FTC Forum

Entertainment => Song Lyrics => Topic started by: Global Angel on January 19, 2012, 03:38:22 PM

Title: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 03:38:22 PM
படம்: சங்கர் குரு
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், ஜானகி

சின்ன சின்னப் பூவே
நீ கண்ணால் பாருப் போதும்
தொட்டுத் தொட்டுப் பேசு
என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கைதொட்டால்
காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூறும்
பாகற்காய் தேனூறும்

(சின்ன சின்னப் பூவே)

உலகத்தில் பூவெல்லாம் உன் போல அழகில்ல
நானும் உன் அம்மாவும் பண்ணாத தவமில்ல
தென்பாண்டி மன்னவனோ முழுகித்தான் முத்தெடுத்தான்
தேனே உன் அம்மாவோ முழுகாம முத்தெடுத்தா
கண்ணே தெய்வம் கண்டேன் உந்தன் கண்ணே சந்நிதி
உன் முத்தம் பட்ட எச்சில் பட்டா கொஞ்சம் நிம்மதி

(சின்ன சின்னப் பூவே)

பாப்பா நீ இல்லாம பசி தூக்கம் வாராது
உன் பேச்சைக் கேட்காம ஒரு நாளும் விடியாது
நீ உண்ணப் பால் கிண்ணம் போதாது பொன்மானே
நிலவென்னும் கிண்ணத்தை நான் கொண்டு வருவேனே
பூவும் பூவும் உன்னைப் பார்த்துப் பேசிக் கொண்டது
காட்டில் ஓடும் ஓடைக் கூட உன் பேர் சொன்னது

(சின்ன சின்னப் பூவே)

Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 03:39:38 PM
படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி  
 


தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

(தாலாட்டும் பூங்காற்று)

நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்

(தாலாட்டும் பூங்காற்று)

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா

(தாலாட்டும் பூங்காற்று)


 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 03:40:57 PM
படம் : உதயகீதம்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
இசை: இளையராஜா


தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ

(தேனே)

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

(தேனே)

பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பால் மனத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தால் வாசம் விட்டு போகுமா
ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை

(தேனே)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 03:42:05 PM

படம் : கிளி பேச்சு கேக்கவா
இசை: இளையராஜா
பாடியவர் : ஜானகி

அன்பே வா அருகிலே...
என் வாசல் வழியிலே...
உல்லாச மாளிகை ..மாளிகை..
இங்கே ஓர் தேவதை ...தேவதை..
நீதானே வேண்டும் என்று ஏங்கினேன்...
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்..
அன்பே வா அருகிலே...
என்வாசல் வழியிலே..


பொற்சதங்கை சத்தமிட...
சிற்பம் ஒன்று பக்கம்வர...
ஆசை தோன்றாதோ ....
விற்புருவம் அம்புவிட...
வட்ட நிலா கிட்டவர ..
ஆவல் தூண்டாதோ ...
வானம் நீங்கி வந்த...
மின்னற்கோலம் நானே,
அங்கம்யாவும் மின்னும்..
தங்கப்பாளம் தானே.
தினம்தினம் உனக்கென உருகிடும் என் இதயமே!


மந்திரமோ தந்திரமோ ..
அந்தரத்தில் வந்து நிற்கும்..
தேவி நான் தானே,
மன்னவனே உன்னுடைய ...
பொன்னுடலை பின்னிக்கொள்ளும்...
ஆவி நான் தானே,
என்னைச்சேர்ந்த பின்னால்..
எங்கே போகக்கூடும் ...
இங்கே வந்த ஜீவன்...
எந்தன் சொந்தம் ஆகும் ,
தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே! (அன்பேவா)



Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 03:43:35 PM
படம்: ஆனந்த கும்மி
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி


ஆனந்தக் கும்மியடி கும்மியடி
வானமெல்லாம் கேக்கட்டும்
இந்திரரும் சூரியரும் எட்டியெட்டிப் பாக்கட்டும்
தங்க ஜமுக்காளம் தரையெல்லாம் விரிச்சிருக்க
மதுர மல்லிகைப்பூ மண்டபத்தில் இறைச்சிருக்க
முத்துமனித் தோரணங்கள் வீதியெல்லாம் உயிர்த்திருக்க
அன்னங்களும் குடைப் பிடிக்கும் அலங்கார மேடையிலே
கல்யாணக் குயிலிரண்டு கச்சேரிப் பாடட்ட்டும்
கல்யாணக் குயிலிரண்டு கச்சேரிப் பாடட்ட்டும்

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஓ மைனா மைனா
தளிரிது மலருது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா

(ஒரு கிளி உருகுது)

நிலவெரியும் இரவுகளில் ஓ மைனா ஓ மைனா
மணல்வெளியில் சடுகுடுதான் ஓ மைனா ஓ மைனா
கிளிஞ்சல்களே உலையரிசி
இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஓ மைனா ஓ மைனா

(ஒரு கிளி உருகுது)

இலைகளிலும் கிளைகளிலும் ஓ மைனா ஓ மைனா
இரு குயில்கள் பெயரெழுதும் ஓ மைனா ஓ மைனா
வயல்வெளியில் பலக் கனவை
விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஓ மைனா ஓ மைனா

(ஒரு கிளி உருகுது)
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 03:44:32 PM
படம்: கோழி கூவுது
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கிருஷ்ண சந்தர், ஜானகி

பெண்: ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேற்று வரை நெனக்கலையே
ஆசை விதை மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே

ஆண்: ஏதோ மோகம் ஏதோ தாபம்
நேற்று வரை நெனக்கலையே
ஆசை விதை மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே

பெண்: தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு
தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு

ஆண்: பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு
பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காமதேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே

(ஏதோ மோகம்)

ஆண்: பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து

பெண்: அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
விடியச் சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது

(ஏதோ மோகம்)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 03:46:37 PM
திரைப்படம் : செண்பகமே செண்பகமே
பாடலைப்பாடியோர் : ஜானகி , மனோ
இசை : இளையராஜா


ஆண் :வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா நேசத்திலே
என் மனசை தச்சிப்புட்டா தச்சிப்புட்டா
பூவும் பூவும் ஒன்னு கலந்தது இப்போது
தேனும்பாலும் பொங்கி வழியுது இப்போது

பெண்: வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே என் மனசை தச்சதென்ன தச்சதென்ன



பெண்: பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே
வழிய மறந்த குயிலும் சேர்ந்தது ஆஆஆ

ஆண்: கோலம்போட்டு சாடை சொன்னது நானே
கோடு நமக்கு யாரு போட்டது..

பெண்: நெஞ்சுக்குள்ளே நெஞ்ச வச்சு உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்..

நெத்தியிலே பொட்டுவச்சு உங்களைத்தான் தொட்டுக்கிட்டேன்..

ஆண்: நானும் நீயும் ஒன்னாசேந்தா நாளும் நாளும் சந்தோஷம்..

பெண்: ராகம் தாளம் சேரும் நேரம் ஆனந்தம் பாடும் சங்கீதம்..

(வாசலிலே பூசணிப்பூ )



ஆண்: மீண்டும் மீண்டும் கூடி சேருது பொன்னிஆறு

மோகத்தோடு கூடி பாடுது ஆஆஅ

பெண்: கேட்டுகேட்டு கிறங்கத்தோணுது உங்க பாட்டு..

கேள்வி போல என்னை வாட்டுது

ஆண்: ஆத்து வெள்ளம் மேட்ட விட்டு

பள்ளத்துக்கு ஓடிவரும்

ஆசையிது தேடிக்கிட்டு ஆனந்தமாய் பாடிவரும்

பெண்: ஏதோ ஒன்னை சொல்லிச்சொல்லி

என்னை இப்ப கிள்ளாதே

பெண்: போதும் போதும் கண்ணால்

என்ன கட்டி இழுக்கற செண்பகமே!( வாசலிலே பூசணிப்பூ)



Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 03:47:59 PM
திரைப்படம் : தெய்வப்பிறவி
பாடலைப்பாடியவர்கள் : cs ஜெயராமன், ஜானகி
பாடலைஇயற்றியவர்: உடுமலை நாராயன கவி
இசையமைத்தவர் : ஆர். சுதர்சன்


ஆண் : அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
பெண் :ஆஆஆஅ
ஆண்: அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
அம்புவியின் மீது நாம்
அணி பெரும் ஓர் அங்கம்


இன்பம் தரும் தேன்நிலவு
இதற்குண்டோ ஆதங்கம்
ஏகாந்த வேளை வெக்கம் ஏனோ

வா என் பக்கம் ( ஏகாந்தா வேளை)

(அன்பாலே தேடிய)

உடல்நான் ஆ உரம் நீ -ம்ஹூம்..

உடல் நான் அதில் உளம் நீ
என உறவு கொண்டோம் நேர்மையால்
ஆஆஅ (உடல்நான்)
கடல்நிலவாய் காட்சியிலே கலந்து நின்றோம்
ப்ரேமையால்
இருவரும் : ஆஆஆஆஆ
குணம் நிறை மாற்றறியா பொன்னே
சொல் ஏன் ஜாலம்
போனால் வராது இது போல
காலம் இனி
ஆஆஆஅ(போனால் வராது)
( அன்பாலே தேடிய)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:32:51 PM
திரைப்படம்: சட்டம் ஒரு இருட்டறை
பாடலைப்பாடியவர்கள் : SNசுரேந்தர் , s.ஜானகி
இசையமைத்தவர்கள் : சங்கர் கணேஷ்



தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளைமையின் நினைவுகள் பறந்தது

ஹோ நெஞ்சமே உன்னிடம் இன்று தான் மாற்றமே
கல்லான நெஞ்சங்கள் கூட இளம் பெண்ணாலே பூவாக மாறும்
இனி நான் காணும் இன்பங்கள்
ஆறு போல ஓடவேண்டும்(தனிமையிலே )

என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே(2)
என் உள்ளப் பொன்வாசல் தேடி
இசை காற்றாக என்னோடு கூடி
புது ஊற்றாக இன்பங்கள்
ஊர வேண்டும் சேரவேண்டும்(தனிமையிலே )

ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே (2)
எண்ணாத இன்பங்கள் யாவும் இனி என்னாளும் உன்னோடு வாழும்
பனி நீராட்டும் இந்நேரம்
பாடவேண்டும் கூட வேண்டும்(தனிமையிலே)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:34:19 PM
படம்: வறுமையின் நிறம் சிவப்பு
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S. ஜானகி
வரிகள்: கண்ணதாசன்


தந்தன தத்தன தய்ய்ன தத்தன தனன தத்தன தான தய்யன தந்தானா
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
லலலலலல லலலலலல லாலலால லாலாலாலா லாலா
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி

தனனா.. சந்தங்கள்..
நனனா.. நீயானால்
ரீசரி.. சங்கீதம்
ஹ்ம்ஹ்ம்.. நானாவேன்
சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்
(சிப்பியிருக்குது..)

நனனானானா.. Come On say it once again..
நனனானானா .. சிரிக்கும் சொர்க்கம்
தனனானனானானா.. தங்கத்தட்டு எனக்கு மட்டும்
தானைதானைதானா.. தேவை பாவை பார்வை..
தத்தனதன்னா.. நினைக்க வைத்து
நனனானானா.. நெஞ்சில் நின்று நெருங்கி வந்து
நனனனானானா தனானா லலாலலா நனானா
Beautiful..
மயக்கம் தந்தது யாரு தமிழோ அமுதோ கவியோ
(சிப்பியிருக்குது..)

இப்போ பார்க்கலாம்..
தனனானா தனனானானா
ம்ம்.. மழையும் வெயிலும் என்ன
தன்னானா நானா நானா
உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன
தனனான தனனான தானா
அம்மாடியோவ்..
தனனான தனனான தானா
ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்
சபாஷ்..
கவிதை உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால் கவிஞர் இதயம் கெஞ்சும்
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
நானுரைத்தேன்..
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
நானுரைத்தேன்..
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:35:35 PM
படம்: தளபதி
பாடல்: வாலி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி இந்நாள் நல்ல தேதி

பெண்: என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண்: நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் தேகமே

(சுந்தரி கண்ணால்)

பெண்: வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா

ஆண்: வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்

பெண்: தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை

ஆண்: வானிலவை நீ கேளு கூறுமென் வேதனை

பெண்: எனைத்தான் அன்பே மறந்தாயோ

ஆண்: மறப்பேன் என்றே நினைத்தாயோ

(சுந்தரி கண்ணால்)

பெண்: சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்

ஆண்: மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்

பெண்: கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்

ஆண்: காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

பெண்: உடனே வந்தால் உயிர் வாழும்

ஆண்: வருவேன் அந்நாள் வரக் கூடும்

(சுந்தரி கண்ணால்)
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:36:28 PM
படம் : தர்மயுத்தம்
இசை: இளையராஜா
பாடல்: வல்லபன்
பாடியவர்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி

ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேளம் கொட்டி மேடை கட்டி
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம


காதல் நெஞ்சில்..ஹேஏஏஎ
மேள தாளம்..ஹோஓஒ (2)
காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா இனி உன் தோளிலே
படரும் கொடி நானே
பருவப் பூ தானே
பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ

(குங்கும தேரில்)

தேவை யாவும் ஹேஏஏஏ
தீர்ந்த பின்னும் ஹோஓஒ (2)
பூவை நெஞ்சில் நாணம் போராடும்

ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு
பருகக் கனிச்சாறு
தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்

(ஆகாய கங்கை)
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:37:45 PM
படம் : நான் அடிமை இல்லை
இசை : விஜய் ஆனந்த்
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஜானகி


ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது

..........ஒரு ஜீவன் தான்..........

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்
வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி
உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்

..........ஒரு ஜீவன் தான்..........

காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையோ
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
வளையோசைதான் நல்ல மணிமந்திரம்
நாந்தானைய்யா நீலாம்பரி
தாலாட்டவா நடுராத்திரி
சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்

..........ஒரு ஜீவன் தான்..........


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:38:44 PM

படம்: நிறம் மாறாத பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி


முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
(முதல்..)
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
(முதல்..)

சீதா என் கொடியே கண் பாரம்மா
ஆதரம் நீயில்லாமல் வேறேதம்மா
(சீதா..)
ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று
மோசம் செய்த துரோகியே
ஓஓஓ.. உன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே
அது யாரந்த பெண்
ஒரு நடிகையம்மா
அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு
(முதல்..)
(முதல்..)

