FTC Forum
Entertainment => Song Lyrics => Topic started by: Global Angel on January 20, 2012, 03:11:21 AM
-
படம்:பூவரசன்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, சித்ரா
ராசாத்தி ராசாத்தி உன்னை என்னி மனம் உருகி நின்றேனடி
ராசாத்தி ராசாத்தி உன்னை என்னி மனம் உருகி நின்றேனடி
செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே
முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்லடி
ராசாவே ராசாவே உன்னை என்னி மனம் உருகி நின்றேன் அங்கே
ராசாவே ராசாவே உன்னை என்னி மனம் உருகி நின்றேன் அங்கே
ஏறிக்கரை காத்தப்போல என் மனசு லேசாச்சு
ஏறி நின்னு உந்தன் மேல உச்சந்தலையாச்சு??
தூண்டில் போட்டு மீனுக்காக காத்திருக்கும் ராசாவே
தூண்டில்குள்ள சிக்கிப்போச்சு என் மனசு ராசாவே
எப்போதும் ஏங்கும் ஏழையப் போல
முப்போதும் நெஞ்சம் வா பின்னாலே??
அன்பாலே ஏழைகள் சீமானய்யா
நீ தானே எந்தன் கோமானய்யா
ராசாவே ராசாவே உன்னை என்னி மனம் உருகி நின்றேன் அங்கே
ராசாவே ராசாவே உன்னை என்னி மனம் உருகி நின்றேன் அங்கே
அஞ்சுகத்தின் கல்யாணத்தை
ஆசையோடு பார்ப்பேனே
மொஞ்சி வந்த நாதஸ்வரம்
ஒசை வந்து கேட்டேன்னே
என்னை வந்து மாப்பிள்ளையா மணவறையில் பார்ப்பாயா
உன்னை என்னை ஜோடியாக்கி ஒன்றை ஒன்று சேர்த்தாயா
நாம் இன்று கேட்டோம் நாயாண ஓசை
நாளுக்கும் போது ஏங்குது ஆசை
மீனாட்சியம்மா கண் பார்க்கனும்
மாறாமல் நம்மை கை சேர்க்கனும்
ராசாத்தி ராசாத்தி உன்னை என்னி மனம் உருகி நின்றேனடி
ராசாத்தி ராசாத்தி உன்னை என்னி மனம் உருகி நின்றேனடி
செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே
முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்லவா
ராசாவே.. ராசாத்தி
ராசாவே.. ராசாத்தி
உன்னை என்னி மனம் உருகி நின்றேன் அங்கே
ராசாவே.. ராசாத்தி
ராசாவே.. ராசாத்தி
உன்னை என்னி மனம் உருகி நின்றேன் அங்கே
-
படம்: வல்லக்கோட்டை
பாடியவர்கள்: பத்மபூஷன் பாலுஜி, டாக்டர்.எஸ்.ஜானகி
செம்மொழியே செம்மொழியே நீ தானே
உன் செந்தமிழே செந்தமிழே தேன் தானே
உன் அங்கத்திலே சங்கத்தமிழ் விளையாடும்
உன் கன்னத்திலே கன்னித்தமிழ் அலைபாயும்
ஓஓஓஓ இதழ் இதழ் இதழ் இதழ் வரிகள் கம்பன் செய்த கவியோ
இடை இடை இடை இடைவெளிகள் அய்யன் செய்த குறளோ
செம்மொழியே செம்மொழியே நீ தானே
உன் செந்தமிழே செந்தமிழே தேன் தானே
தேன் தேன் தேன் பூவான தீயானேன்
பூவே பூவே பூவே தீயானால் பூவானேன்
பூப்போல நீயாய்
பூப்போல பூவாய்
தீயின் சுடரை பூவின் இதழாய் நானேன்
பூவின் இதழின் தீயின் சுடராய் நானேன்
இதழ் இதழ் இதழ் இதழ் வரிகள் கம்பன் செய்த கவியோ
இடை இடை இடை இடைவெளிகள் அய்யன் செய்த குறளோ
தேடும் தேடும் தேடும் நான் தேடும் உயிர் நீ தான்
வாழும் வாழும் வாழும் நான் வாழும் உடல் நீ தான்
என்னோட்ட நெஞ்சம்
உன்னோடு கொஞ்சும்
காற்றானாலும் உந்தன் மூச்சு காற்றாவேன்
ஓஓஓஓ பொட்டானாலும் உந்தன் நெற்றில் பொட்டாவேன்
செம்மொழியே செம்மொழியே நீ தானே
உன் செந்தமிழே செந்தமிழே தேன் தானே
உன் அங்கத்திலே சங்கத்தமிழ் விளையாடும்...ம்...
உன் கன்னத்திலே கன்னித்தமிழ் அலைபாயும்
ஓஓஓஓ இதழ் இதழ் இதழ் இதழ் வரிகள் கம்பன் செய்த கவியோ
இடை இடை இடை இடைவெளிகள் அய்யன் செய்த குறளோ
-
[படம் : மக்கள் என் பக்கம்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : சந்திர போஸ்
பாடியவர் : பத்ம பூஷன் S.P.பாலசுப்பிரமணியம்
ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா..
ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா..(சிரிப்பு)
சரணம் 1
நாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல.ஸ்
பூவுக்கு அடிமை பதினாரு வயசுல
நோவுக்கு அடிமைதான் பாதி வயசுல..
சாவுக்கு அடிமை அட நூறு வயசுல..
அடிமைகளா பொறந்துவிட்டோம்
அத மட்டும் தான் மறந்துவிட்டோம்
அந்த பாசம் அன்பு கூட
சிறைவாசம் தானடா....
ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஆ..ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா..
சரணம் 2
காதலிக்க எனக்கு ஒரு யோகமில்லையே
ஆண்டவனே உனக்கும் அனுதாபமில்லையே
ராஜியமும் இருக்கு அதில் ராணி இல்லையே
காசு பணம் இருக்கு ஒரு காதல் இல்லையே
சொல்ல எனக்கு வழி இல்லையே
சொல்லி முடிக்க மொழி இல்லையே
அழுதாலும் தொழுதாலும்
தெய்வம் பார்க்கவில்லையே....
ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா டேய்ய்ய்..ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா......
