பெண்ணும் பொன்னும் ஒன்றென்று
சொல்வதால் தானோ என்னவோ
பஸ்சிலும் நடைபாதையிலும்
ஆண்கள் பெண்களை
உரசிப் பார்க்கிறார்கள்
பெண்ணும் பொன்னும் ஒன்றென்று
சொல்வதால் தானோ என்னவோ
அடிக்கடி தீயிட்டு எரிக்கிறார்கள்
தரத்தை அறிய
பெண்ணும் பொன்னும் ஒன்றென்று
சொல்வதால் தானோ என்னவோ
பெண்களை
உணர்ச்சியில்லாத உணர்வில்லாத
சொந்த விருப்பு வெறுப்பு இல்லாத
ஒரு உலோகமாக நினைக்கிறார்கள்
சில ஆண்கள்