ஜீனத் என் கனவில் வந்தால் உன் போலவே
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே..
(ஜீனத்..)
ஜீனத்தை போல் என்னை எண்ணி வந்து
பாட்டு பாடும் துரோகியே
ஐயய்யோ.. சும்மாதான் ஜாடை சொன்னேன்
கண்ணே கண்மணியே
என்னை போல் ஒரு பெண்
இந்த உலகில் இல்லை
ஒரு நடிகையை போல் என்னை பார்ப்பது தவறு.
(முதல்..)
(முதல்..)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:39:38 PM

படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி
பாடலாசிரியர்: வைரமுத்து


புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
(புத்தம்...)

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
(புத்தம்....)

வானில் தோன்றும் கோலம்
அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின்
சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது
வழிந்தோடுது சுவைகூடுது
(புத்தம்...)
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:40:28 PM
படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்: s.J.ஜானகி, மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர்: வைரமுத்து

பெண்: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோழில் துஞ்சியதோ...

[தங்கச் சங்கிலி...]

மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி

[தங்கச் சங்கிலி...]

ஆண்: காவல் நூறு மீறி
காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூ வேலைகள்
உன் மேனியில் பூஞ்சோலைகள்

பெண்: அந்திப் பூ விரியும்
அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கணவு கனியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்

ஆண்: [தங்கச் சங்கிலி...]

பெண்: ஆடும் பொம்மை மீது
ஜாடை சொன்ன மாது

ஆண்: லாலா லாலலாலா லால லால லாலா

பெண்: கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளின் நீராடினாள்

ஆண்: ராராரரா ராராரரா ராராரரா ராராரரா

அன்பே ஆடை கொடு
எனை அனுதினம் அள்ளி சூடிவிடு

பெண்: இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு

ஆண்: [தங்கச் சங்கிலி...]

பெண்: [மலர்மாலை...]

ஆண் & பெண்: [தங்கச் சங்கிலி...]




Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:41:15 PM
படம்: உயிரே உனக்காக
இசை: லஷ்மிகாந்த
பாடியவர்கள்: ஜானகி
பாடலாசிரியர்: வைரமுத்து


பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க (பன்னீரில்)
வசந்தம் வரும் காலம்
விழியில் வண்ணக் கோலம்
கூ.கு....குக்குக்கூ.
கூ.கு....குக்குக்கூ.
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே..
(பன்னீரில்)

நானுமோர் தென்றல் தான்
ஊரெல்லாம் சோலை தான்
எங்குமே ஓடுவேன்
நதியிலே நீந்துவேன்
மலர்களை ஏந்துவேன்
எண்ணம் போல் வாழுவேன்

தந்தனத் தான தன
தந்தனத் தானனா

இளமைக் காலம் மிக இனிமையானது
உலகம் யாவும் மிகப் புதுமையானது
(பன்னீரில்)

மாளிகைச் சிறையிலே
வாழ்ந்த நாள் வரையிலே
சுதந்திரம் இல்லையே
விடுதலை கிடைத்தது
வாசலும் திறந்தது
பறந்ததே கிள்ளையே

தந்தனத் தான தன
தந்தனத் தானனா,

நிலவும் நீரும் இந்த அழகுச் சோலையும்
எளிமையான அந்த இறைவன் ஆலயம் (பன்னீரில்)
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:42:03 PM
படம்: ரிக்ஷா மாமா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

எண்ணம் எனும் ஏட்டில்
நான் பாடும் பாட்டில்
நீ வாழ்கிறாய்..
நித்தம் வரும் ஊஞ்..

ஐயய்யே.. கொஞ்சம் இருங்க
கொஞ்சம் இருங்க..
என்னாங்க பாடுறீங்க?
அப்படியில்லை..
நான் பாடுறேன் பாருங்க..

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
இது அன்பின் வேதம்
அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காத்தே

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
ஆமா..
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
கரெக்ட்டு.. இது கரெக்ட்டு..

மாலை மழை மேகம் தன்னை மெதுவாய் அழைத்தேன்
துணை வர வேண்டுமென்று தூது சொல்லத்தான்
மூண்டு வரும் மோகம் தன்னை மடலாய் வரைந்தேன்
நினைவுகள் பூத்த வண்ணம் நானும் மெல்லத்தான்
ஓர் சோலை புஷ்பம்தான்
திரு கோயில் சிற்பம்தான்
(ஓர் சோலை..)
இதன் ராகம் தாளம் பாவம் அன்பை கூறும்
(வைகை நதியோரம்..)

யாரின் மனம் யாருக்கென்று இறைவன் வகுத்தான்
இரு மனம் சேர்வதிங்கு தேவன் சொல்லித்தான்
பூஜைக்கிது ஏற்றதென்று மலரை படைத்தான்
தலைவனும் மாலையென்று சூடிக்கொள்ளத்தான்
ஓர் நெஞ்சின் ராகம்தான்
விழி பாடும் நேரம்தான்
(ஓர் நெஞ்சின்..)
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காற்றே
(வைகை நதியோரம்..)
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:43:37 PM
திரைப்படம் : வெள்ளைரோஜா
இசை: இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பி. எஸ்.ஜானகி.


சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்
சோலைப்பூவில்)


சந்தனக்காடு நானுன் செந்தமிழேடு
மான் விழி மாது நீயோ மன்மதன் தூது

மேகத்துக்குள் மின்னல் போல நின்றாயே
மின்னல் தேடும் தாழம் பூவாய் நானும் வந்தேனே
தாகம் தீர்க்கும் தண்ணீர் போல நீயும் வந்தாயே
தாவிப்பாயும் மீனைப்போலே நானும் ஆனேனே

என்னில் இல்லா சொர்க்கம் தன்னை
உன்னில் இங்கு கண்டேனே
கள்ளில் இல்லா இன்பம் உந்தன்
சொல்லில் இங்கே கண்டேனே

லலலா லலலா லலலா லலலா
லலலலா-- (சோலைப்பூவில்)


செந்நிலம் மேலே தண்ணீர் சேர்ந்தது போலே
ஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் சொந்தம்
என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீ..ரா..டு

கங்கை வெள்ளம் வற்றும் போதும் காதல் வற்றாது
திங்கள் வானில் தேயும் போதும் சிந்தை தேயாது

மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும்
உன் மேல் அன்பும் மாறாது
உன்னை அன்றி தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது

லலலா லலலா லலலா லலலா
லலலா லலலா- (சோலைப்பூவில்)

புது நாணம் கொள்ளாமல் பப்பா
ஒரு வார்த்தை இல்லாமல் பப்பா
மலர் கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்

சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசைக்கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:44:36 PM
திரைப்படம் : கோடைமழை
பாடியவர் : ஜானகி
இசை: இளையராஜா


தேன் தூங்கும் பூவே
வாடாமல் வாழ்க
பால் வெண்ணிலாவே
தேயாமல் வாழ்க
இளமானே உன்னோடு
நிழல் போலே பின்னோடு
வருவேன் நானே
(தேன் தூங்கும் பூவே)

பாவேந்தர் பாடிய பாடல்
மகளே வார்த்தை தானோ
மூவேந்தர் மாளிகை தீபம்
மலரே உன் பார்வை தானோ (பாவேந்தர்)

நெஞ்சே பொன்னூஞ்சல் போலே
செல்வமே வந்து ஆடு
சேயும் தாயும் நாளெல்லாம்
சேர்ந்து வாழலாம் (தேன் தூங்கும் பூவே)

ஆகாயம் பூமி அனைத்தும்
நீயாகத் தோன்றுதம்மா
நான் காணும் கனவுகள் உன்னால்
நிறைவேறக்கூடுமம்மா
நீயே இங்கில்லையானால்
மண்ணில் நான் வாழ்வதேது
நேரம் காலம் மாறலாம்
நேசம் மாறுமோ
(தேன் தூங்கும் பூவே)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:45:42 PM
படம்: மலர்களே மலருங்கள்
பாடியவர்கள்: ஜெயசந்திரன், S ஜானகி
இசை: கங்கை அமரன்
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய்
நாண மேனியில்
கோலம் போடும் போது(இசைக்கவோ)

ராசலீலை வாசல் திறப்பாய் பூஜை நேரத்தில்
ராகதாள மேடை அழைப்பாய் பாதி ஜாமத்தில்
வீதிவலம் போகும் நாளிலே

தேவன் தோளிலே மலர்வேனே
நாதஸ்வரம் பாட சூழ்ந்து
நலம் காண வாழ்த்தவே தருவேனே
சிரிப்பில் புது ராகமாலிகை நீ

ரசிக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது ரசிக்கவோ ஓ



நிசநிசக பகபகரிச நிசநிசக
கமகமதமரி ரிககமரிநி
ரிரிநி ரிகரி கமக மதம மதநிரிச

பாதிமூடி ஜாதி மலர்போல் பார்வை ஏங்குதே
ராஜவீதி மார்பில் மலர்வேன் பாரிஜாதமாய்
போதும் இது காதல் போதையே
காணும் பூவையே போராடு
மீதி வரும் நாளில் நாமும்
திருநாளைக் காணவே நீ ஆடு
ரசிப்பில் ஒரு ராஜபல்லவன் நீ
(இசைக்கவோ )

Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:47:41 PM
படம் : தீபம்
இசை: இளையராஜா
பாடியவர்: K.J.ஜேசுதாஸ் ,S.ஜானகி
வரிகள்: புலமைபித்தன்  


பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே

(பூவிழி வாசலில் யாரடி…..)

அரும்பான காதல் பூவானது
அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
நெருங்கவும் மயங்கவும் ஓடுது
மோகம் வரும் ஒரு வேளையில்
நாணம் வரும் மறு வேளையில்
இரண்டும் போரடுதே
துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை

(பூவிழி வாசலில் யாரடி…..)

இள மாலைத்தென்றல் தாலாட்டுது
இளமையின் கனவுகள் ஆடுது
மலை வாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது
கார்மேகமோ குழலானது
ஊர்கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ
எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே

(பூவிழி வாசலில் யாரடி…..)

கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ
கலை இது அறிமுகம் வேண்டுமா
அசைந்தாடும் கூந்தல் நாமாகவோ
நவரச நினைவுகள் போதுமா
பூமேனியோ மலர் மாளிகை
பொன்மாலையில் ஒரு நாழிகை
நாளும் நான் ஆடவோ
அணைக்கும் துடிக்கும் சிலிர்க்கும் மேனி

(பூவிழி வாசலில் யாரடி…..)



 
 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:49:01 PM
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
திரைப்படம் : கிராமத்து அத்தியாயம்
இசை : இளையராஜா


ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது(2)
ஆடும் காத்துல கீத்துல
தாளம்போட்டு - ஆத்து மேட்டுல ஒரு பாட்டுகேக்குது
(ஆத்து மேட்டுல)

காட்டுல கட்டில் ஒன்னு போடவா
கையிலே கட்டிக்கொண்டு ஆடவா

ஏஹே என்ன ஆசை
ஏக்கம் வந்து பேச
கண்ணுக்குள்ள மோகம் தோணுது
கன்னிப்பொண்ண காணும் போது (ஆத்து மேட்டுல)

கேக்கவா ஒன்னே ஒன்னு கேக்கவா
சேர்க்கவா கையில் ஒன்ன சேர்க்கவா
ஊஹூம்மாட்டேன் மாட்டேன்
ஏதும் பேச மாட்டேன்

சொல்லச்சொல்ல வேகம் ஏறுது
தூக்கிக்கிட்டு போகப்போறேன் ( ஆத்து மேட்டுல)




Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:49:50 PM

திரைப்படம் : என் ஜீவன் பாடுது
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் , ஜானகி
இசை: இளையராஜா


கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச (கட்டி)

இந்த நேரம்
பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஆ ஆ


இந்த நேரம் பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஆ ஆ (கட்டி)


தனியா தவம் இருந்து இந்த ராசாத்தி கேட்டதென்ன
மனம் போல் வரம் கொடுத்து இந்த ராசாவும் வந்ததென்ன


கன்னி மலர்களை நான் பறிக்க
இன்பக் கலைகளை நான் படிக்க
கற்பு நிலைகளில் நான் பழக
அன்பு உறவினில் நான் மயங்க
கொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க
மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க தேன் கொடுக்க

மாறாது இது மாறாது
தீராது சுவை தீராது

ஆயிரம் காலமே(கட்டி)

அந்த சுகத்துக்கு நேரம் உண்டு
இந்த உறவுக்கு சாட்சி உண்டு
தொட்டு தொடர்வது சொந்தமம்மா
தொட்டில் வரை வரும் பந்தமம்மா

அன்புக் கரங்களில் நீ அணைக்க நீ அணைக்க
முத்துச் சரமென நீ சிரிக்க சிரிக்க

மாறாது இது மாறாது
தீராது சுவை தீராது
ஆயிரம் காலமே (கட்டி)


இந்த பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஒ ஒ



Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:51:18 PM
படம்: என்றும் அன்புடன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S ஜானகி  


நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
(நிலவு..)
என்னை இழந்தேன் செந்தேன் மொழியில்
விண்ணில் பறந்தேன் சிந்தும் கவியில்
(நிலவு..)

நீயும் நானும் சேர்ந்ததற்கு காதல் தானே காரணம்
காதல் இங்கு இல்லை என்றால் வாழ்வில் ஏது தோரணம்
தீபங்களை மெல்ல மெல்ல ஏற்றிச் செல்லு அன்பே அன்பே
கீதங்களை சொல்ல சொல்ல ஏக்கம் கொண்டேன் அன்பே அன்பே
அலை விளையாடும் நதியினில் ஆடி உருகிட நாமும் சேரலாம்
சிறகுகள் வாங்கி உறவென்னும் தேரில் வெகு வெகு தூரம் போகலாம்
(நிலவு..)

பூங்குருத்து பூங்கழுத்தில் பூத்தொடுத்து சூடினேன்
பூ மரத்து பூச்சரங்கள் பூத்திருக்க கூடினேன்
இன்பம் என்றால் என்னவென்று உன்னிடத்தில் கண்டு கொண்டேன்
இன்னும் என்ன உண்டு என்று சொர்க்கம் வரை செல்கிறேன்
அறுசுவையோடு புது விருந்தாக சுக பறிமாறும் தேவியே
தலை முதல் பாதல் சுகம் தரும் வேதம் படித்திட தூண்டும் ஆவியே
(நிலவு..)

 
 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:52:08 PM
படம்: மகளிர் மட்டும்
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி


மகளிர் மட்டும் அடிமை பட்ட
இனமா இனமா
மகளிர் மட்டும் வருத்தப்பட்ட
குலமா குலமா
மகளிர் மட்டும் ஒதுக்கப்பட்ட
நிலமா நிலமா
மகளிர் மட்ட உணர்வை விட்ட
ஜடமா ஜடமா

பாரப்பா ரபப்பப்பா
பெண் பாடு பெரிதப்பா
மகளிர் மட்டும்
மகளிர் மட்டும்
(மகளிர்..)

