வெளிச்சத்தை உள்வாங்கி.,
எம் மீது உமிழ்ந்திடும்!
திரன் கொண்ட திரவியமே!
தெவிட்டாத காவியமே!!
ஆதிசிவன் கையிலொரு,.
அரிதான ஞான பழம்.,
அதை தானும் கொள்ளத்தான்.,
முருகன் வந்தான் உலகை வலம்!
அவன் செயலை தன்னகத்தே.,
கொண்டதொரு அழகு நிலம்.,
ஆயுள் முழுதும் சுற்றி வர.,
பூமிதானே அதற்கு மூலம்!!
தொலைதூரம் வாழ்ந்திடும்.,
தொலைந்தாலும் தோன்றிடும்!
நில்லாமல் சுற்றிடும்.,
நம் மனதில் நீங்கா இடம் பெற்றிடும்!!
இரு மலைகள் இடைவளியில்..
இடமளிக்கும் மணல் வெளியில்..
நடைபயின்று நமதருகில்..
நடந்து வரும் நிலவொளியால்!
பேசுவதும் எம்மொழியோ..
மயங்கிடுதே நம் விழியோ!!
பிள்ளைக்கு சோறூட்ட.,
பிடித்தவளை பாராட்ட.,
வடை சுட்ட கதை பேசி.,
படுத்தவண்ணம் ரசித்திட.,
படைக்கப் பட்ட நிலவுதான்!!
பார்ப்பவர் மனமோ களவுதான்!!!
நிலவின் காதலன்!!! பீன்.......
[/font][/color][/size][/size]