-
படம்: துளசி
நடிகர்கள்: முரளி, சீதா
இசை:சம்பத் செல்வம்
அன்பே இது காதல் உயில்
உன்னை நான் பார்த்திராவிட்டால்
என் கவிதை நோட்டு வெள்ளையாக இருந்திருக்கும்
உன்னை நான் தீண்டியிராவிட்டால்
உலகில் மிகவும் மிருதுவானவள்
கவிதையே என்று தப்பாக சொல்லியிருப்பேன்
நீ எழுதியிராவிட்டால்
நீ எழுதியிராவிட்டால்
தமிழ் எழுத்தின் தலையெழுத்து தப்பிதமாயிருக்கும்
கதைக்க சுகமானதும் தபால்காரனை நேசிக்கும்
ஏழை எழுத்தாளனைப் போல் உன்
கவிதைகளூக்கு நான் காத்திருப்பேன்
ஹ..ஆஆஆஆ....ஆஆஆஆ
ஒரு மேகத்தைப் போல்
ம்ம்ம்ம்ம்..
சுதந்திரமாய் இருந்தேனே
என்னை நீ ஒரு மழைத்துளியைப் போல்
ம்ம்ம் ஆஆஆ
கைது செய்து விட்டாய்
ம்மஹஹ்ஹஹா
பெண்களை துறந்த இந்த புத்தன்
உன்னை பார் தகும் போதி மரத்தை
இழந்து விட்டாயே துறந்து விட்டாயே
நீ எழுதியிராவிட்டால்
நீ எழுதியிராவிட்டால்
தமிழ் எழுத்தின் தலையெழுத்து தப்பிதமாயிருக்கும்
நீ ஒரு குங்க்குமக்குடம் அதில் நான் குளிக்கலாமா
நீ பிறக்கும் போதே பிருந்தாவனம் அதில் பூப்பற்க்கலாமா
அந்த நட்சத்திர பூவை பறித்து உனக்கு சுடச் சுட சூடவா
அந்த நட்சத்திர பூவை பறித்து உனக்கு சுடச் சுட சூடவா
இனிமேல் உன் அழகு பெயரை யாராவது
ம்ம்ம்ம்ம்
அழுத்தி உச்சரித்தாலும் அழுதுவிடுவேன்
இனி உன்னை மறக்க முடியாது
லல
வானத்தில் இருந்து நீலத்தை பிரிக்க முடியாது
நீ எழுதியிராவிட்டால்
நீ எழுதியிராவிட்டால்
தமிழ் எழுத்தின் தலையெழுத்து தப்பிதமாயிருக்கும்
-
திரைப்படம்: கடவுள் அமைத்த மேடை
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, ஜென்சி
நடிகர்கள்: சிவக்குமார், சுமித்ரா
இசை: இளையராஜா
மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே
மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே...மயிலே மயிலே
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க
கனி வாய் பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா...நான் தொடவா
மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே...மயிலே மயிலே
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
பூங்குழல் தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய்...நான் வருவேன்
மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே
-
படம்: அம்மன் கோவில் வாசலிலே
நடிகர்: ராமராஜன்
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா
இசை: தேவா
பொன் ஊஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண் நிலா
சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வென்னிலா
மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா
மன்னன் அதை தினம் கொஞ்சும் நிலா
இந்த கண்ணான காதலை
கல்யாண நாயகன் பாடும் பாடும் பாடும் கலை நிலா
பொன் ஊஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண் நிலா
சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வென்னிலா
அழகான தேகம் முழுதாக பார்க்க
கனிபோல கனிந்தது நிலா??
மனதாலே சூடும் அறியாத நெஞ்சில்
தடைப்போடும் இன்ப நிலா
சங்கீதம் பாடும்
செவ்வானில் மோதும்
ஓயாமல் நீயும் பறிமாறும் வீரம்
நன்றாக பசியாறும் அலைப்பாயும் ஆசை நிலா?
பொன் ஊஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண் நிலா
சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வென்னிலா
கண் போட்டு ஆடும் விளையாட்டு என்ன
புரியாத பெண்மை நிலா
இரவான பின்பு என்னைத் தேடி மெல்ல
வரவேண்டும் வென்மை நிலா
சிங்கார லீலை
கொண்டாடும் வேளை
நீதானே எந்தன் இடம் சூடும் வேளை??
ஒரு போதும் கேட்காத மனம் கேட்கும் தனிமை நிலா
பொன் ஊஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண் நிலா
சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வென்னிலா
மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா
மன்னன் அதை தினம் கொஞ்சும் நிலா
இந்த கண்ணான காதலை
கல்யாண நாயகன் பாடும் கலை நிலா
-
படம்: காதல் அழிவதில்லை
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்கள்:சிம்பு,ஷார்மி
இசை: விஜய் டி.ராஜேந்தர்
காதல் அழிவதில்லை
கடல் அலைபோல் ஓய்வதில்லை
வா என்றால் வருதில்லை
காதல் போ என்றால் போவதில்லை
நெனச்சா நெனெச்சது தான்
யாரும் அழிச்சாலும் அழியாது
காதல் காதல் அது அழிவதில்லை
அலைகள் அலைகள் அது ஓய்வதில்லை
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
ஒரு முறை நெனச்சிவிட்டால் மறக்க முடியாது
நெருப்பு வெச்சு சுட்டாக்கூட காதல் நெஞ்சு வேகாது
உயிரே உனக்கு அது தெரியாதா
காதல் அழிவதில்லை புரியாதா
சொல்லடி சொல்லடி என் காதலியே
நீ சொன்னது சொன்னது தான் தாங்கலியே
சொல்லடி சொல்லடி என் காதலியே.. காதலியே
நீ சொன்னது சொன்னது தான் தாங்கலியே .... தாங்கலியே
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
பெத்தவங்க ஒத்துக்கொண்டா நீயும் நானும் காதலிச்சோம்
மத்தவங்க ஒப்புதல் தந்தா நீயும் நானும் சந்திச்சோம்
கண்ணும் கண்ணும் பார்த்துக்கொள்ள காதலும் தான் மறந்தது
நெஞ்சும் நெஞ்சும் நினைந்து கொள்ள நேசமும் தான் வளர்ந்தது
அந்தஸ்தையும் பணத்தையும் மட்டும் பெற்றோர் சிலர் மதிப்பாங்க