வேலைக்கு போய் தீரும் சில பேர்க்கு
போராடும் பதில் கூறும் கடமை பல பேர்க்கு
நட்போடு சேர்கின்ற விஷயம் பெரும்பாடு
ஆனாலும் உழைக்காமல் ஏது சாப்பாடு
எவருக்கு இங்கே புரியும் பெண் இதயம்
அவதிப்பட்டால் தெரியும் ஊர் அறியும்
வரவும் செலவும் சரிவர
இரவும் பகலும் உழைப்பது
மகளிர் மட்டும்
மகளிர் மட்டும்

சாராயம் ஓயாமல் குடிக்கும் ஆளோடு
சம்சாரம் போதாமல் இருக்கும் நாளேது
நாள் தோரும் மார்வாடி கடைக்கு போகாது
நகையோடு பேதைப்பெண் இருக்க முடியாது
வருமைக்கோட்டில் உயரும் பெண் துயரம்
எடுத்துச்சொன்னால் இமயம் ஓர் இதயம்
புயலில் கடலா எதுவரை
கடலில் பெருக
மகளிர் மட்டும்
மகளிர் மட்டும்

கல்யாணம் பெண் பாடு பெரிய விவகாரம்
பெண் பார்க்கும் மாப்பிள்ளை நடத்தும் வியாபாரம்
ஏதேதோ எதிர்ப்பார்த்து கண்ணை பார்பாரு
ஏராளம் சீர் செய்த பிறகும் கேட்பாரு
அடங்கிப்போகும் இதயம் பெண் இதயம்
வெடிக்கக்கூடும் ஸ்டவ்வும் சில சமயம்
(மகளிர்..)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:53:00 PM
திரைப்படம் : ஆனந்தக் கும்மி
இசை :இளையராஜா
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி


ஓ வெண்ணிலாவே ஏ ஏ வா ஓடிவா (2)
நாளை இந்த வேளை எமை நீ காண வா- ஓ
பால் போல வா

(ஓ வெண்ணிலாவே)

நிலவின் ஜாடை தெரியும் ஓடை
அழகே நீயும் நீராடு ஹோ
மலர்கள் சேர்த்து மாலை கோர்த்து
அடடா நீயும் பூச்சூடு
கதைகள் பேசு
கவிகள் பேசு
விடியும் வரையில் நீ பாடு
நிலவே நீயும் தூங்காதே ஹோய்
நாளை இந்த வேளை எமை நீ காண வா
பால் போல வா

(ஓ வெண்ணிலாவே)
லாலிலாலி லாலிலாலா லாலி லாலி

இதமாய்ச் சாய்ந்து இமைகள் மூடு
இதுதான் முடிவு வேறேது ஹோ
இறக்கும்போதும் இதுவே போதும்
இனிமேல் பிறவி வாராது
காதல் மாலை
சூடும் வேளை
அழுகை ஏனோ கூடாது
நிலவே நீயும் தூங்காதே ஹோய்
நாளை இந்த வேளை எமை நீ காண வா
ஓ பால் போல வா

(ஓ வெண்ணிலாவே)

ஆனந்தம் கொண்டு நீங்கள்
இன்று போல் வாழ்கவே
ஆயிரம் பௌர்ணமிகள் கண்டுதான் வாழ்கவே
ஆதியில் சேர்ந்த காதல் ஆனந்தம் காணவே
ஆகாயம் உள்ள மட்டும் அழியாமல் வாழ்கவே



 
 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:53:49 PM
படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி  

சைலண்ஸ் சைலண்ஸ்
சைலண்ஸ் சைலண்ஸ்
சைலண்ஸ் சைலண்ஸ்
சைலண்ஸ் சைலண்ஸ்
சைலண்ஸ்

சைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது
சைலண்ஸ் காமல் பள்ளிக்கூடம் இது
சைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது
சைலண்ஸ் காமல் பள்ளிக்கூடம் இது

மௌனம்தான் இங்குள்ள பாடங்கள்
பார்வையில் சங்கீதம் பாடுங்கள்
மௌனம்தான் இங்குள்ள பாடங்கள்
பார்வையில் சங்கீதம் பாடுங்கள்

சைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது
சைலண்ஸ் காமல் பள்ளிக்கூடம் இது
சைலண்ஸ்

எழுதாத உம்மேனி நான் படிக்கவே
தெரியாத வண்னங்கள் தெரியுதே
இதழாலே முத்துக்கள் நானும் கோர்க்கவே
இடையோடும் எண்ணங்கள் தெரியுமே
பார்க்கும் பார்வையில் பாதி வேர்த்ததே
என் மேனி வேர்த்து வேர்த்துதான் மீதி தேய்ந்ததே
பாவை மேனியே பாடமானதே
தொட்ட ஆடைக்கூடத்தான் பாரமானதே
ஆண்மை நாளும் காவல் காக்க
ஆசை தேனை அள்ளி சேர்க்க
ராகதேவன் பாடல் போல
ராகம் தாளம் நாமும் சேர்ந்து பாடும் நேரம்
(சைலண்ஸ்..)

வானிலாடும் நிலவுதனில் ஆடை ஏதடி
மண்ணில் வந்த நிலவு நீயும் கூறடி
பெண்ணுக்கிங்கு நாணமுண்டு அறிந்துக்கொள்ளையா
நிலவுக்கென்று நாணம் இல்லை தெரிந்துக்கொள்ளையா
ஒருவருக்குதான் சொந்தமானது
என்னோடு இருவிதத்திலும் பந்தமானது
காதல் இரவுதான் விடியலானதே
அந்த காமன் உறவுதான் தொடரலானதே
காதல் ஆற்றில் நீந்தும் வேளை
காற்று போல நானும் மாற
ஜாதி பூவில் வாசம் போல
ஆவல் இன்றி நாமும் சேர்ந்து பாடும் நேரம்
(சைலண்ஸ்..)



 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:54:51 PM
படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி  
டிங் டாங் டாங் டிங் டாங்
டிங் டாங் டாங் டிங் டாங்

இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
காதல் காதல் டிங் டாங்
கண்ணில் மின்னல் டிங் டாங்
ஆடல் பாடல் டிங் டாங்
அள்ளும் துள்ளும் டிங் டாங்
(இரண்டும்..)

காதலில்லா ஜீவனை நானும் பார்த்ததில்லை
வானமில்லா பூமிதன்னை யாரும் பார்த்ததில்லை
தேகமெங்கும் இன்பம் என்னும் வேதனை வேதனை
நானும் கொஞ்சம் போட வேண்டும் சோதனை சோதனை
உந்தன் கை வந்து தொட்ட சத்தம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அன்பு முத்தங்கள் இட்ட சத்தம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்
ஆசை பொங்கும் டிங் டாங்
நெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும்
(இரண்டும்..)

காதல் கண்ணன் தோளிலே நானும் மாலை ஆனேன்
தோளில் நீயும் சாயும்போதும் வானை மண்ணில் பார்த்தேன்
நீயும் நானும் சேறும்போது கோடையும் மார்கழி
வார்த்தை பேச நேரம் ஏது கூந்தலில் பாய் விரி
எங்கு தொட்டாலும் இன்ப நாதம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
என்றும் தீராது நெஞ்சின் வேகம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்
சொர்க்கம் தங்கும் டிங் டாங்
உந்தன் சேவை எந்தன் தேவை
(இரண்டும்..)



 
 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:55:48 PM


திரைப்படம் : கைகொடுக்கும் கை
பாடியவர்கள் : SPB , S .ஜானகி
இசை: இளையராஜா

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
இரவும் இல்லே பகலும் இல்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

நடந்தா காஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்
கண்ட கண்ணு படும்

பேசும் போது தாயப் பார்த்தேன்
தோளில் தூங்கும் பிள்ளை ஆனேன்

நெஞ்சத்திலே ஏஏ
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி
ஆரிரரோ பாடவோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
வீடெதும் இல்லே வாசலுமில்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

இனி நான் கோடி முறை பொறப்பேன்
உன நான் பார்க்க விழி தொறப்பேன்
இது சத்தியமே



நீரும் போனா மேகம் ஏது
நீயும் போனா நானும் ஏது
என்னுயிரே ஏஏ

என்னுயிரில் நீ இருக்க
உன்னுயிரும் போகுமோ
(தாழம்பூவே வாசம் வீசு)



Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:57:30 PM

படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வைரமுத்து

ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
(ரோஜாவை..)

இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
(இலைகளில்,.)
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தாலாட்டும் பூச்செண்டு ஆ ஆ
(ரோஜாவை..)

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் உனக்கு மகிழ்ந்து வேராவேன்
(வசந்தங்கள்..)
பூவிலே மெத்தைகள் தைத்து கண்ணுக்குள் மங்கையை வைத்து
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஆ
(ரோஜாவை..)

Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 07:58:48 PM

படம்: ஜோடி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி மேனன், S ஜானகி
வரிகள்: வைரமுத்து


காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீளம் கொண்டுவா பேரா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்
(காதல்..)

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எதன் உயிரல்லோ
பொண்ணே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தல் ஜீவன் காயம் படுமல்லோ
அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கிறேன்
(காதல்..)

கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா
காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும்போதும் உறங்கமாட்டாயா
தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக்கொள்வாயா
மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா
(காதல்..)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:26:43 PM
படம்: ரிஷி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், S ஜானகி


வா வா பூவே வா
உன் வாசம் பார்க்க வேண்டும் வா
தென்றல் வரும் சாலை மீது நீ வா
வா வா என்பே வா
என் வாசல் உன்னை தேடும் வா
வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா

எதிர் பார்க்கிறேன் மனம் வேர்க்கிறேன்
பூங்காற்றாய் நீ வா
மழை காலமே புது ஓடை நான்
ஒரு வெள்ளம் போல் வா
அடி இன்னும் இன்னும் பக்கம் கொஞ்சம் வா
(வா வா..)

உன்னைப் பார்த்த பூக்கள் கண்ணை மூடவில்லை
அதிசய பெண்ணே நீ வா வா வா
உன்னை பார்த்த பின்னே கைகள் ஓடவிலலி
அருகினில் நீ கொஞ்சம் வா வா வா
உன் புன்னகை அதை காசைப்போல்
நான் சேர்ப்பேனே வா
உன் தோள்களில் தலை சாயவே
நான் பூத்தேனே வா
நீ காதல் வானவில்லாக
அதில் காணும் வண்ணம் நானாக
உன் அழகை பருக அழகே நீ வா
(வா வா..)

தங்கக்கட்டில் போடு என்னை கையில் சேறு
மூச்சினில் தீ மூட்டு வா வா வா
வண்ண சிற்பம் பார்த்து கண்கள் பசி ஆச்சு
தாமதம் ஆகாது வா வா வா
நீ வேண்டவும் விரல் தூண்டவும்
ஒரு பூவானேன் வா
உன் மடியிலே நான் இரவிலே கண் மூடவா
உன் தோள்கள் ரெண்டும் கிளையாக
நான் பஞ்ச வர்ண கிளியாக
சுக கதைகள் சொல்ல அருகே நீ வா
(வா வா..)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:27:59 PM
படம்: அமராவதி
இசை: பால பாரதி
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வைரமுத்து

தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவு இதுவோ
(தாஜ்மஹால்..)

பூலோகம் என்பது பொடியாகி போகலாம்
பொன்னாரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம்
ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்
கண்ணீரிலே ஈரமாகி கரை ஆச்சி காதலே
கரை மாற்றி நாமும் வெல்ல கரை ஏற வேண்டுமே
நாளை வரும் காலம் நம்மை கொண்டாடுமே
(தாஜ்மஹால்..)

சில் வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில் வண்டுகள் காதல் பண்ணால் செடி என்ன கேள்வி கேட்குமா
வண்டு ஆடும் காதலை கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்ப பாவம் என்பதா
வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
வாழாத பேருக்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே
வாணும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே
(தாஜ்மஹால்..)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:29:15 PM
படம்: மௌன ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி



ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் வந்ததோ
எல்லாம் பூவைக்காகத்தான் பாடும்
பாவைக்காகத்தான் பூக்கள் மேல் நீர்த்துளிகள்
வெண்பாக்கள் பாடாதோ தூறல் போடும் நேரம்
பூஞ்சாரல் வீசாதோ
(ஓஹோ..)

யாரும் சொல்லாத காவியம்
ஆடை கொண்டிங்கு ஆடுது
ஈரம் கொண்டாலென்ன பொன்னோவியம்
வண்ணம் மாறாமல் மின்னுது
நாம் பொண்ணானது கல்யாணம் தேடவா
ஓர் கண்ணாளன் வந்து பூமாலை போடவா
ஏன் அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம்
யார் வந்தாலென்ன திரும்பாததென் ஞாபகம்
பூவிலங்கு தேவையில்லையே
(ஓஹோ..)

கால்கள் எங்கேயும் ஓடலாம்
காவல் இல்லாமல் வாழலாம்
வண்ன மின்னல்களாய் நின்றாடலாம்
வாழ்வின் சங்கீதம் பாடலாம்
நாம் இந்தாளிலே சிட்டாக மாறலாம் வா
செவ்வான மெங்கும் ஜிவ்வென்று ஏறலாம்
நாம் எல்லாருமே செம்மீன்கள் ஆகலாம் வா
நீரோடையெங்கும் வெள்ளோட்டம் போகலாம்
வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்க்கலாம்
(ஓஹோ..)

 
 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:31:09 PM

படம்: மௌன ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி


சின்ன சின்ன வண்ணக்குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேண் மொட்டு நானா நானா
(சின்ன..)

மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடி கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக்கொண்டேன்
சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்
என்னமோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்
மாலை சூடி மஞ்சம் தேடி
மாலை சூடி மஞ்சம் தேடி
காதல் தேவன் சன்னதி
காண காணக் கான காண
(சின்ன..)

மேனிக்குள் காறு வந்து மெல்லத்தால் ஆழக் கண்டேன்
மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓடக் கண்டேன்
இன்பத்தின் எல்லையே இல்லையே இல்லையே
அந்தியும் வந்தால் தொல்லையே தொல்லையே
காலம் தோறும் கேட்க வேண்டும்
காலம் தோறும் கேட்க வேண்டும்
பருமென்னும் கீர்த்தனம் பாடப்பாட
பாடப் பாட பாட..
(சின்ன..)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:33:26 PM

படம்: மௌன ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி


பனிவிழும் இரவு நனைந்தது இரவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா வா வா
(பனி..)

பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேத்தும் நேரம் மனசில் ஒரு கோடி பாரம்
தனித்து வாழ்தென்ன லாபம் தேவையில்லாத தாபம்
தனிமையே போ இனிமையே வா
நீரும் வேரும் சேர வேண்டும்
காவலில் நிலை கொள்ளாமல் தாவுது மனது
காரணம் இல்லாமல் வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம்
தாளாமல் துள்ளும் என்னை கேட்காமல் ஓடும்
இதயம் உன்னோடும் கூடும்
விரகமோ நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறிப்போகும்
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:34:13 PM
படம்: நான் சிவப்பு மனிதன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி


பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
(பென் மானே..)

தேன் மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ
தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ
கையருகில் பூமாலை காதல் என்னும் கோபுரம்
மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஊர் புறம்
என் காதல் வானிலே பெண் மேக ஊர்வலம்
காணுவேன் தேவியை கண்களின் விழாவில்

உன் மானே சங்கீதான் பாடவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் தேனே வந்தேனே
(உன் மானே..)

யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே
போர்களம் தான் ஹோய் பூக்களின் தேகமே
தேக மழை நான் ஆகும் தேவியை தேடுவேன்
ஈர வயல் நீயாக மேனியை மூடுவேன்
கண்ணோரம் காவியம் கை சேறும் போதிலே
வானமும் தேடியே வாசலில் வாராதோ
(பெண் மானே..)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:43:21 PM
படம் காதல் ஓவியம்
பாடல்வரிகள் : வாலி
பாடியவர்கள் :ஜானகி, எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை இளையராஜா




நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம் (நதியில்)
காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்(நதியில்)

(நதியில் ஆடும்)

குளிக்கும்போது கூந்தலை
தனதாடை ஆக்கும் தேவதை
அலையில் மிதக்கும் மாதுளை
இவள் ப்ரம்மதேவன் சாதனை
தவங்கள் செய்யும் பூவினை
இன்று பறித்து செல்லும் காமனை
எதிர்த்து நின்றால் ஆஆ
எதிர்த்து நின்றால் வேதனை
அம்பு தொடுக்கும்பொது நீ துணை சோதனை

(நதியில் ஆடும்)

ஸரிநிஸா பாமரிகா
ஸரிநிஸா பாமரிகா
ததபமா
மதநிஸா நிதபம
மதநிஸா

ஸாஸஸாஸ ஸஸரிநிநிதத
தாததாத ததநி பபதத

ரிமாதநி தபநித
ரிஸநிதபாமக
தாபம நிதப
ஸாநிதப ஸஸரிரிககமமபப
ஸாஸநிநிததபபம
நிரிகமாப

சலங்கை ஒசை போதுமே
எந்தன் பசியும் தீர்ந்து போகுமே
உதயகானம் பொதுமே
எந்தன் உயிரில் அமுதம் ஊறுமே
இரவு முழுதும் கீதமே
நிலவின் மடியில் ஈரமே
விரல்கள் விருந்தை கேட்குமே
ஒரு விலங்கு விழித்து பார்க்குமே
இதழ்கள் இதழை தேடுமே
ஒரு கனவு படுக்கை போதுமே பொதுமே.....

(நதியில் ஆடும்)




Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:44:19 PM
திரைப்படம் : சிட்டுக்குருவி
குரல் : எஸ். ஜானகி
இசை: இளையராஜா



அடடட மாமரக்கிளியே
உன்னையின்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னையெண்ணி
பச்ச தண்ணி குடிக்கலையே
அடடட மாமரக்கிளியே ஏஏ

உன்னை நினைச்சே மஞ்சள் அரைச்சேன்
மாசக்கணக்கா பூசிக் குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
(உன்னை நினைச்சே)
அடடட மாதுளங்கனியே
இதை இன்னும் நீ நினைக்கலையே
கிட்டவாயேன் கொத்திப்போயேன்- உன்ன
நான் தடுக்கலையே
மறுக்கலையே (அடடட)


உப்ப கலந்தா கஞ்சி இனிக்கும்
ஒன்னக் கலந்தா நெஞ்சு இனிக்கும்- அட
பரிசம் தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு
(உப்ப கலந்தா)
அடடட தாமரைக்கொடியே
இது ஓந்தோள் தொடவில்லையே
செல்லக்கண்ணு சின்னப்பொன்ணு
இதை நீ நினைக்கலையே
அணைக்கலையே(அடடட)

மீனைப்புடிக்க தூண்டி இருக்கு
நீரைப்பிடிக்க தோண்டி இருக்கு- அட
உன்னைத்தான் நான் பிடிக்க
கண்வலைய போட்டேன்
(மீனைப்புடிக்க)

அடடட மம்முதக்கனையே
வந்து வந்து மயக்குது எனையே
இந்த ஏக்கம் ஏது தூக்கம்
பாயைப்போட்டு படுக்கலையே
புடிக்கலையே
(அடடட)




Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:45:11 PM
படம்: நாடோடி பாட்டுக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, S ஜானகி
ஆகாய தாமரை அருகில் வந்ததே
நாடோடி பாடலில் உருகி நின்றதே
(ஆகாய..)
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
(ஆகாய..)

மெல்லிசை பாட்டு முழங்கிட கேட்டு
இதயமே இளகுதா இள மயிலே
நீ மந்திரன் போலே மணி தமிழாலே
இசைக்கிறாய் இழுக்கிறாய் இளவரசே
ஒரு மட மாது இணை பிரியாது
இருக்குமோ மறக்குமோ
ஒரு பொழுதென்னும் அருவியை மீனும்
பிரியுமோ விலகுமோ
என்று இந்த லீலை எல்லாம்
எல்லை தாண்டி போவது
கையில் ஏந்தும் போதெல்லாம்
கன்னி போகும் பூவிது
முத்தம் தலைவன் இதழ் பதித்திட
இதயம் தித்தித்திட
புதிய மது ரசம் வாழ்ந்திட
(ஆகாய..)

புன்னகை முல்லை புது விழி குவளை
அழகிய ஆதாரங்கள் அரவிந்த பூவோ
உந்தன் கன்னங்கள் ரோஜா கொடி இடை அள்ளி
நிரத்தினில் நீ ஒரு செவ்வந்திப்பூ
செண்பகம் ஒன்று பெண் முகம் கொண்டு
எனக்கென பிறந்ததோ
குன்றினில் தோன்றும் குறிஞியும் இங்கே
குமரியை விளைந்ததோ

மின்னும் வண்ண பூக்கள் எல்லாம்
மாலையாக ஆகலாம்
மன்னன் தந்த மாலை எந்தன்
நெஞ்சை தொட்டு ஆடலாம்
நெஞ்சை தழுவியது துலங்கிட
உறவு விளங்கிட
இனிய கவிதைகள் புனைந்ததடா
(ஆகாய..)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:47:28 PM
படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S ஜானகி

ப்ரியசகி ஓ ப்ரியசகி ப்ரியசகி என் ப்ரியசகி
வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை ஏனடி
இளைய தேகம் ஓ இணைய வேண்டும்
இனிய ராகம் ஓ புணைய வேண்டும்
(ப்ரியசகி..)

காதலன் வீரமிகு ஆண்மகன் ஆண்மகன்
காவலை மீறிவரும் நாயகன் நாயகன்
பார்வை ஒன்று வீசு கண்மணி பூமி தன்னைக் கையில் ஏந்துவேன்
வார்த்தை ஒன்று பேசு கண்மணி மேகம் போல வானில் நீந்துவேன்
வானமும் வையமும் வாழ்த்துமே ஓ
(ப்ரியசகி..)

கூண்டிலே காதல் குயில் வாடுது பாடுது
கொண்டுப்போ கூவி உனைத் தேடுது தேடுது
கூண்டிலே காதல் குயில் வாடுது பாடுது
கொண்டுப்போ கூவி உனைத் தேடுது தேடுது
வெண்ணிலாவை சிறையில் வைப்பதா
வானம் என்ன வெளியில் நிற்பதா
வீரமான நெஞ்சமில்லையா நெஞ்சில் இந்த வஞ்சியில்லையா
நீ வரும் பாதையைப் பார்க்கிறேன் ஓ..
(ப்ரியசகி..)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:48:28 PM
படம்: தெய்வ வாக்கு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜெயசந்திரன், S ஜானகி

ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ

ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ
வண்ணக்கிளியே சொல்லு கிளியே
வண்ணக்கிளியே சொல்லு கிளியே

ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமே
வண்ணக்கிளியே சொல்லு கிளியே
வண்ணக்கிளியே சொல்லு கிளியே

ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ

தெய்வம் வரும் மனித உருவிலே படித்ததுண்டு ஏட்டிலே
தெய்வம் என்று தெரிந்த போதிலே பூட்டலாமோ வீட்டிலே
பூஜை செய்யும் தேவி உன்மேல் ஆசை வைத்தால் பாவம்
நானும் உன்னை தாரம் என்று ஏற்றுக்கொண்டால் துரோகம்
ஜீவன் உள்ள வான் நிலாவை நானும் சேரக் கூடுமோ
பாவம் இந்த பாவம் என்று காலம் என்னை தூற்றுமோ
(ஊரெல்லாம்..)

தெய்வம் கண நேரம் என் மேல் வந்து பேசி போகுது
வந்து பேசி போவதால் நான் தெய்வம் ஆக கூடுமோ
ஊரில் உள்ள பேருக்கெல்லாம் வாக்கு சொல்லும் பாவை
உன்னிடத்தில் கேட்டு நின்றாள் வார்த்தை ஒன்று தேவை
என்னை தெய்வம் என்றால் எந்தன் வாக்கும் தெய்வ வாக்குதான்
தெய்வ வாக்கை ஏற்றுக் கொண்டு வாழ்க்கை ஒன்றை நீ கொடு


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:49:10 PM
படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி



ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை
(ஆயிரம்..)

ஓ கொத்துமலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று
ஓ கொத்துமலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளை குடிக்கும்
(ஆயிரம்..)

ஏ வீட்டுக்கிளியே
கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை
ஒன்றையொன்று சூடும் இது பொன் மேடை
கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்
ஆயிரம் தாமரை
(ஆயிரம்...)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:50:06 PM

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி


ரோஜப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா
(ரோஜாப்பூ..)

நேற்று நீர் விட்டது
இன்று வேர் விட்டது
நெஞ்சில் அம்மாடியோ
நூறு பூ பூத்தது
சின்னஞ்சிறு பருவம்
இன்னும் கோதிப்போ
சொல்லி சொல்லி பொழுதை
இன்னும் கழிப்பதோ
தொடு தொடு தொடாமல்
நிலாவின் மேனி நாளெல்லாம்
தனிந்தது
(ரோஜாப்பூ..)

நீயும் அச்சம் இடு
நூறு முத்தம் இடு
மீதம் மிச்சம் எடு
மேலும் சொல்லிக்கொடு
அந்தி பகல் இரவு
சிந்தை குளிர்ந்தது
அந்தப்புறா நினைவில்
சிந்து படிக்குது
இதோ இதோ உன்னாலே
விழாமல் மோகம் வாட்டுது
தாங்குமா
(ரோஜாப்பூ..)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:51:10 PM
படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி



தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது
(தூங்காத..)

மாமர இலை மேலே ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேறும் நேரம் தீரும் பாரம்
(தூங்காத..)

ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேரும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விலங்காத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
(தூங்காத..)
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:52:21 PM
படம்: பார்வை ஒன்றே போதுமே
இசை: பரணி
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், S ஜானகி


ஏ அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்
காதலா காதலா
ஏ அலையாடும் கடலுக்கும் அது சேறும் அணலுக்கும்
காதலா காதலா

கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்
மொத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்
சட்சைகள் செய்திடவா
(ஏ அசைந்தாடும்...)

ஏ தீப்போன்ற உன் மூச்சோட
என் தோள் சேறு
உச்சவம் போது உச்சியை கோது
என் வாயோடு உந்தன் வாய் சேர்த்து
உந்தன் மார்போடு மெல்ல பூர்பார்த்து
கைகளில் ஏந்து வைகையில் நீந்து

நான் வேர் வேராய் அட வேர்த்தேனே
ஒரு பால் பார்வை உன்னை பார்த்தேனே
சிற்றின்பம் என்றிதை யார் இங்கு சொன்னது
பேரின்பத்தால் மறைத்தால் திறக்க
ஐந்தடி உடல் நீலை மெய் மறக்க
(ஏ அசைந்தாடும்..)

நீ ஆராய்ச்சி இனி பண்ணாதே
என் பூந்தேகம் அதை தாங்காதே
கொப்புழில் தாகம் பொன் கைகள் வேகம்

உன் கண் கொண்டு என்னை கொய்யாதே
உன் தீ மூச்சால் என்னை கொல்லாதே
முத்தங்கள் போட்டு வித்தைகள் காட்டு
நீ கீழ் மேலாய் என்னை கிள்ளாதே
நீ மேல் கீழாய் என்னை எள்ளாதே

பெண்ணே நீ பெண் அல்ல அட்சைய பாத்திரம்
பெண்ணென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன்
ஆளோடு தேன் கொண்டு வாய் கலந்தேன்
(ஏ அசைந்தாடும்..)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:53:56 PM
படம்: சொல்ல துடிக்குது மனசு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S ஜானகி, KJ ஜேசுதாஸ்  

எனது விழி வழி மேலே ஹோ
கனவு பல விழி மேலே ஹோ
வருவாயா நீ வருவாயா
வருவாயா வருவாயா என நானே எதிர் பார்த்தேன்
அது சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு (2)
(எனது விழி..)

பள்ளிக்கூட பாடம் ஏதும் எனக்கில்லை ஞாபகம்
கண்ணில் நூறு பாடம் கேட்டும் மறக்காத ஞாபகம்
தடுமாற்றம் எதற்கு படித்தாலே உனக்கு
ல ல லா ல ல ல லா ... ல ல லா ல ல ல லா
காதல் சிறகை காற்றில் விரித்து
நினைத்தாலே இனிக்கும் கனவின்று பலிக்கும்
உறங்காமல் உனைத்தானே நினைத்தே தனியா தவித்தேனே
(எனது விழி..)

பிள்ளை போல தோளில் போட்டு தாலாட்டு பாடுவேன்
முல்லை பூவில் மேடை போட்டு உன்னோடு ஆடுவேன்
இமைக்காமல் ரசித்தேன் ருசி பாத்து பசித்தேன்
லா லா ல லா லா லா ல ... லா லா ல லா லா லா ல
ஏது உறக்கம் வேண்டாம் கிறக்கம்
வட்டி போட்டு மொத்தமா கட்ட வேண்டும் முத்தமா
உனைத்தானே உனைத்தானே தனியா தவித்தே துடிக்காதே ஹோய்
(எனது விழி..)

