாக இல்லை என்று அவர் சொன்னதும் உடனே எம்.ஜி.ஆர் அவர்கள் ரொம்ப நல்லது. வணக்கம் போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்ததும் அம்மாவும், அண்ணனும் மிக ஆவலோடு விவரத்தை கேட்டார்கள். எம்.ஜி.ஆர் விவரத்தை சொன்னார். கடவுள் செயல் நமக்கு இந்த வீடு கிடைக்கனும் என்றால் கண்டிப்பாக கிடைக்கும். அது போல் அந்த வீடு இவங்களுக்கே கிடைத்தது குறைந்த விலைக்கு நிறைந்த மனதோடு அந்த வீட்டுக்காரர் அட்வகேட் ஐயர் பெயர் ராமன் நல்ல குணமுள்ளவர். இந்தவீடு தான் எம்.ஜி.ஆர் அவர்களுடைய கடும் உழைப்பால் பெரும் முயற்சியால் முதல் முதலாக சொந்தமாக வாங்கப்பட்ட சொத்து.