அன்பு வெச்ச புள்ளைங்க மனசை பிரிச்சு வைக்க பார்ப்பாங்க
பத்திரிக்கை அட்ச்சாலும் பத்து கைகள் தடுத்தாலும்
நிர்ப்பந்தமே செஞ்சாலும் நிச்சயமே முடிந்தாலும்
அணை போட்ட வெள்ளம் நிக்குமே
தடைப்போட்டா உள்ளம் நிக்குமா
தடைப்போட்டா காதல் உள்ளம் நிக்குமா
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
ஜாதிமத மொழியை எல்லாம் கலந்தது தான் காதலடி
சொந்தபந்த எதிர்ப்பை எல்லாம் மீறி நிற்பதே காதலடி
பெண்கள் சமயத்தில் பெத்தவங்க ஆட்டி வைக்கும் பொம்மையடி
காதல் என்னை வெறுப்பதால் சொல்வதில் இல்லை உண்மையடி
எதிர்ப்புகள் வந்தால் கூட எதிர் நீச்சல் அடிக்கனும்டி
தேசமே கடத்தினாலும் துனிந்த காதல் ஜெயிக்குமடி
சட்டம் போட்டு தடுத்தாலும்
திட்டம் போட்டு மறைத்தாலும்
ஊரு கூடி எதிர்த்தாலும்
உடம்பு இரண்டா பிரிஞ்சாலும்
உதடுவேனா மாறி பேசும்
உள்ளம் மட்டும் மாறாது
காதல் உள்ளம் மட்டும் மாறாது
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
ஒரு முறை நெனச்சிவிட்டால் மறக்க முடியாது
நெருப்பு வெச்சு சுட்டாக்கூட காதல் நெஞ்சு வேகாது
உயிரே உனக்கு அது தெரியாதா
காதல் அழிவதில்லை புரியாதா
சொல்லடி சொல்லடி என் காதலியே
நீ சொன்னது சொன்னது தான் தாங்கலியே
சொல்லடி சொல்லடி என் காதலியே.. காதலியே
நீ சொன்னது சொன்னது தான் தாங்கலியே .... தாங்கலியே
-
படம்:புதுசா படிக்கிறேன் பாட்டு
பாடகர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி, சுனந்தா
இசை: தேவா
பாடலாசிரியர்:வாலி
காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா
காதலிக்க கையணைக்க இது கண்ணால சொன்னது தந்த நிலா
சின்னஞ்சிறு நிலா சேலைகட்டும் நிலா சித்திரை மாத நிலா
புத்தம் புது நிலா பொட்டு வைத்த நிலா புன்னகை மின்னும் நிலா
கட்டித்தழுவிடும் மானம் இனி விட்டுப்பிரியாது
விட்டு விலகிடும் நானம் வெட்கம் அறியாது
காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா
காதலிக்க கையணைக்க இது கண்ணால சொன்னது தந்த நிலா
காவேரி கரைப்புரண்டு கல்லணையை தேடிவர
கேளாத கவிதை கொண்டு கைவளையல் பாடிவர
நில்லாது வயது வந்த முத்து குடம் ஆடிவர
நீராடை விரித்து வந்து முன்னழகை மூடிவர
நான் மயங்கி மயங்கி தவிக்க மந்திரம் போட்டதென்ன
சிறுக சிறுக அழைக்க என்னை சம்மதம் கேட்டதென்ன
கைகள் தடவி தடவி தினமும் தட்டாத தஞ்சாவூர் மத்தளமே
காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா
காதலிக்க கையணைக்க இது கண்ணால சொன்னது இந்த நிலா
காதோடு ரகசியமாய் சொல்லும் இந்த கோகிலமே
கண்ணோரம் நீ கிடந்தாய் என்னுடைய பூங்குழலே??
தேவாரம் திருப்புகழை பிறக்கும் உன் வாசலிலே ??
நான் பாட நெருங்கி வந்த ராஜ ராஜ கீர்த்தனமே
-- இணையும் இனி சம்மதம் தேவையில்லை
இசையும் மொழியும் தழுவ இங்கு எப்பவும் கேள்வியில்லை
உன்னை நினைத்து நினைத்து இனிக்க இனிக்க பாடும் ஆனந்த ராகங்கள்
காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா
காதலிக்க கையணைக்க இது கண்ணால சொன்னது தந்த நிலா
காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா
காதலிக்க கையணைக்க இது கண்ணால சொன்னது தந்த நிலா
சின்னஞ்சிறு நிலா சேலைகட்டும் நிலா சித்திரை மாத நிலா
புத்தம் புது நிலா பொட்டு வைத்த நிலா புன்னகை மின்னும் நிலா
கட்டித்தழுவிடும் மானம் இனி விட்டுப்பிரியாது
விட்டு விலகிடும் நானம் வெட்கம் அறியாது
ஓ காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா
காதலிக்க கையணைக்க இது கண்ணால சொன்னது தந்த நிலா
-
படம்: பட்டாக்கத்தி பைரவன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே..
(எங்கெங்கோ..)
ஆ.. நான் காண்பது உன் கோலமே
அங்கும் இங்கும் எங்கும்
ஆ.. என் நெஞ்சிலே உன் எண்ணமே
அன்றும் இன்றும் என்றும்
உள்ளத்தில் தேவன்
உள்ளே என் ஜீவன்
நீ நீ நீ..
(எங்கெங்கோ..)
ஆ.. கல்லானவன் பூவாகிறேன்
கண்ணே உன்னை எண்ணி
ஆ.. பூவாசமும் பொன்மஞ்சமும்
என்றோ எங்கோ ராஜா
எதற்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்வேன்
நான் நீ நாம்..
(எங்கெங்கோ..)
-
படம்: புது வசந்தம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், P சுசீலா
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து
இன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும்
தென்றல் எங்கள் பாதைகளில் பூவை தூவும்
குயில்களுக்கு தடைகள் போடும் மனிதர் இங்கே யாரு
குரல் கொடுத்தால் நிலவின் முதுகில் உரசும் நாளை பாரு
பயணங்கள் எங்கே என்று பாட்டில் கூற முடியாது
இசையென்னும் கடலின் ஆழம் எங்கே என்று தெரியாது
பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே
(பாட்டு ஒன்னு..)
ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்
இதயம் தானே எங்களது வாசல் ஆகும்
பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து பறவை போல வாழ்ந்தோம்
பசியெடுத்தால் பாட்டை உன்னு திசைகள் தேடி சேர்ந்தோம்
ஒரு தெய்வம் நேரில் வந்து உறவைசொல்லி துணையாச்சு
உலகங்கள் இதுதான் என்று கவிதை தந்து உயிராச்சு
வானங்களை பாட்டெடுத்து வாகை சூடுவோம்
(பாட்டு ஒன்னு..)