 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:54:56 PM
படம்: அம்மன் கோயில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி


காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தோனுது
கலைந்து போன மேகங்கள் கவனமாகக் கேட்குது
கேட்டப் பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் ஸ்வரம்

(காலை நேரப் பூங்குயில்)

மேடை போடும் பெளர்ணமி
ஆடிப்பாடும் ஓர் நதி
வெள்ள ஒளியினில் மேகலை
மெல்ல மயங்குது என் நிலை
புதிய மேகம் கவிதை பாடும்
பூபாளம் பாடாமல் எந்தன் காலை தோன்றும் எந்நாளும்

( காலை நேரப் பூங்குயில்)

இளமை என்னும் மோகனம்
இணைந்து பாடும் என் மனம்
பட்டு விரித்தது புல்வெளி
பட்டுத் தெறித்தது விண்ணொளி
தினமும் பாடும் எனது பாடல்
காற்றோடும் ஆற்றோடும் இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும்

(காலை நேரப் பூங்குயில்)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:55:37 PM
படம்: காக்கி சட்டை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வைரமுத்து

வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா?
ஆசை மீறும் நேரமே ஆடை நான் தானே
(வானிலே..)

வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்
வாசப்பூவை கையில் அள்ளி பார்க்கிறேன்
மாலை காற்றில் காதல் ஊஞ்சல் போடவா?
காமன் தேசம் போகும் தேரில் ஆடவா?
ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே
வானம் தாலாட்டுதே வா
நாளும் மார் மீதிலே ஆடும் பூவை
தோளில் யார் சூடுவார் தேவனே
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
தேவனே சூடுவான்
(வானிலே..)

பூவை போல தேகம் மாறும் தேவதை
பார்வை போதும் மேடை மேலே ஆடுதே
பாதி கண்கள் மூடும் காதல் தேவியே
மோக ராகம் பாடும் தேவன் மேன்மையே
மன்னன் தோல் மீதிலே மஞ்சம் கண்டேன்
மாலை பூங்காற்றிலே நான்
ஆடும் பொன் மேகமே ஓடும் வானம்
காதலின் ஆலயம் ஆனதே
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்
ஓவியம் தீட்டுதே
(வானிலே..)



 
 
 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:57:21 PM
படம் : தர்மபத்தினி
இசை : இளையராஜா
பாடியவர்: இளையராஜா, ஜானகி


நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்

(நான் தேடும்)


பறந்து செல்ல வழியில்லையோ
பருவக் குயில் தவிக்கிறதே
சிறகிரண்டும் விரித்து விட்டேன்
இளம் வயது தடுக்கிறதே
பொன் மானே என் யோகம் தான்
பெண் தானோ சந்தேகம் தான்
என் தேவி
ஆ...ஆ...
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழுமென தவம் கிடந்தேன்
பூங்காற்று சூடாச்சு ராசாவே நாளாச்சு

(நான் தேடும்)

மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கு அந்த சுகம் வருமோ
தள்ளாடும் என் தேகம் தான்
என்னாளும் உன் வானம் நான்
என் தேவா
ஆ....
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை

(நான் தேடும்)



 
 

 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:58:08 PM
படம்: பட்டாக்கத்தி பைரவன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே..
(எங்கெங்கோ..)

ஆ.. நான் காண்பது உன் கோலமே
அங்கும் இங்கும் எங்கும்
ஆ.. என் நெஞ்சிலே உன் எண்ணமே
அன்றும் இன்றும் என்றும்
உள்ளத்தில் தேவன்
உள்ளே என் ஜீவன்
நீ நீ நீ..
(எங்கெங்கோ..)

ஆ.. கல்லானவன் பூவாகிறேன்
கண்ணே உன்னை எண்ணி
ஆ.. பூவாசமும் பொன்மஞ்சமும்
என்றோ எங்கோ ராஜா
எதற்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்வேன்
நான் நீ நாம்..
(எங்கெங்கோ..)



 
 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:58:54 PM
படம்: வீட்டுல விசேஷங்க
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி, S ஜானகி
வரிகள்: வாலி


மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும் வானம் இது
(மலரே..)

நிலம் இடம் மாறினாலும்
நிழல் நிறம் மாறினாலும்
நிலைபெறும் காதலென்னும்
நிஜம் நிறம் மாறிடாது
இறைவனின் தீர்ப்பு இது ஓ..
எவர் இதை மாற்றுவது
(மலரே..)

பூபாலம் கேட்கும் அதிகாலையும்
பூஞ்சோலை பூக்கும் இளமாலையும்
நீ அன்றி ஏது ஒரு ஞாபகம்
நீ பேசும் பேச்சில் மணிவாசகம்
உள்ளம் எனும் வீடெங்கும்
உன்னழகை நாந்தானே
சித்திரத்தை போல் என்றும்
ஒட்டி வைத்து பார்த்தேனே
உனைத் தழுவும் இளந்தளிரே
உனக்கென நான் வாழ்கிறேன்
(மலரே..)

மாங்கல்யம் சூடும் மண நாள் வரும்
கல்யாண மாலை இரு தோள் வரும்
வாயார வாழ்த்த இந்த ஊர் வரும்
ஊர்கோலம் போக மணி தேர் வரும்
சொல்லியது போலே நம்
சொப்பணங்கள் கை கூடும்
வந்ததொரு வாழ்வென்றே
சிந்து கதிர் கண் பாடும்
வலைக்கரமும் துணைக்கரமும்
வரைந்திடும் தேன் காவியம்
(மலரே..)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 10:59:44 PM
படம்: சிகப்பு ரோஜாக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: கமல்ஹாசன், எஸ்.ஜானகி

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

(நினைவோ ஒரு பறவை)

ரோஜாக்களில் பன்னீர்த்துளி
வழிகின்றதேன் அது என்ன தேன்
அதுவல்லவோ பருகாத தேன்
அதை இன்னும் நீ பருகாததேன்
அதற்காகத்தான் அலைபாய்கிறேன்
தந்தேன் தர வந்தேன்

(நினைவோ ஒரு பறவை)

பனிக்காலத்தில் நான் வாடினால்
உன் பார்வைதான் என் போர்வையோ
அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்
அதற்காகத்தான் மடிசாய்கிறேன்
மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீ தான் இனி நான் தான்

(நினைவோ ஒரு பறவை)




 
 
 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:00:26 PM
படம்: கிளிப் பேச்சுக் கேட்கவா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், ஜானகி

ஆண்: சிவகாமி நினைப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன்
பெண்: அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன
ஆண்: முக்கனியே சர்க்கரையே ஒத்தையிலே நிக்கறியே
பெண்: வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ

(சிவகாமி நினைப்பினிலே)

ஆண்: ஆலமரக்கிளி அன்னாடம் என்னோடு பேசுமா இல்லை ஏசுமா
ஆத்தங்கரையினில் அத்தானும் முத்தாடக்கூடுமா விட்டு ஓடுமா
பெண்: கோலக்கிளிப் பேச்ச கட்டாயம் தட்டாம கேட்கவா என்னைப் பார்க்கவா
காலம் கடத்தாமல் கையோடு கையாக சேர்க்கவா மையல் தீர்க்கவா
ஆண்: போதும் இது போதும் இந்த பிறவியில் வேறொன்றும் வேண்டாமே
பெண்: மோதும் அலை மோதும் நெஞ்சக் கடலில் ஆசைகள் ஓயாம
ஆண்: வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ

பெண்: அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன
ஆண்: சிவகாமி நினைப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன்
பெண்: எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல் வெட்டுறியே
ஆண்: வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ

பெண்: காதல் கடுதாசி கண்ணால இந்நேரம் போட்டது வந்து சேர்ந்தது
கூடிக் கலந்திட கும்மாளம் இப்போது தோணுது பொண்ணு நாணுது
ஆண்: தேனும் தினை மாவும் தின்னாம நின்னாலே தாங்குமா பசி நீங்குமா
தேடக் கிடைக்காத பொன்னாரம் என் கையில் சேருமா சுகம் மீறுமா
பெண்: பேசி வலை வீசி இந்த மனசுல போதைய ஏத்தாதே
ஆண்: ராசி நல்ல ராசி நம்ம பொருத்தத்தை நீயென்றும் மாத்தாதே
பேண்: இப்ப என்னவோ என்னவோ என்னவோ
என்னைப் பண்ணுதே பண்ணுதே பண்ணுதே

(சிவகாமி நினைப்பினிலே)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:01:29 PM
படம்: கிளிஞ்சல்கள்
இசை: T ராஜேந்தர்
பாடியவர்கள்: Dr. கல்யாண், S ஜானகி


விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
(விழிகள்..)
பார்வை நாடகம்
அரங்கில் ஏறுதாம்
ஓ....

ஜூலி ஐ லவ் யூ
ஜூலி ஐ லவ் யூ
ஜூலி ஐ லவ் யூ
ஜூலி ஐ லவ் யூ

மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்
(மை தடவும்..)
மனவீணை என நாதமீட்டி கீதமாகி நீந்துகொன்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும் பூக்களாகி மிதக்கின்ற பாட்டா
(விழிகள்..)

நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே
(நினைவென்னும்..)
ஒரு மாலையிலே மஞ்சள் வெயில் போல வந்து
நெஞ்சமதில் நீ வீச
மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென
உள்ளத்தில் நீ பொங்க
(விழிகள்
..)

Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:02:40 PM

படம்: பாடும் பறவைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி  

ஸா நிஸரீ ஸா நீ
ஆ ஹா ஹா ஆ
ஸா நிஸமகாம ரீ
அ அ அ அ அ அ அ அ அ
பதஸா நிஸரீ ஸநீ
ஆ ஹா ஹா ஆ
ஸா நிஸமகாம ரீ
அ அ அ அ அ அ அ அ அ
பத ஸஸஸநி ரிரிரிஸ கககரி மமமக பா
ஸா நீ த ப ம க ரி ஸ நி

ஆண்: கீரவானி
இரவிலே கனவிலே பாடவா நீ
இதயமே உருகுதே

அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வா நீ

(கீரவானி)

ஆண்: கரிஸ பமக பாநி ஸரிகரிகஸ நீ பா
நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி பூப்பூத்தது பூங்கொடி

பெண்: தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய்
ஒருவாய் பெறுவாய் மெதுவாய்
தலைவனை நினைந்ததும் தலையணை நனைந்ததேன்
அதற்கொரு விடை தருவாய்

(கீரவானி)
(அடி ஏனடி)

ஆண்: புலி வேட்டைக்கு வந்தவன்
குயில் வேட்டைதான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன்
பூந்தென்றலாய் மாறினேன்

பெண்: இந்த வனமெங்கிலும் ஒரு சுரம் தேடினேன்
இங்கு உனைப் பார்த்ததும் அதை தினம் பாடினேன்
மனதில் மலராய் மலர்ந்தேன்
பறவைகள் இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்

(கீரவானி)
(அடி ஏனடி)

 
 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:03:41 PM
படம் : அவர்கள் (1977)
பாடியவர் : எஸ். ஜானகி
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்  
 


காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று..
நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று..
நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று..
நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று..

கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு?
காலம் என்னை வாழ்த்தும் போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு?

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

தேர் கொண்டு வா தென்றலே
இன்று நான் என்னைக் கண்டேன்..
சீர் கொண்டு வா சொந்தமே
இன்றுதான் பெண்மை கொண்டேன்..

பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன்
பேசி பேசி கிள்ளை ஆனேன்..
கோவில் விட்டு கோவில் போவேன்
குற்றம் என்ன ஏற்று கொள்வேன்?

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?



 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:04:46 PM
படம்: கலைஞன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ், S ஜானகி  


ஆண்: எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா இசைக்கும் குயில் நீதானா வா

(எந்தன் நெஞ்சில்)

ஆண்: பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே

பெண்: உனக்கெனப் பிறந்தவள் நானா
நிலவுக்குத் துணை இந்த வானா

ஆண்: வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாக இந்நாள்

(எந்தன் நெஞ்சில்)

பெண்கள்: சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும்

ஆண்: உதடுகள் உரசிடத்தானே
வலிகளும் குறைந்திடும் மானே

பெண்: நான் சூடும் நூலாடைப் போலே
நீ ஆடு பூமேனி மேலே




 
 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:05:50 PM
படம் : கவிக்குயில்
இசை : இளையராஜா
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : பாலமுரளி கிருஷ்ணா/ எஸ்.ஜானகி

சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்


கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
என்றும் காதலை கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்கு பெருமை

(சின்னக் கண்ணன்)

நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா
அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்

(சின்னக் கண்ணன்)



Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:06:34 PM
படம்: சின்ன மாப்பிள்ளை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S ஜானகி


காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி
உன் முகத்தை பார்க்கையில என் முகத்தை நான் மறந்தேன்
(காதோரம்..)

நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
(நான் விரும்பும்..)
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
உன்னாட்டந்தான் தங்கத்தேரு
கண்டதில்லை எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி
நீ தொடத்தானே நான் பொறந்தேனே
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்
(காதோரம்..)

வானவில்லை விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு
(வானவில்லை..)
என் கூட உன் போல் ஓவியப் பாவை
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை
என்னாளும் நான் உங்க சொத்து
இஷ்டம் போல அள்ளி கட்டு
மேலும் கீழும் மெல்லத் தொட்டு
மேளம் போல என்னை தட்டு
நான் அதுக்காக காத்திருப்பேன்
நீ வரும் பாதை பார்த்திருப்பேன்
(காதோரம்..)


 
 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:07:25 PM
படம் : உறுதி மொழி
இசை : இளையராஜா
பாடியவர் : ஜெயசந்திரன், S.ஜானகி


அதிகாலை நிலவே
அலங்கார சிலையே
புதுராகம் நான் பாடவா

இசைதேவன் இசையில்
புது பாடல் துவங்கு
எனை ஆளும் கவியே... உயிரே...

அதிகாலை கதிரே
அலங்கார சுடரே
புதுராகம் நீ பாடவா

மணிக்குருவி உனை தழுவ மயக்கம் பிறக்கும்
பருவக்கதை தினம் படிக்க கதவு திறக்கும் [மணிக்குருவி...]
விழியே உன் இமை இரண்டும் எனை பார்த்து மயங்கும்
உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும்
நமை வாழ்த்த வழி தேடி தமிழும் தலை குனியும்

அதிகாலை கதிரே
அலங்கார சுடரே
புதுராகம் நீ பாடவா

இசைதேவன் இசையில்
அசைந்தாடும் கொடியே
பனி தூங்கும் மலரே...உயிரே...[அதிகாலை ...]

