இன்று வேலை பளு அதிகம்
மிகவும் சோர்ந்து போனேன்
நிற்க கூட திராணி இல்லாமல் போனது
கண்கள் சோர்வடைந்து இமைகள் கூட
தன் பணியை செய்ய மறுத்தது
உதடுகள் வறண்டு போனது
வார்த்தைகள் வர மறுத்தது
என்ன செய்வதென்றே புரியாத
நிலை
உன்னை பற்றிய நினைவுகளை
அசை போட்டமறு கணம்
ஆயிரம் வால்ட் மின்சாரம் பாய்ந்தது
புள்ளி மானாய் துள்ளி எழுந்தேன்
சிறகடிக்கும்
பட்டாம் பூச்சியாய்
சிறகை விரித்து
என் வேலைகளை தொடர்தேன்
உன்னை நினைத்தாலே
இப்படி ஒரு மாற்றம் என்றால்
நீ என் அருகில் இருந்து விட்டால்
பல ஆயிரம் பேரின்
வேலைகளை நானே செய்து
முடித்து விடுவேன்