-
இசை: இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பி. எஸ்.ஜானகி.
திரைப்படம் : வெள்ளைரோஜா
சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்
சோலைப்பூவில்)
சந்தனக்காடு நானுன் செந்தமிழேடு
மான் விழி மாது நீயோ மன்மதன் தூது
மேகத்துக்குள் மின்னல் போல நின்றாயே
மின்னல் தேடும் தாழம் பூவாய் நானும் வந்தேனே
தாகம் தீர்க்கும் தண்ணீர் போல நீயும் வந்தாயே
தாவிப்பாயும் மீனைப்போலே நானும் ஆனேனே
என்னில் இல்லா சொர்க்கம் தன்னை
உன்னில் இங்கு கண்டேனே
கள்ளில் இல்லா இன்பம் உந்தன்
சொல்லில் இங்கே கண்டேனே
லலலா லலலா லலலா லலலா
லலலலா-- (சோலைப்பூவில்)
செந்நிலம் மேலே தண்ணீர் சேர்ந்தது போலே
ஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் சொந்தம்
என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீ..ரா..டு
கங்கை வெள்ளம் வற்றும் போதும் காதல் வற்றாது
திங்கள் வானில் தேயும் போதும் சிந்தை தேயாது
மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும்
உன் மேல் அன்பும் மாறாது
உன்னை அன்றி தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது
லலலா லலலா லலலா லலலா
லலலா லலலா- (சோலைப்பூவில்)
புது நாணம் கொள்ளாமல் பப்பா
ஒரு வார்த்தை இல்லாமல் பப்பா
மலர் கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்
சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசைக்கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
-
திரைப்படம் : ஆனந்தக் கும்மி
இசை :இளையராஜா
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
ஓ வெண்ணிலாவே ஏ ஏ வா ஓடிவா (2)
நாளை இந்த வேளை எமை நீ காண வா- ஓ
பால் போல வா
(ஓ வெண்ணிலாவே)
நிலவின் ஜாடை தெரியும் ஓடை
அழகே நீயும் நீராடு ஹோ
மலர்கள் சேர்த்து மாலை கோர்த்து
அடடா நீயும் பூச்சூடு
கதைகள் பேசு
கவிகள் பேசு
விடியும் வரையில் நீ பாடு
நிலவே நீயும் தூங்காதே ஹோய்
நாளை இந்த வேளை எமை நீ காண வா
பால் போல வா
(ஓ வெண்ணிலாவே)
லாலிலாலி லாலிலாலா லாலி லாலி
இதமாய்ச் சாய்ந்து இமைகள் மூடு
இதுதான் முடிவு வேறேது ஹோ
இறக்கும்போதும் இதுவே போதும்
இனிமேல் பிறவி வாராது
காதல் மாலை
சூடும் வேளை
அழுகை ஏனோ கூடாது
நிலவே நீயும் தூங்காதே ஹோய்
நாளை இந்த வேளை எமை நீ காண வா
ஓ பால் போல வா
(ஓ வெண்ணிலாவே)
ஆனந்தம் கொண்டு நீங்கள்
இன்று போல் வாழ்கவே
ஆயிரம் பௌர்ணமிகள் கண்டுதான் வாழ்கவே
ஆதியில் சேர்ந்த காதல் ஆனந்தம் காணவே
ஆகாயம் உள்ள மட்டும் அழியாமல் வாழ்கவே
-
படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன் கண்களுக்கு பள்ளி கொண்டேன்
வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
(சேலை..)
ஓ கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்
ஆ ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்
ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
(சேலை..)
ஓ காதல் வெண்ணிலா கையோடு வந்தாடும்
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
ஓ மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடுமந்திரம் பெண்ணோடு உள்ளதோ
மீனுக்கு தூண்டிலிட்டால் யானை வந்தது
மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
(சேலை..)
-
படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வைரமுத்து
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
(ரோஜாவை..)
இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
(இலைகளில்,.)
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தாலாட்டும் பூச்செண்டு ஆ ஆ
(ரோஜாவை..)
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் உனக்கு மகிழ்ந்து வேராவேன்
(வசந்தங்கள்..)
பூவிலே மெத்தைகள் தைத்து கண்ணுக்குள் மங்கையை வைத்து
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஆ
(ரோஜாவை..)
-
படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
(நீதானே..)
என் வாசல் ஹே வரவேற்க்கும் அன்னேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம்
(நீதானே..)
பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேஅக் குயில்கள்
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூரும்
நீ ஆடல் அணிகலன் சூடும் வேளையில்
ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியோடு ப்ஓகும் வரையினில்
தென்றல் கவரிகை வீசும்
சந்தோஷம் உன்னோடு கைவீடும் எந்நாளும்
(நீதானே..)
ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் கோடி நினைவு
உன் ஆசை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் ஆசை ஹே குளிப்பதும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல்
திரையிடும் மேகம்
இரு காதல் விழிகள் பேசும் மொழிகளில் பிறையும்
பௌர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீடும் எந்நாளும்
(நீதானே..)
-
படம்: நாடோடி பாட்டுக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வனமெல்லாம் சென்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
(வனமெல்லாம்..)
நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம் சாமிதானே காப்பு
நாமெல்லாம் தெய்வ படைப்பு
(வனமெல்லாம்..)
ஆத்தோரம் பூங்கரும்பு
காத்திருக்கும் சிறு எறும்பு
அக்கரையில் ஆயிரம் பூ பூ
பூத்திருக்கு தாமரைப்பூ
பொன்னிரத்து கால் சிலம்பு
புத்தம் புது பூஞ்சிரிப்பு மத்தாப்பு
எப்போதும் மாராப்பு
எடுப்பான பூந்தோப்பு
என்ன என்ன எங்கும் தித்திப்பு
ஒட்டாத ஊதாப்பு
உதிராத வீராப்பு
வண்ண வண்ண இன்பம் ரெட்டிப்பு
வழி முழுதும் வனப்பு எனக்கழைப்பு
புது தொகுப்பு வகுப்பு கனக்கெடுப்பு
(வனமெல்லாம்..)