அழகு சிலை இதயம் தனை வழங்கும் உனக்கு
ரதி மகளும் அடிபணியும் அழகு உனக்கு [அழகு...]
தவித்தேன் உன் அணைப்பில் தினம் துடித்தேன் என் உயிரே
இனித்தேன் என் இதயம் தனை இணைத்தேன் என் உயிரே
சுவைத்தாலும் திகட்டாத கவிதைகளை படித்தேன்
[அதிகாலை ...]


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:08:24 PM

படம்: கர்ணா
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி


மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
(மலரே)

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2)
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா
(மலரே)

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு (2)
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே
(மலரே
)

Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:09:14 PM
படம்: உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி

ஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி (2)
அழகான கைகள் மீட்டும் வேளை...
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

நதியின் வேகம் பருவ மோகம் கடலைச்சேர மாறிபோகும்
நாளும் காதல் ராகம் பாடும் பாடும்
இதழில் போடும் இதழின் காயம் இதழில் ஆரும் இனிமையாகும்
தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம்
உன்னை வாழ்த்தி பாடும் பாடல் உதய ராகமோ
நம்மை வாழ்த்தும் நமது உலகம் உதயமாகுமோ
புது கனவு பாலம் தெரிந்ததே...நெஞ்சினில் இன்பமும் கொஞ்சுது கெஞ்சுது

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை...
ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை

இளமைக்காட்டில் இனிமைக்கூட்டில் இருக்கும் தேனை எடுக்கும்போது
காலம் நேரம் தேவை இல்லை இல்லை
மலையின் ஓரம் மலர்ந்த பூவை பறிக்கும் வேடன் இருக்கும்போது
காவல் தாண்டும் முல்லை முல்லை
மானும் மீனும் சேர்ந்து மாயம் செய்வதேனடி
வானம் போடும் காமன் நேரம் கூடத்தானய்யா
அட மனதில் சாரல் அடித்ததா...கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை...
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
ஒரு ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:10:26 PM
படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ / S ஜானகி


நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோல வனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்
ஒன்னுக்கொன்னு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும் மொத்தத்திலே
கட்டழகன் அம்மாடி என்ன சொல்ல
(நூறு வருஷம்..)

உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓம குச்சிப்போல் புடிச்சாரு தாரம்
தாவி அணைச்சாக்கா தாங்காது பாரம்
இவரு ஏழு அடி
நடக்கும் ஏணியடி
நிலவை நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு
மனைவி குள்ளமணி
உயரம் மூனு அடி
இரண்டும் இணைஞ்சிருந்தா கேளி பண்ணும் ஊரு
ரெட்ட மாட்டு வண்டி வரும்போது
நெட்டை குட்டை என்றும் இணையாது
இந்த ஒட்டகந்தான்
கட்டிக்கிட குட்ட வாத்தை புடிச்சான்
நூறு வருஷம் ஹே ஹே..
(நூறு பருஷம்...)

புருஷன் பொஞ்சாதி பொருதந்தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தம்தான் தோணும்
அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு
இல்ல நீ வாழு தனியாழா நின்னு
முதல்ல யோசிக்கணும்
பிறகு நேசிக்கணும்
மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு
உனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊரறிய மாலை கட்டி போடு
சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டும் ஒட்ட விட்டால்
கல்யாணம்தான் கசக்கும்
(நூறு வருஷம்...)
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:11:59 PM
படம்: ஊரு விட்டு ஊரு வந்து
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S ஜானகி, இளையராஜா

ஹேய் தந்தன தந்தன தந்தா
சொர்கமே என்றாலும்
அது நம் ஊரைப் போல வருமா?
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடா ஆகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா?
(சொர்கமே..)

ஏரிக்கரை காத்தும் ஏலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கலையே
பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலை இல்லையே
வெத்தலைய மடிச்சு மாமன் அதை கடிச்சி
துப்ப ஒரு வழியில்லையே
ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கி குளிக்க
அட ஒரு ஓடை இல்லயே
இது ஊரு என்ன ஊரு நம் ஊரு ரொம்ப மேல்
அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு
ஒரு தாகம் தீர்க்க அது மோரு
(சொர்கமே..)

மாடு கண்ணு மேய்க்க மேயிறதைப் பார்க்க
மந்தவெளி இங்கே இல்லையே
ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
அரசமரம் மேடை இல்லையே
காளை ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே
தோழிகளை அணைச்சு சொல்லி சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே
ஒரு எந்திரத்தை போல அட இங்கு உள்ள வாழ்க்கை
இத எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை
நம் ஊரை போல ஊரும் இல்லை
(சொர்கமே என்றாலும்..)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:12:48 PM

படம் : அன்புள்ள ரஜினிகாந்த்
இசை : இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி

தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட


பனி விழும் புல்வெளியில் தினம்தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்


(உனை நினைத்தேன்)

இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
காதல் யோகம்தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்

(உனை நினைத்தேன்)



Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:13:32 PM
படம்: மௌன கீதங்கள்
இசை: கங்கை அமரன். *
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி

மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊருதம்மா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதய்யா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊர்றுதய்யா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்ம....

மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்
மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்
மழை மேகம் நானாகவா மலர் தேகம் நீராட்டவா
மடி ஏந்தி தாலாட்டவா மனமார சீராட்டவா
வெரும் ஏக்கம் ஆகாதம்ம விட்டு போகாதம்ம
நான் கொஞ்சாம தீராதம்மா..... ஆமா....

கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும் ஒரு பூமாலையும்
திரு பொனூஞ்சலும் அடி நான் காண நாளாகுமோ
கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும் ஒரு பூமாலையும்
திரு பொனூஞ்சலும் அடி நான் காண நாளாகுமோ
திருனாளும் தானே வரும்
உனைதேடி தேனே வரும்
வரும்போது ஓலை வரும்
அது வந்தா மாலை வரும்
அட நானும் உன்போலத்தான்
அத கொண்டாடத்தான்
எதிர்பார்த்தேனே அன்னாளை தான்... ஆமா..


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:14:38 PM
படம்: சட்டம் என் கையில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசிய வாசுதேவன், S ஜானகி
வரிகள்: கண்ணதாசன்



ஆழக் கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜா கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
(ஆழக் கடலில்..)

மஞ்சலிட்டு பின்னல் இட்டு
மச்சான் தந்த பிஞ்சு மொழி
நெஞ்சிரண்டில் தொட்டில் கட்டி
பால் குடிக்கும் வண்ண கிளி
கோவிலில் ஏற்றினான் குத்துவிளக்கு
கண்ணா ராஜா ஐயா சின்னைய்யா
(அழக் கடலில்..)

வெள்ளி அலை நீச்சல் இட்டு
கட்டு மரம் சென்றால் என்ன
பெற்றெடுத்த பிள்ளை முகம்
நெஞ்சை விட்டு செல்லாதம்மா
ஓடம் நான் தென்றல் நீ என்னை நடத்து
கண்ணே பொண்ணே அம்மா சின்னம்மா
(ஆழக் கடலில்..)

சிப்பிக்குள்ளே முத்து வச்சு
உன்ன தந்த அப்பா கண்ணே
சிப்பியிலும் தங்க சிப்பி
உன்ன பெத்த அம்மா கண்ணே
நீந்தினோம் மூழ்கினோம் உன்னை எடுக்க
கண்ணா ராஜா ஐயா சின்னைய்யா
(ஆழக் கடலில்..)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:15:32 PM
படம்: ஆனந்த ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி

மாமரச்சோலையில் பூமழை தேடுது
மழை மேகம் வர வேண்டும்
சில்லுன்னு காத்தாடிச்சா சந்தோஷம் சேருது..
சில்லுன்னு காத்தாடிச்சா சந்தோஷம் சேருது..

மேகம் கருக்குது மழை வரை பார்க்குது
வீசியடிக்குது காத்து காத்து

ஏன் நிறுத்திட்டீங்க? பாட்டு நல்லா இருக்கு
இன்னொரு தடவை பாடுங்களேன்
அது.. அது வந்து..
இந்த பாட்டு எதுக்கு உங்களுக்கு?
பாட்டு ரொம்ப நல்லா இருக்கு
கேட்கணும் போல ஆசையா இருக்கு
அட.. பாடுங்கண்ணா..

மேகம் கருக்குது மழை வரை பார்க்குது
வீசியடிக்குது காத்து
காத்து மழை காத்து
காத்து மழை காத்து
(மேகம் கருக்குது...)
ஒயிலாக மயிலாடும் அலை போல
மனம் பாடும்
(மேகம் கருக்குது...)

தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன
(தொட்டு தொட்டு...)
தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து...
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து..
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
என்னனம்மோ ஆகிப்போச்சு
சேராமல் தீராது
வாடைக் குளிரில் வாடுது மனசு
(மேகம் கருக்குது...)

பூவுக்குள்ள வாசம் வச்சான்
பாலுக்குள்ள நெய்யை வச்சான்
(பூவுக்குள்ள..)
கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் பனசு
(கண்ணுக்குள்ள..)
பார்த்த கண்ணு சொக்கி சொக்கி
பைத்தியம்தான் ஆகிப்போச்சு
நீ..
நீ வாடி நீ வாடி
ஆசை மயக்கம் போடுற வயசு
(மேகம் கருக்குது...)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:17:08 PM
படம்: கடல் மீன்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி

தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது
தார்மீகக் கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

(தாலாட்டுதே)


அலை மீது ஆடும்
உள்ளம் எங்கும்
ஒரே ராகம்

நிலை நீரில் ஆடும்
மீன்கள் ரெண்டும்
ஒரே கோலம்

மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்

எண்ணம் ஒரு வேகம்
அதில் உள்ளம் தரும் நாதம்

(தாலாட்டுதே வானம்)


இரு கண்கள் மோதி
செல்லும் போதும்
ஒரே எண்ணம்

ஒரு சங்கில் தானே
பாலை உண்ணும்
ஒரே ஜீவன்

சொர்க்கத்திலே இது முடிவானது!
சொர்க்கம் என்றே இது முடிவானது!

காதல் ஒரு வேதம்
அது தெய்வம் தரும் கீதம்

(தாலாட்டுதே வானம்)



Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:17:48 PM
படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
பாடியோர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி


கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே


மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பதுன்பம் யாரால


பறக்கும் திசையேது இந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது
பாறையிலே பூ முளைச்சு பார்த்தவங்க யாரு
அன்பு கொன்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே


(கொடியிலே)




Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:18:31 PM
படம்: கிழக்குச் சீமையிலே
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியோர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி



கத்தாழங் காட்டு வழி
கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே
வாக்கப்பட்டு போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா


தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதும்மா
தங்கம் போல நான் வளர்த்த தங்கச்சி பிரியக் கண்டு
கத்தாழங் காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா
வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிப்புட்டா பாதி உயிர் போச்சு

(வண்டி மாடு எட்டு வச்சு)


அண்ணே போய் வரவா அழுது போய் வரவா
மண்ணே போய் வர்வா மாமரமே போய் வரவா
அணில் வால் மீச கொண்ட அண்ணே உன்னைவிட்டு
புலிவால் மீசை கொண்ட புருசனோட போய் வரவா
சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம்தானே
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம்தானே

(வண்டி மாடு எட்டு வச்சு)



Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:19:11 PM
படம்: காற்றினிலே வரும் கீதம்
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி



ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய்

(ஒரு வானவில்)


வளர் கூந்தலின் மணம் சுகம் இதமாகத் தூங்கவா
வன ராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா
மடி கொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே
கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற கலைஞன் எங்கே
கலைகள் நீ கலைஞன் நான் கவிதைகள் பாடவா

(ஒரு வானவில்)


உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை
உனக்காகவே மலர்ந்தது கலைக் கோயில் மல்லிகை
இனிக்கின்ற காலம் தொடராதோ இனியெந்தன் உள்ளம் உனது
அணைக்கின்ற சொந்தம் வளராதோ இனியெந்தன் வாழ்வும் உனது
தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம்

(ஒரு வானவில்)



Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:20:14 PM
படம்: அந்த ஏழு நாட்கள்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி


சப்த ஸ்வரதேவி உணரு
இனி என்னில் வர தானமருளு
நீ அழகில் மமமாவில் வாழும்
என் கருவில் ஒளி தீபமேற்று
சப்த ஸ்வரதேவி உணரு

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்
கவிதை அறங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

பார்வை உன் பாதம் தேடி
வரும் பாவை என் ஆசை கோடி
இனி காமன் பல்லாக்கில் ஏறி
நாம் கலப்போம் உல்லாச ஊரில்
உன் அங்கம் தமிழோடு சொந்தம்
அது என்றும் திகட்டாத சந்தம்

(கவிதை அரங்கேறும்)


கைகள் பொன்மேனி கலந்து
மலர்ப்பொய்கை கொண்டாடும் விருந்து
இனி சொர்க்கம் வேறொன்று எதற்கு
எந்த சுகமும் ஈடில்லை இதற்கு
மனம் கங்கை நதியான உறவை
இனி எங்கே இமை மூடும் நிலவை


(கவிதை அரங்கேறும்)


நீரில் நின்றாடும் போதும்
சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்
அது நேரில் நீ வந்த மாயம்
இந்த நிலைமை எப்போது மாறும்
என் இளமை மழை மேகமானால்
உன் இதயம் குளிர் வாடை காணும்

(கவிதை அரங்கேறும்)



Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:23:48 PM
படம்: ஆட்டோ ராஜா
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி


சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது

கையின்றே செங்காந்தழ் மலரே
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே....

அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா..அ...
கொஞ்சம் தா..ஆ..
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே

ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே அனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டு...ஆ
மெய் தொட்டு..ஆ
சாமத்திலே தூங்காத விழிகளில்
சந்தித்தேன் என்னென்ன மயக்கம்
தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:24:33 PM
படம்: சுவரில்லாத சித்திரங்கள்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி  

காதல் வைபோகமே
காணும் நன்னாள் இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண் பாடுமே

(காதல் வைபோகமே)

கோடை காலத்தில் தென்றல்
குளிரும் பெளர்ணமி திங்கள்
வாடைக் காலத்தில் கூடல்
விளையாடல் ஊடல்

வானம் தாலாட்டுப் பாட
மலைகள் பொன் ஊஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட கூட

பூவில் மேடையமைத்து
பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு துடிதுடிப்பு
இது கல்யாண பரபரப்பு


(காதல் வைபோகமே)


எண்ணம் என்னென்ன வண்ணம்
இளமை பொன்னென்று மின்னும்
எங்கும் ஆனந்த ராகம்
புது தாளம் தாபம்

மேகலை பாடிடும் ராகம்
ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம்
சமபோகம் யோகம்

வாழ்ந்தால் உந்தன் மடியில்
வளர்த்தால் உந்தன் அருகில்
அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்
ஏழேழு ஜென்மம் எடுப்பேன்

(காதல் வைபோகமே)


 
 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:25:22 PM
படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி  


வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போனதேன்
(வா வெண்ணிலா..)

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாயே பாவம்
ஒரு முறையெனும் திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் எனக்கது போதும்
உன்னைச் சேர உனைச் சேர எதிப்பார்த்து
முன்னம் ஏழு ஜன்மம் ஏங்கினேன்
(வா வெண்ணிலா..)

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
இணை பிரியாமல் துணை வர வேண்டும்
உனக்காக உனக்காக பனிக்காற்றை
தினம் தூது போக வேண்டினேன்
(வா வெண்ணிலா..)



 
 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:26:08 PM
படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி


ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
(ஊரு சனம்..)

குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு ஆச இள மயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்
ஒத்தையிலே அத்த மக ஒன்ன எண்ணி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே
(ஊரு சனம்..)

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா மால தோளில் ஏறாதா
ஒன்ன எண்ணி நானே வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன் ஓலப் பாய போட்டு வச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வச்சேன்
(ஊரு சனம்)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:27:07 PM
படம்: வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி
வரிகள்: வைரமுத்து

அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்ப்லியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
(அழகு..)

ஊதாத புல்லாங்குழல் ஒரு பொழுதும் சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சல் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா
பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது
நீரூற்றுப் பாயாத நிலம்போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றது
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வழ்வில் எதற்கு இந்த இளமை
பதிலேதும் இல்லாத கேள்வி
(அழகு..)

ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாலாட்டில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் துடிக்கின்றது
விடியாத இரவென்றும் கிடையாது என்று
ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது
வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
வேரென்ன நான் செய்த பாவம்
(அழகு..)
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:32:18 PM
படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி


மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திரு தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்த கோயிலின் மணி வாசலை
இன்று மூடுதல் முறையோ
(மணியோசை..)

கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தாள் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன் ஆ..
கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தாள் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்
பேசக் கூடாதோ
ராதை மனம் ஏங்கலாமோ
கண்ணன் முகம் வாடாலாமோ
வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ
(மணியோசை..)

பாதை மாறிப் போகும்போது
ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போகும்போது
ராகம் தோன்றாது
பாதை மாறிப் போகும்போது
ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போகும்போது
ராகம் தோன்றாது
பாடும் புது வீணை இங்கே
ராகம் அதில் மாறும் அங்கே
தாளம் மாறுமோ ராகம் சேறுமோ
(மணியோசை..)


 
 
 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:33:03 PM
படம்: சலங்கை ஒலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபினயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேரு பெருமே
ராகங்களே ஆ.. பழகுவதே ஆ..
ராகங்களே பழகுவதே பாவங்களே கலையசைவே
குழலோடு உயர்வுகள் இணைகின்ற தவமிது
(நாத..)

கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பௌர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒலி தீபம்
நவரச நடனம் தனிதனி தனிசா
ஜதி தரும் அமுதம் தனிதனி தனிச
நவரச நடனம் ஜதி தரும் அமுதம்
அவன் விழி அசைவில் எழுதுளி அசையும்
பரதமென்னும் நடனம் ஆ..
பிறவி முழுதும் தொடரும் ஆ..
பரதமென்னும் நடனம் பிறவி முழுதும் தொடௌம்
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
திமிதிமி திமிதிமி
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாழும்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நடனம்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நாட்டியம்
உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவ கவசம்
நடராஜ பாதம் நவரசம்
திரன திரன திரதிர திரதிர
(நாத..)



 
 
 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:34:02 PM
படம் : அக்னி நட்சத்திரம்
பாடியவர் : S ஜானகி
இசை : இளையராஜா  


ஒரு பூங்காவனம் புதுமணம்
அதில் ரோமாஞ்சனம் தினம்தினம்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்...)

நான் காலைநேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால்நடக்கும் தேவதை
என் கோவில் இந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போலப் பேசிடும்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்...)

நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலைகொடுத்து வாங்குவேன்
வெண் மேகக் கூட்டம் யாவையும்
என் மெத்தையாக்கித் தூங்குவேன்
சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்...)



 
 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:34:53 PM
படம்: தூங்காதே தம்பி தூங்காதே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி  

வருது வருது அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது
வருது வருது அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது
வேங்கை நான் தான் சீறும் நாள்தான்
(வருது..)

வந்தானாம் வந்தானாம் ஊமைத்துரை
வாலாட்டிப் பார்த்தானாம் சீமைத்துரை
வந்தானாம் வந்தானாம் ஊமைத்துரை
வாலாட்டிப் பார்த்தானாம் சீமைத்துரை
அதுதான் கதையாச்சு என் கதையும் அதுவாச்சு
வாதும் சூதும் வம்புகள் செய்தால்
வருவேன் அடியேன் அங்கேதான்
உனைப்போல ஒருவன் துணிந்தால் போதும்
தர்மம் ஜெயிக்கும் இங்கேதான்
(வருது..)

கண்ணான கண்ணா உன் சூரத்தனம்
கண்டாலே ஓடாதோ கள்ளத்தனம்
கண்ணான கண்ணா உன் சூரத்தனம்
கண்டாலே ஓடாதோ கள்ளத்தனம்
சும்மாத் தொடமாட்டேன்
நான் தொட்டா விடமாட்டேன்
புடிச்சா நான் தான் உடும்பாப் புடிப்பேன்
அதுலே நான் தான் கில்லாடி
உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு
நிழலாய் வருவேன் பின்னாடி
(வருது..)

 
 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:35:36 PM
படம்: 16 வயதினிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசிய வாசுதேவன், S ஜானகி

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையிலதானே இப்போ காணுது பூமி
இது மட்டும்தானா இன்னும் இருக்குது சாமி

கூத்து மேடை ராஜாவுக்கு நூற்றிரெண்டு பொண்டாட்டியாம்
நூற்றிரெண்டு பெண்டாட்டியும் வாத்து முட்டை போட்டதுவாம்
பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு
பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு
மொத்தம் இருபத்து ஆறு
சின்ன குட்டிகளின் மேல் ஆணை புது சட்டிகளின் மேல் ஆணை
இரு வள்ளுவன் பாட்டிலுண்டு
பரம்பரை கதையிலுண்டு கதையல்ல மகராசி
காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே
பாட்டெடுத்து பாடிப்புட்டு நோட்டமிட்ட சின்னப் பொண்ணு
சந்தைக்கு போனா நானும் சாப்பிட்டு வர வா
சம்பந்தம் பண்ணா உனக்கு சம்மதம்தானா
காக்கையில்லா சீமையே ஏ...

காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே
பாக்கு வச்சி நேரம் பாத்து வச்ச ஆசை மச்சான்
சந்தைக்கு போறேன் நீங்க சாப்பிட்டு வாங்க
சம்பந்தம் பண்ண எனக்கு சம்மதம் தாங்க
அட இந்த பக்கம் பாருங்களே
என் கன்னி மனம் கேளுங்களே
அட ஏண்டி என்ன மஞ்சளுக்கு கேக்குறீயா
பழைய நெனப்புதான் பேராண்டி பழைய நெனப்புதான்
கிட்டப்பாவின் பாட்டை கேட்டு சின்னப்பாவை நேரில் பார்த்தேன்
கொட்ட கொட்ட வருகுதம்மா சங்கீதமா பெருகுதம்மா
மேடைக்கு போனா எனக்கு வீட்டுல பொண்ணு
பாட்டுல நின்னா நானும் நூத்துல ஒன்னு
என் திறமையை காட்டட்டுமா
இரண்டு சங்கதியை போடட்டுமா


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:39:49 PM
படம்: 16 வயதினிலே
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி


செந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ
(செந்தூரப்பூவே..)

தென்றலை தூதுவிட்டு ஒரு சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னி பருவத்தின்  வண்ண கனவிதுவே
எண்ண இனிக்குது அந்த நினவதுவே வண்ணப்பூவே
தென்றல் காற்றே என்னை தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)

நீலக்கருங்குயிலே தென்னை சோலை குருவிகளே
கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
காணும் வழியெங்கும் பூவை இரைத்திடுங்கள்
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத்தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:41:21 PM
படம்: அபூர்வ சகோதரர்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

வாழவைக்கும் காதலுக்கு ஜே
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே
தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜே
வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜே
(வாழவைக்கும்..)

நாணம் என்னை விட்டுச்சே
மோகம் என்னை தொட்டுச்சே
கையணைக்க கையணைக்க
கன்னி விழி பட்டுச்சே
காளை மனம் கெட்டுச்சே
மெய்யணைக்க மெய்யணைக்க
கள்ளோடும் முள்ளோடும்
தள்ளாடும் செம்பூவை
நீயும் அள்ள அம்மம்மா
என்னென்ன ரசிச்சே
முன்னாலும் பின்னாலும்
முக்காட இந்நேரம்
மோகம் கொண்டு
அப்பப்பா தப்புக்கு தவிச்சே
பார்வை தன்னில் நாளும்
நீந்தும் பாவை ஒரு மீனாச்சே
தேகம் தன்னை நாளும் மூட
ஆடை இந்த ஆளாச்சே
(வாழவைக்கும்..)

தேன் மழையும் கொட்டுச்சே
தேகம் எங்கும் பட்டுச்சே
வெட்கம் விட்டு பக்கம் நிற்க
பெண் மனது அஞ்சிச்சே
போதும் என்று உன்னிடம்
உன்னிடம் வந்துச்சே
வாடை என் நானும் வந்தேன்
வாழை மடல் போலாச்சே
வாரி எனை நானும் தந்தேன்
வாலிவந்தான் மேலாச்சே
(வாழவைக்கும்..)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:41:57 PM
படம் : சத்ரியன்
இசை : இளையராஜா
பாடியவர் : S ஜானகி

பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பாட்டெடுப்போம் வா வா... பூத்திருப்போம் பூவா..
கட்டுக்காவல் விட்டுப்போக பட்டுப்பூச்சி வட்டம் போடும் நாள்தான்

(பூட்டுக்கள் போட்டாலும்...)

பாடத்தை தள்ளி வைப்போம்
பாட்டுக்கள் அள்ளி வைப்போம்
ஆனந்த கோலத்துக்கு ஆரம்ப புள்ளி வைப்போம்
பறவை போல பறந்து பறந்து
படிப்பை கொஞ்சம் மறந்து மறந்து
ஆணையிட்டு ஆடவைத்தால் தாமரை பூங்கொடி ஆடிடுமா

(பூட்டுக்கள் போட்டாலும்...)

மாமர சிட்டுக்களே.. மாதுளை மொட்டுக்களே
காலங்கள் உள்ளவரை... நான் உங்கள் பக்கத்திலே...
அறிவு நாளும் வளர வளர
தினமும் நானும் கதைகள் கூற
பூங்குருவி தேனருவி ஆடிட வந்ததென் கைதழுவி

(பூட்டுக்கள் போட்டாலும்...)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:43:07 PM

திரைப்படம் : பாசம்
பாடலைப்பாடியவர் : எஸ் . ஜானகி

ஜல்ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சலவென சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திடவேண்டும் இரவுக்குள்ளே...

காட்டினில் ஒருவன் எனைக்கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்று
கண்ணில் இருந்ததைக் கொடுத்துவிட்டேன்
(ஜல்ஜல் ஜல்)

அவன் தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல்முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்
(ஜல் ஜல் ஜல்)

இன்றே அவனை கைது செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்வதும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது
(ஜல் ஜல் ஜல்)




Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:43:46 PM
படம்: சலங்கை ஒலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி


மௌனமான நேரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

இளமைச் சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடிக் கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி
ஊதலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் ஈரமோ
கொடியின் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
காதலான நேசமோ கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:44:27 PM
படம் : தனிக்காட்டு ராஜா(1982)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி


சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஒசை
நீங்காத ஆசை ஆ ஆ நீங்காத ஆசை

(சந்தனக் காற்றே)

நீர் வேண்டும் பூமியில் பாயும் நதியே
நீங்காமல் தோள்களில் சாயும் ரதியே
பூலோகம் அ அ அ தெய்வீகம் அ அ அ
பூலோகம்.. மறைய மறைய.. தெய்வீகம்.. தெரியத் தெரிய
வைபோகம் தான்...

(சந்தனக் காற்றே)

கோபாலன் சாய்வதோ கோதை மடியில்
பூபாணம் பாய்வதோ பூவை மனதில்
பூங்காற்றும் அ அ அ சூடேற்றும் அ அ அ
பூங்காற்றும்... தழுவத் தழுவ... சூடேற்றும்... சரியத் சரிய
ஏகாந்தம் தான்...

(சந்தனக் காற்றே)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:45:03 PM
படம்: ஈரமான ரோஜாவே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி


தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது உனை வரத்தான்
(தென்றல்..)

மேடையேற கூடுமோ மீண்டும் நமது நாடகம்
நானும் நீயும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம்
யாரைச் சொல்லி நோவது காலம் செய்த கோலம்
உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்
கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே
என்ன செய்வது சொல்லடி முல்லையே
கனவில் மட்டுமே கைகள் சேரலாம் கண்ணா
(தென்றல்..)

ஜீவன் ரெண்டும் சேர்ந்தது தேவன் வகுத்த சாசனம்
காதல் எந்த நாளிலும் கவிதை போல சாஸ்வதம்
என்று வந்த நேசமோ பூர்வ ஜென்ம யோகம்
இன்னும் ஏழு ஜென்மமும் வளரும் இந்த யாகம்
மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்
காதல் ஓவியம் பார்வையில் தீட்டலாம்
பிரிவு என்பதே உறவுக்காகத்தான் கண்ணே
(தென்றல்..)



