மனிதர்களில் முக்கால்வாசியினர் முரண்பாட்டினர்
பெயர் , பொருள் , குணாதிசயம் , எண்ணம் ,செயல்பாடு இவற்றில் ஒன்றிற்கொன்று நிச்சயம்
முரண்பட்டிருக்கும் முரண்பாட்டினர்
அம்முரண்பாட்டிற்கெல்லாம் முரண்பட்டு, முரண்பாட்டிற்கு முட்டுக்கட்டை இட்டு
முழுதாய் முழுமுழுதாய் முரண்பாட்டினை மூட்டைகட்டிய மதிப்பிற்குரியவள் நீ
ஆம்,அன்பான ஆசியும்,வாழ்த்தும் , பாராட்டும் வழங்குபவள் ஆம் நீ
பெயரின் பொருளுக்கு பெரும் பொருத்தமாய்
வார்த்தைக்கு வார்த்தை வாழ்த்திக்கொண்டுதான் வருகிறாய் .
போற்றுதலாய் பாராட்டை,ஆற்றிகொன்டுதான் வருகிறாய்
வாழ்த்து ,பாராட்டு பெயர்பொருத்தம் ,பொருள்பொருத்தம் எல்லாம் சரி
இருந்தும் மனதின் ஓரத்தில் ஒரு இனம்புரியா சிறு வருத்தம் !
பாராட்டு ,பட்டம் இவற்றிற்கு ஏற்புடையவனா ?
என்று எனக்கே தெளிவாய் தெரியாதபோதும்
கனிவாய் ,கரிசனமாய் "கவிஞரே " என்பவளே !
உன் தரிசனம் தந்ததில்லையே !