கெட்டவர்க்கு மனம் இரும்பு
நல்லவரை நீ விரும்பு
எல்லோர்க்கும் வருவதிந்த மூப்பு
ஏழைகளின் நல்லுழைப்பு
என்ன இங்கு அவை பிழைப்பு
வாழ்வு வரும் என்று எதிர்ப்பார்ப்பு
வீணாக இருக்கும் வம்பு
வினையாகும் கைகலப்பு
விட்டு விடு சின்ன தம்பி ஏய்ப்பு
கைய்யோடு எடு சிலம்பு
கலந்தாட நிமிர்ந்தெழும்பு
கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு
விருவிருப்பு இருக்கு சுறுசுறுப்பு
(வனமெல்லாம்..)
-
படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
ஓ காதல் என்னை காதலிக்கவில்லை
ஓ காற்றும் என்னை ஆதறிக்கவில்லை
கண்ணி வெண்ணிலா காத்திருக்கிறேன்
உன்னை எண்ணியே பூத்திருக்கிறேன்
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்றுதான் ஒன்றுதான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
தேவி வான் சொல்லியா மேகம் வரும்
நீ சொல்லியா காதல் வரும்
தேவா நான் கேட்பது காதல் வரம்
நீ தந்தது கண்ணீர் வரம்
பெண்ணழகு முழுதும் கற்பனை என்று உருகி வாழ்கிறேன்
என்னழகு உனது அற்பணம் என்று எழுதி விடுகிறேன்
போதும் போதும் புன்னகை என்பது காதலின் பல்லவி
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஓ என் வானமோ ரெண்டானது நீ சொல்லியே ஒன்றானது
ஓ கள் என்பது பால் ஆனது நான் காணவே நாளானது
என் புடவை உனது கறபனை கேட்டு இடையை மறந்தது
என் விழிகள் உனது கண்களை கண்டு இமையை மறந்தது
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்றுதான் ஒன்றுதான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஓ காதல் உன்னை காதலித்ததம்மா
ஓ காற்றும் உன்னை ஆதறிதததம்மா
கண்ணி வெண்ணிலா கையில் வந்தது
கையில் வந்ததும் காதல் வந்தது
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்றுதான் ஒன்றுதான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
-
படம்: இதயம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
இதயமே இதயமே
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
(இதயமே..)
பனியாக உருகி நதியாக மாறி
அலைவீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர் காதல் உறவாடி கலந்தே நின்றேன்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
கோலம் கலந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்
(இதயமே..)
என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேரும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்
(இதயமே..)
-
பாடல்வரிகள் : வாலி
பாடியவர்கள் :ஜானகி, எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை இளையராஜா
படம் காதல் ஓவியம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம் (நதியில்)
காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்(நதியில்)
(நதியில் ஆடும்)
குளிக்கும்போது கூந்தலை
தனதாடை ஆக்கும் தேவதை
அலையில் மிதக்கும் மாதுளை
இவள் ப்ரம்மதேவன் சாதனை
தவங்கள் செய்யும் பூவினை
இன்று பறித்து செல்லும் காமனை
எதிர்த்து நின்றால் ஆஆ
எதிர்த்து நின்றால் வேதனை
அம்பு தொடுக்கும்பொது நீ துணை சோதனை
(நதியில் ஆடும்)
ஸரிநிஸா பாமரிகா
ஸரிநிஸா பாமரிகா
ததபமா
மதநிஸா நிதபம
மதநிஸா
ஸாஸஸாஸ ஸஸரிநிநிதத
தாததாத ததநி பபதத
ரிமாதநி தபநித
ரிஸநிதபாமக
தாபம நிதப
ஸாநிதப ஸஸரிரிககமமபப
ஸாஸநிநிததபபம
நிரிகமாப
சலங்கை ஒசை போதுமே
எந்தன் பசியும் தீர்ந்து போகுமே
உதயகானம் பொதுமே
எந்தன் உயிரில் அமுதம் ஊறுமே
இரவு முழுதும் கீதமே
நிலவின் மடியில் ஈரமே
விரல்கள் விருந்தை கேட்குமே
ஒரு விலங்கு விழித்து பார்க்குமே
இதழ்கள் இதழை தேடுமே
ஒரு கனவு படுக்கை போதுமே பொதுமே.....
(நதியில் ஆடும்)
-
படம்: நான் சிவப்பு மனிதன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
(பென் மானே..)
தேன் மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ
தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ
கையருகில் பூமாலை காதல் என்னும் கோபுரம்
மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஊர் புறம்
என் காதல் வானிலே பெண் மேக ஊர்வலம்
காணுவேன் தேவியை கண்களின் விழாவில்
உன் மானே சங்கீதான் பாடவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் தேனே வந்தேனே
(உன் மானே..)
யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே
போர்களம் தான் ஹோய் பூக்களின் தேகமே
தேக மழை நான் ஆகும் தேவியை தேடுவேன்
ஈர வயல் நீயாக மேனியை மூடுவேன்
கண்ணோரம் காவியம் கை சேறும் போதிலே
வானமும் தேடியே வாசலில் வாராதோ
(பெண் மானே..)
-
படம்: சின்ன கவுண்டர்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், P சுசீலா
முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு சிட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே
(முத்து..)
கொலுசு தான் மௌனமாகுமா
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவு மூடுமா
மவுசு தான் குறையுமா
நேசப்பட்டு வந்த பாச கோடிக்கு
காசி பட்டு சொந்தமாகாதே
வாக்குப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம் பூவில் வீசும் காத்திலா
பாசம் தேடி மாமா வா
(முத்து..)
காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலிதான்
காவியம் பாசுதே
நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில்
பொட்டு வெச்சதாரு நாந்தானே
அத்தி மரப்பூவும் அச்சப்படுமா
பக்கத்துணையாரு நீதானே
ஆசை பேச்சுல பாதி மூச்சிலே
லேசா தேகம் சூடேர
(முத்து..)
-
படம்: அமராவதி
இசை: பால பாரதி
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வைரமுத்து
தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவு இதுவோ
(தாஜ்மஹால்..)
பூலோகம் என்பது பொடியாகி போகலாம்
பொன்னாரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம்
ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்
கண்ணீரிலே ஈரமாகி கரை ஆச்சி காதலே
கரை மாற்றி நாமும் வெல்ல கரை ஏற வேண்டுமே
நாளை வரும் காலம் நம்மை கொண்டாடுமே
(தாஜ்மஹால்..)
சில் வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில் வண்டுகள் காதல் பண்ணால் செடி என்ன கேள்வி கேட்குமா
வண்டு ஆடும் காதலை கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்ப பாவம் என்பதா
வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
வாழாத பேருக்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே
வாணும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே
(தாஜ்மஹால்..)