 
 
 
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:45:45 PM
படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே


எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என் உள்ள வீணை ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சம் காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும்
நெஞ்சின் தாபம் ஏயும் ஏற்றும்

(காற்றில் எந்தன் கீதம்)

நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும்
நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும்

மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம்
யாவும் இங்கே நெஞ்சம் தேடும்


(காற்றில் எந்தன் கீதம்)



Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:46:28 PM
படம்: செம்பருத்தி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S ஜானகி

நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது
கவிதைகள் மலர்திடும்
காண்பவை யாவுமே தேன்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்

தென்றல் தேரில் நான் தான்
போகும் நேரம் பார்த்து
தேவர் கூட்டம் பூ தூவி
பாடும் நல்ல வாழ்த்து
கண்கள் மூடி நான் தூங்க
திங்கள் வந்து தாலாட்டும்
காலை நேரம் ஆனாலே
கங்கை வந்து நீராட்டும்
நினைத்தால் இதுப் போல் ஆகாததேது
அணைத்தால் உனைத்தான்
நேங்காது பூ மாது
நெடு நாள் திருத்தோள்
எங்கும் நீ கொஞ்ச
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்

மின்னல் நெய்த சேலை
மேனி மீது ஆட
மிச்சம் மீதி காணாமல்
மன்னன் நெஞ்சம் வாட
அர்த்த ஜாமம் நான் சோடும்
ஆடை என்றும் நீயாகும்
அங்கம் யாவும் நீ மூட
ஆசை தந்த நோய் போகும்
நடக்கும் தினமும்
ஆனந்த யாகம்
சிலிர்க்கும் அடடா
ஸ்ரீதேவி பூந்தேகம்
அணைத்தும் வழங்கும்
காதல் வைபோகம்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
(நிலா காயும்..)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:47:21 PM
திரைப்படம் : நான் பாடும் பாடல்
பாடலைப்பாடியவர்கள்:ஜானகி ,சுரேந்தர்
இசையமைத்தவர்: இளையராஜா

ஆண்:தேவன் கோயில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று
பெண்:தேவன் கோயில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் என்று
ஆண்: கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
பெண்: உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது ( தேவன் கோயில்)

ஆண்: நானும் நின்றேன் சோலை ஓரம்
பெண்: நீயும் வந்தாய் மாலை நேரம்
ஆண்:பார்வை நான்கும் பேசும் ஜாலம்
பெண்:பார்த்தால் போதும் வெள்ளம் மோதும்
ஆண்: காதல் தேவியே நீ என் ஜோதியே
பெண்: ஊஞ்சல் போலே என்ணம் கோடி
நெஞ்சில் ஆடும் உன்னை நாடி
ஆண்: கண்ணே நீயும் கேளாயே
பெண்: அன்பே நீயும் எங்கே வந்தாய்
யாரைக்கண்டு இங்கே நின்றாய்

ஆண்: உள்ளம் என்ற மேடை உண்டு ஆடவா
பெண்: கண்ணில் கோடி ராகம் கொண்டு பாடவா
ஆண்: தேவன் கோயில் தீபம் ஒன்று
பெண்:ராகம் பாடும் நேரம் என்று

பெண்:வானும் காற்றும் உந்தன் தேவை
ஆண்:எந்தன் வாழ்வில் வந்தாய் நீயே
பெண்:உன்னை எண்ணி ஏங்கும் பூவை
ஆண்: உந்தன் அன்பே என்றும் தேவை
பெண்:நாளை ஊர்வலம் நாமும் காணுவோம்
ஆண்:காலம் கோடி ஆகும் போதும்
காதல் கீதம் என்றும் வாழும்
பெண்: கண்ணா நீயும் கேளாயோ
ஆண்: தேவன் கோயில் தீபம் ஒன்று
பெண்: கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
ஆண்: உள்ளம் உந்தன்வாசல் தேடி வந்தது
பெண்: தேவன் கோயில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று





Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:48:12 PM
படம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
பூந்தளிராட பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடைக் காற்றைக்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள் - இனி
நாடும் சுபகாலங்கள்

(பூந்தளிராட பொன்மலர் சூட)

காதலை ஏற்றும் காலையின் காற்றும்
நீரைத் தொட்டுப் பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனைப் பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே

கோடிகள் ஆசை கூடிய போது
கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே
தேடிடுதே பெண் பாட்டின் ராகம்

(பூந்தளிராட பொன்மலர் சூட)

பூமலர் தூவும் பூமரம் நாளும்
போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே
பூவிரலாலும் பொன்னிதழாலும்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் சொல்லுதே

பூமழை தூவும் புண்ணிய மேகம்
பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே
ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்

(பூந்தளிராட பொன்மலர் சூட)



Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:48:47 PM
படம்: கல்லுக்குள் ஈரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி


சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்

(சிறு பொன்மணி)

விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும்
இனி புலரும் பொழுதும்

தெளியாதது எண்ணம்
கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது
அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது
கிளி பாடுது உன் நினைவினில்

(சிறு பொன்மணி)

நதியும் முழு மதியும்
இரு இதயம்தனில் பதியும்
ரதியும் அதன் பதியும்
பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம்
விளையானது மஞ்சம்
கதை பேசுது கவி பாடுது
கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம்
பயிரானது உன் நினைவுகள்

(சிறு பொன்மணி)



Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:49:27 PM
படம்: இதயக்கோவில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுதான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுதான்

சோர்ந்தபோது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே

(பாட்டுத் தலைவன் பாடினால் )

காதல் பேசும் தாழம்பூவே
ஓவியம் ஆனதே கைகள் மீது
கைகள் வண்ணம் தீட்டும் நேரம்
ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்
பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே
காதலே வாழ்கவே ஆயிரம் காலமே
நீதானே தாலாட்டும் நிலவே

(பாட்டுத் தலைவன் பாடினால் )

பாதி ஜாமம் சாயும் போதும்
பால்நிலா வானிலே காதல் பேசும்
ஊரைத் தூக்கம் ஆளும்போது
பார்வைகள் பேசுதே பாவையோடு
காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்
ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்
நாந்தானே தாலாட்டும் நிலவு

(பாட்டுத் தலைவன் பாடினால்)



Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:50:03 PM
படம்: பகல் நிலவு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, S ஜானகி


பூமாலையே தோள் சேரவா
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( ஏங்கும் இரு )
இளைய மனது ( இளைய மனது )
இணையும் பொழுது ( இணையும் பொழுது )
இளைய மனது ( தீம்தன தீம்தன )
இணையும் பொழுது ( தீம்தன தீம்தன )
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )

நான் உனை நினைக்காத நா…ளில்லையே
தேனினை தீண்டாத பூ… இல்லையே (தனனா)
நான் உனை நினைக்காத நா…ளில்லையே (என்னை உனக்கென்று கொடுத்தேன்)
தேனினை தீண்டாத பூ…வில்லையே (ஏங்கும் இளங்காதல் மயில்நான்)
தேன்துளி பூவாயில் (லலலா) பூவிழி மான்சாயல் (லலலா)
தேன்துளி பூவாயில் (லலலா) பூவிழி மான்சாயல் (லலலா)
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
நாளும் பிரியாமல் காலம் தெரியாமல் கலையெலாம் பழகுவோம் அனுதினம்

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா

(லலல லலலா)
கோடையில் வாடாத கோயில் புறா (லலலா)
காமனைக் காணாமல் காணும் கனா (லலலா)
கோடையில் வாடாத கோயில் புறா (ராவில் தூங்காது ஏங்க)
காமனைக் காணாமல் காணும் கனா (நாளும் மனம்போகும் எங்கோ)
விழிகளும் மூடாது (லலலா) விடிந்திடக் கூடாது (லலலா)
விழிகளும் மூடாது (லலலா) விடிந்திடக் கூடாது
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
காற்று சுதி மீட்ட காலம் நதி கூட்ட கனவுகள் எதிர் வரும் அணுகுவோம்

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா (ஏங்கும் இரு)
இளைய மனது ( இளைய மனது )
இணையும் பொழுது ( இணையும் பொழுது )
இளைய மனது ( தீம்தன தீம்தன )
இணையும் பொழுது ( தீம்தன தீம்தன )
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:50:40 PM
படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: S ஜானகி

நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய்
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே

தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சிலே...ஊஞ்சலே...

ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே
வான்னிலா நாணுமே முகிலிழுத்துக் கண் மூடுமே
(நெஞ்சினிலே)

ஹேய்க் குருவாரிக் கிளியே குருவாரிக்கிளியே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
(தங்கக்)

குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாந்தேடத்தான்
(நெஞ்சினிலே)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:51:19 PM
படம்: ஆத்மா
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்கள்: ஜேசுதாஸ், எஸ்.ஜானகி


கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதைத் தந்தாளே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

(கண்ணாலே)

கடற்கரைதனில் நீயும் நானும் உலவும்பொழுது
பறவையைப் போல் கானம் பாடி பறக்கும் மனது
இங்கு பாய்வது புதுவெள்ளமே
இணை சேர்ந்தது இரு உள்ளமே
குளிர்வாடை தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன் துணையிலே
இளம்மேனி உன் வசமோ

(கண்ணாலே)

உனக்கென மணிவாசல் போலே மனதைத் திறந்தேன்
மனதிற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்
வளையோசைகள் உன் வரவைக் கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று
நெடுங்காலங்கள் நம் உறவைக் கண்டு
நமை வாழ்த்திட நல் இதயம் உண்டு
இன்ப ஊர்வலம் இதுவோ

(கண்ணாலே)



Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:51:59 PM
படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: MS விஸ்வநாதன், இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுரமணியம், S ஜானகி

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...

தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க...

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்... இணைவோம்...
இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா...

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ...

தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:52:41 PM
படம்: தெய்வ வாக்கு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, S ஜானகி

வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான்
புள்ளி வைத்து புள்ள் போட்டான் புது கோலம்தான்
சொல்லித்தர சொல்லி கேட்டு தினமும் சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லைச்சரம் கொண்டு சூடினான்
(வள்ளி வள்ளி..)

சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது
கண்ணால் உண்டானது கைகள் த்ட இந்நாள் ஒன்றானது
வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வெடித்த வாசப்பூ
அன்புத்த்தேன் இன்பத்தேன் கொட்டுமா
இந்தப்பூ சின்னப்பூ கண்ணிப்போகும்கன்னிப்பூ
வண்டுதான் வந்துதான் தட்டுமா
என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
நாணல் போல தேகம் தன்னில் நாணம் என்னம்மா
(வள்ளி வள்ளி..)

செந்தழ் புல்லாங்குழல் வாண்டியதை ஏந்தும் மன்னன் விரல்
மன்னன் சொல்லும் கவி மங்கைக்கது காதல் நீலாம்பரி
அம்மம்மா அப்பப்பா இன்பம் தரும் பானங்கள்
இன்றைக்கும் என்றைக்கும் தித்திக்கும்
மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் கங்கை நீ
உன்னைத்தான் என் கண்கள் சந்திக்கும்
எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்
உன்னையின்றி வேறு இங்கு யாரும் இல்லையே
(வள்ளி வள்ளி..)
Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:53:21 PM
படம்: டிசம்பர் பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜெயசந்திரன், S ஜானகி

அழகாகக் சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ
மழைக்காலத்தில் லாலலாலலா
நிழல் மேகங்கள் லாலலாலலா
மலையோரத்தில் லாலலாலலா
சிறு தூரல்கள் லாலலாலலா
இளவேனில் காலம் ஆரம்பம்
லாலலாலா லாலலாலா
(அழகாகக் சிரித்தது..)

நதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்
நாணல் நானாகத்தான் காத்துக்கிடந்தேன்
காற்றே உனை பார்த்ததும் கை சேர்த்தேன்
மானே உன் அழகினில் நானே ஓவியம் வரைந்தேனே
கண் ஜாடை சொல்ல
நானே என் இதயத்தை தானே எடுத்துக் கொடுத்தேனே
நீ சொந்தம் கொள்ள
பனி தூங்கும் ரோஜாவே
எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள் இதுதான் வரவோ
நாணம் என்ன அச்சம் என்ன
(அழகாகக் சிரித்தது..)

உன்னை நான் அள்ளவோ கண்ணில் வரைந்தேன்
நாளும் என் ஓவியம் நீதானே
கண்ணே உன் கண்ணிலே சேதி படித்தேன்
காதல் போராட்டமே நான் பார்த்தேன்
மோகம் பொங்கி வரும் தேகம் கொண்டதொரு தாகம்
நான் பெண்ணல்லவோ
நானும் கொஞ்சிட அதும் தீரும் கட்டிலில் இணை சேரும்
என் கண்ணல்லவா
இள மாலை பொழுதாக
இரு நெஞ்சம் இனிதாக
இனிமை வழியும் இளமை இதுவோ
இரு விழி சிவந்திட
(அழகாகக் சிரித்தது..)


Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:53:52 PM
படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, S ஜானகி

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே சரிதானா
அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே அதுதானா
உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆகா யாரோ காரணம்
(அடி ஆத்தாடி)

மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பாட்டு ஆடாதோ
ஒன்ன பார்த்து அலைகள் எல்லாம் மெட்டு கட்டி பாடாதோ
இப்படி நான் ஆனதில்ல புத்தி மாறிப் போனதில்ல
முன்ன பின்ன நேர்ந்ததில்ல மூக்குநுனி வேர்த்ததில்ல
கன்னிப்பொன்னு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ
எச கேட்டாயோ
(அடி ஆத்தாடி)

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோஷம்
உண்மை சொல்லு பொன்னே என்ன என்ன செய்ய உத்தேசம்
வார்த்த ஒன்னு வாய்வரைக்கும் வந்துவந்து போவதென்ன
கட்டுமரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன
கட்டுத்தறி கால நானே கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத்தொட்டு தென்றல் பேச தூக்கங்கெட்டுப் போனேனே
சொல் பொன்மானே

Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:54:32 PM
படம்:கைராசிக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி


நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை


(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)

கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
பனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
பூவுக்கு வாய்ப்பூட்டு
என் சோகம் நீ மாற்று
என் வாழ்விலே தீபம் ஏற்று

(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)

நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே
நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்று தானே
நான் இங்கு நானல்ல
என் துன்பம் யார் சொல்ல
என் தெய்வமே நீ பெண்ணல்ல

(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)



Title: Re: ஜானகி ஹிட்ஸ்
Post by: Global Angel on January 19, 2012, 11:55:13 PM
படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜேசுதாஸ், எஸ்.ஜானகி


தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆகா சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய்விடு
இரவே பாய் கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு

(தென்றல் வந்து என்னைத் தொடும்)

தூரல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்

தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது

(தென்றல் வந்து என்னைத் தொடும்)

தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே

மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம் ஊறும் நேரம்

(தென்றல் வந்து என்னைத் தொடும்)