-
படம்: மகாநதி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், மகாநதி ஷோபனா, உமா ரமணன்
ஸ்ரீரங்க ரங்க நாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி
நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தேன் கங்கை
நீராடி தென்றல் போல நீ ஆடடி
மஞ்சல் குங்குமம் மங்கை நீ
சூடி தெய்வப் பாசுரம் பாடடி
(ஸ்ரீரங்க...)
கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்
அந்நந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்த நல் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்
கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மருவீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கல நீராட முன் வினை நஞ்சை புஞ்சங்கள் தானடி
ஊர் வஞ்சம் என்ன கூருவேன் தேவ லோகமே தானடி
வேரெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி
-
படம்: யூத்
இசை: மணிஷர்மா
பாடியவர்: Sp பாலசுப்ரமணியம்
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமை கொல்லும் சிறு நன்மை உண்டு
(சந்தோஷம்..)
வெற்றியை போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம் பூவிலும் சிறு தேந்துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
இலையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான்
நாகரிகம் பிறந்ததடி
தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்சி இல்ல
பாடம்படி பவள கொடி
உள்ளம் என்பது கவலைகள் நிறப்பும் குப்பை தொட்டி இல்லை
உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் நாளை துன்பம் இல்லை
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமை கொல்லும் சிறு நன்மை உண்டு
(சந்தோஷம்..)
ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே
அவன் ஆசையை போலவே இந்த பூமி அமையல்லையே
ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மை என்றும் தீமை எனும் நாலு பேர்கள் சொல்லுவது
நம்முடையே பிழை இல்லையே
துன்பமென்ற சிற்பிக்குள்தான் இன்பமென்று முத்து வரும்
துன்பத்தின் பயம் இல்லையே
கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டிக்கொள்
காலுக்கு செருப்பு எப்படி வந்தது முல்லுக்கு நன்றி சொல்
(சந்தோஷம்..)
-
படம்: குங்குமச் சிமிழ்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
(நிலவு)
நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாடுமிந்த சொந்தம்
நான் இனி நீ... நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே
(நிலவு)
கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே
(நிலவு)
-
படம்: உனக்காகவே வாழ்கிறேன்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
அஆஆஆஆஆஆஆஆ
அஆஆஆஆஆஆஆஆ
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக் கோலம்
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக் கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா
எந்தச் சொந்தங்கள் யாரோடு என்று
காலந்தான் சொல்லுமா?
பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம்
தேதிதான் சொல்லுமா?
சோலை எங்கும் சுகந்தம்
மீண்டும் இங்கே வசந்தம்
நெஞ்சம் ஏன்தான் மயங்கும்
கண்கள் சொன்னால் விளங்கும்
ஒரு மெளனம் தீர்ந்தது
சுதியோடு சேர்ந்தது
ஒரு தாளம் ராகம் சொல்ல
சந்தம் பொங்கும் மெல்ல
மாயமல்ல மந்திரமல்ல
இளஞ்சோலை பூத்ததா
இளஞ்சோலை பூத்ததா
ஊமையாய்ப் போன சங்கீதம் ஒன்று
இன்றுதான் பேசுதோ
மேடையில்லாமல் ஆடாத கால்கள்
இன்றுதான் ஆடுதோ
கண்ணில் என்ன கனவோ
நெஞ்சில் என்ன நினைவோ
நம்மை யார்தான் கேட்பது
விதிதானே சேர்ப்பது
இந்தப் பாசம் பாவம் இல்லை
நேசம் மோசம் இல்லை
கங்கை என்றும் காய்வதும் இல்லை
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக் கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக் கோலம்..
-
படம்: கிழக்கு கரை
இசை: தேவா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
எனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
அழுக்கிற குழுக்குற
இவளுக்கு இணைதான் எவதான்
ஊரு எல்லாம் இவதானே கூவி அழைச்சேன்
ஆசை மாமன் இவன் தானே பாட்டு படிச்சா
யம்மாடியோஓஓஓஒ..
ஓஒ ஓஓ ஓஓ ஓஓ
உனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்
மாஞ்சிட்டு மேடை போட்டு
மைக்செட்டு மாட்டினா
மாமாவை வளைச்சு போட
புதுதிட்டம் தீட்டினா
ஆளான காலம் தொட்டு
உனக்காக ஏங்கினாள்
அன்னாடம் தூக்கம் கெட்டு
அணல் மூச்சு வாங்கினாள்
பச்சக்கிளி தன்னந்தனியே ஹஹ
இன்னும் என்னாச்சு
உச்சம் தலையில் வெச்ச மலரின்
வெட்கம் உண்டாச்சு
மயங்காதே மாலை மாத்த
நாளும் வந்தாச்சு
உனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்
நீ சூட்டும் பூவுக்காக
நெடுந்தூரம் வாடுது
நீ வைத்த பொட்டுக்காக
மடிமொத்தம் வாடுது
ஆத்தாடி உன்னைத்தானே
கண்ணாடி தேடுது
காவேரி எங்கே போகும்
கடலென்று கூறுது
அந்திப்பொழுதில் தென்னங்கிளையில்
தென்றல் கூத்தாட
மையல் விடுநீ மஞ்சக்குருவி
கையை கோர்த்தாட
அடங்காது ஆசைகூட
நானும் போராட
உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்
ஹ ஹஹ ஹாஆஆ
ஊரு எல்லாம் இவதானே கூவி அழைச்சான்
ஆசை மாமன் தூங்காம தானே பாட்டு படிச்சான்
யம்மாடியோஓஓஓஒ..
ஆஆ..ஆஆ..ஆஆ.
எனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
அழுக்கிற குழுக்குற
இவளுக்கு இணைதான் எவதான்
-
படம்: மீரா
பாடல்: வாலி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஆஷா போஸ்லே
ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
ஏன் விரித்தாய் சிறகை
அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை
ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
ஏன் விரித்தாய் சிறகை
எனையும்தான் உன்னைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்
நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
ஆகா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆகா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே
உனை நான் சந்தித்தேன்
உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும்
திருநாள் வருமோ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
(ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை)
மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே
ஆகா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே
உன்னை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
(ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை)
-
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சுஜாதா
வரிகள்: வைரமுத்து
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்
நிலவில் நனையும் சோலைக் கேட்டேன்
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும்போதே சுவர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்
நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்
மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாக்ஷி கிளியைக் கேட்டேன்
சொந்த உழைப்பில் சோறைக் கேட்டேன்
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற பொறுமையைக் கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் துணிவைக் கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்
தொலைந்துவிடாத பொறுமையைக் கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
கூட்டுக்கிளிபோல் வாழக் கேட்டேன்
குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்
-
படம்: பேண்ட் மாஸ்டர்
இசை:
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
புதிய நிலாவே ஒரு இனிய கனாவே
புதிய நிலாவே ஒரு இனிய கனாவே
மாலைகள் நெஞ்சில் தொட்டு தாலாட்ட
மாணிக்க வைரம் உன்னை சீராட்ட
நாணையம் அள்ளி தந்து நீ கேட்க
நான் இங்கு வந்தேன் உன்னை பாராட்ட
ஓராயிரம் மாயங்களும்
நான் பார்த்தேன் என் கண்ணிலே
(புதிய நிலாவே..)
நான் நினைத்து வந்த தேன் கனவு
அது வாழ்வில் ரொம்ப தூரம்
ஏன் எனக்கு இந்த வீண் மயக்கம்
என்று நேரில் சொல்லும் நேரம்
(நான் நினைத்து..)
பொத்தி வச்ச நெஞ்சை விட்டுத்தான்
நல்ல முத்து ஒன்னு வெளியாச்சு
புத்தி கெட்ட சின்ன பிள்ளைக்கு
ஒரு உண்மை இன்று தெளிவாச்சு
வானில் வரும் வர்ணங்களே
நிறம் மாறும் எண்ணங்களே
சிவந்து வரும்
(புதிய நிலாவே..)
நாம் நினைப்பதொன்று நேர் நடப்பதொன்று
வாழ்வில் கண்ட பாடம்
பால் நிறத்தினிலே கல் இருக்குதென்று
காலம் சொன்ன பாடம்
(நாம் நினைப்பொதொன்று..)
புண்ணியங்கள் செய்திருக்கணும்
இந்த கண்மணியை மணந்திடவே
மின்னல் ஒன்று மண்ணில் வந்ததே
பல மன்னவரும் மயங்கிடவே
பூவே தினம் பூச்சூடியே
நூறாண்டு நீ வாழ்கவே
(புதிய நிலாவே..)
-
படம்: தூங்காதே தம்பி தூங்காதே
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே
(நானாக)
கீழ் வானிலே ஒளி வந்தது
கூட்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர்வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்
(நானாக)
மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை
(நானாக)
-
படம்: பட்டினப் பிரவேசம்
இசை: M.S.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?
(வான் நிலா நிலா அல்ல)
தெய்வம் கல்லிலா? - ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?
தீதிலா காதலா ஊடலா கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?
(வான் நிலா நிலா அல்ல)
வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!
(வான் நிலா நிலா அல்ல)
-
படம்: ஒரு தலை ராகம்
இசை: T ராஜேந்தர்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
(இது குழந்தை..)
நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
உறவுறாத பெண்ணை எண்ணி நாளெளல்லாம் வாழ்கிறேன்
(இது குழந்தை..)
வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்
(இது குழந்தை..)
உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது
உறவுறுவாள் என தானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது
(இது குழந்தை..)
-
படம்: பட்டிக்காட்டு ராஜா
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
(உன்னை..)
நான் உனக்காகவே ஆடுவேன்
கண் உறங்காமலே பாடுவேன்
(உன்னை..)
அன்று ஒரு பாதி முகம்தானே கண்டேன்
இன்று மறுபாதி எதிர்ப்பார்த்து நின்றேன்
கை வலையோசை கடல் பொங்கும் அலையோசையோ
என செவியார நான் கேட்க வரவில்லையோ
(உன்னை..)
கம்பன் மகனாக நான் மாற வேண்டும்
கன்னி தமிழால் உன் எழில் கூற வேண்டும்
என் மகாராணி மலர்மேனி செம்மாங்கனி
என மடி மீது குடியேறி முத்தாட வா
(உன்னை..)
எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னை தொடராமல் நான் இங்கு வந்தேன்
நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா
நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா
(உன்னை..)
-
படம்: வெற்றி
இசை: ஹர்ரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடவா தேனென கம்பனின் ஒரு பாடல்
உங்களை வீணையாய் மீட்டிடும் ஒரு பாடல்
நேசிப்பதே நெஞ்சின் மழையாய் நினைக்கின்றேன்
ஆனாலும் ஏன் நஞ்சின் நதியில் குளிக்கின்றேன்
என் பாடலால் உலகே இன்று மூழ்கத்தான் போகிறதே
(பாடவா..)
நெஞ்சுக்குள் மேகங்கள்
நெஞ்சுக்குள் மேகங்கள்
நகர்கின்ற நேரங்கள் விழியோரம் வருகின்றாய்
உயிரெல்லாம் நிறைகின்றாய்
பல ஜென்மம் பழகியதாய் உடல் எங்கும் ஒரு மின்னல்
ஒரு பூஞ்சோலை சூழ்ந்த தீவினில் மழையோடு
தினம் வாழ்கின்றதாக ஞாபகம் இழையோடும்
ஒரு மனிதனை முழுதாய் மாற்றும் காதல் தான்
ஒரு மனிதனை முழுதாய் மாற்றும் காதல் தான்
(பாடவா..)
ஆகாயம் தீண்டவே
ஆகாயம் தீண்டவே
ஆவேசம் வந்ததே இளம் தென்றல் இசை கொடுக்க
இள மங்கை கை கொடுக்க
கனவெல்லாம் நிஜமாக கண் எதிரே தொலைந்தாளே
நிலவுக்கு மலர்களும் தூரம் ஓர் நேரம்
மலர்ந்திட கைகளை நீட்டும் ஆனாலும்
என் வெற்றியின் முதுகாய் உள்ளவள் நீதானே
என் வெற்றியின் முதுகாய் உள்ளவள் நீதானே
ஓ ப்ரேமா.. ஓ.. ப்ரேமா
-
படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
ஹே ஹோ ஹூம்... ல ல லா...
பொன்மாலை பொழுது...
இது ஒரு பொன்மாலை பொழுது...
வானமகள், நாணுகிறாள்...
வேறு உடை, பூணுகிறாள்...
இது ஒரு பொன்மாலை பொழுது...
ம்ம்ம்ம் ஹே ஹா ஹோ... ம்ம்ம்...
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்...
ராத்திரி வாசலில் கோலமிடும்... (2)
வானம் இரவுக்கு பாலமிடும்...
பாடும் பறவைகள் தாளமிடும்...
பூமரங்கள், சாமரங்கள்... வீசாதோ... (இது ஒரு)
வானம் எனக்கொரு போதி மரம்...
நாளும் எனக்கது சேதி தரும்... (2)
ஒரு நாள் உலகம் நீதி பெறும்...
திருநாள் நிகழும் தேதி வரும்...
கேள்விகளால், வேள்விகளை... நான் செய்தேன்... (இது ஒரு)
ஆ... ஹே ஹோ ஹா ல ல லா...
ம்ம்ம்ம் ஹே ஹோ ஹா ம்ம்ம்...
-
படம்: அபூர்வ சகோதரர்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
(உன்ன நெனச்சேன்..)
அந்த வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
(உன்னை நெனச்சு..)
ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்லவேண்டும்
கொட்டும் மழைக்காலம் உப்பு விக்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்
தப்புக்கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞானத்தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞானத்தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கும் நன்றி உரைப்பேன் உனக்கு
நான்தான்..
(உன்னை நெனச்சு..)
கண்ணிரெண்டில் நாந்தான் காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை யாவும் நல்ல மரமாகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞானத்தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞானத்தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கும் நன்றி உரைப்பேன் உனக்கு
நான்தான்..
(உன்னை நெனச்சு..)
-
படம்: காக்கி சட்டை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வைரமுத்து
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா?
ஆசை மீறும் நேரமே ஆடை நான் தானே
(வானிலே..)
வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்
வாசப்பூவை கையில் அள்ளி பார்க்கிறேன்
மாலை காற்றில் காதல் ஊஞ்சல் போடவா?
காமன் தேசம் போகும் தேரில் ஆடவா?
ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே
வானம் தாலாட்டுதே வா
நாளும் மார் மீதிலே ஆடும் பூவை
தோளில் யார் சூடுவார் தேவனே
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
தேவனே சூடுவான்
(வானிலே..)
பூவை போல தேகம் மாறும் தேவதை
பார்வை போதும் மேடை மேலே ஆடுதே
பாதி கண்கள் மூடும் காதல் தேவியே
மோக ராகம் பாடும் தேவன் மேன்மையே
மன்னன் தோல் மீதிலே மஞ்சம் கண்டேன்
மாலை பூங்காற்றிலே நான்
ஆடும் பொன் மேகமே ஓடும் வானம்
காதலின் ஆலயம் ஆனதே
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்
ஓவியம் தீட்டுதே
(வானிலே..)
-
படம்: காதல் ஓவியம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம்
நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம்
என் நாதமே வா..
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை இல்லை பார்வையில்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா
(சங்கீத..)
திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ
அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாக
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொல்லாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி..
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ ஆடிடுமோ ஆடிடுமோ ஆடிடுமோ..
ராஜ தீபமே எந்த வாசலில் வாராயோ
குயிலே குயிலே..
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே..
நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு
அவள் நீதானே நீதானே
மனக்கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள்
நீதானே நீதானே நீதானே
விழி இல்லை என்னும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
(விழி இலலை..)
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்தி செல்லும் முத்து சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டே
கண்டு கொண்டும் இந்த வேதம் என்ன
ராஜ தீபமே..
-
படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழ்ஹாவே என் வாழ்விலே
(சங்கீத மேகம்..)
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே
(சங்கீத மேகம்..)
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராக பாவனைகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே
(சங்கீத மேகம்..)
-
படம்: ஆயிரம் நிலவே வா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா
ஏரிக்கரை பூவெல்லாம்
எந்தன் பெயர் சொல்லாதோ
பூ வசந்தமே நீ மறந்ததேன்
ஆற்று மணல் மேடெங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவமுல்லையே காணவில்லையே
காதல் சோதனை இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி
(தேவதை இளம் தேவி)
எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா
விதி என்பதா சதி என்பதா
சொந்தமுள்ள காதலியே வற்றிவிட்ட காவிரியே
உந்தன் ஆவியை நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி அடி கண்ணே ஆதரி
இவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி
நீ தான் எந்தன் பாதி
(தேவதை இளம் தேவி)
-
படம்: சலங்கை ஒலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
மௌனமான நேரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இளமைச் சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடிக் கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி
ஊதலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இவளின் மனதில் இன்னும் இரவின் ஈரமோ
கொடியின் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
காதலான நேசமோ கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
-
படம் : தனிக்காட்டு ராஜா
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஒசை
நீங்காத ஆசை ஆ ஆ நீங்காத ஆசை
(சந்தனக் காற்றே)
நீர் வேண்டும் பூமியில் பாயும் நதியே
நீங்காமல் தோள்களில் சாயும் ரதியே
பூலோகம் அ அ அ தெய்வீகம் அ அ அ
பூலோகம்.. மறைய மறைய.. தெய்வீகம்.. தெரியத் தெரிய
வைபோகம் தான்...
(சந்தனக் காற்றே)
கோபாலன் சாய்வதோ கோதை மடியில்
பூபாணம் பாய்வதோ பூவை மனதில்
பூங்காற்றும் அ அ அ சூடேற்றும் அ அ அ
பூங்காற்றும்... தழுவத் தழுவ... சூடேற்றும்... சரியத் சரிய
ஏகாந்தம் தான்...
(சந்தனக் காற்றே)
-
படம்:கைராசிக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
பனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
பூவுக்கு வாய்ப்பூட்டு
என் சோகம் நீ மாற்று
என் வாழ்விலே தீபம் ஏற்று
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே
நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்று தானே
நான் இங்கு நானல்ல
என் துன்பம் யார் சொல்ல
என் தெய்வமே நீ பெண்ணல்ல
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
-
படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே
(இளைய நிலா பொழிகிறதே)
வரும் வழியில் பனி மழையில்
பருவநிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவமகள் விழிகளிலே கனவு வரும்
(இளைய நிலா பொழிகிறதே)
முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ
நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்
(இளைய நிலா பொழிகிறதே)
-
படம்: ரோஜா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், சுஜாதா
காதல் ரோஜாவே!
எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்,
கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால்,
நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!
தென்றல் என்னைத் தீண்டினால்,
சேலைத் தீண்டும் ஞாபகம்.
சின்னப் பூக்கள் பார்க்கையில்,
தேகம் பார்த்த ஞாபகம்.
வெள்ளி ஓடைப் பேசினால்,
சொன்ன வார்த்தை ஞாபகம்.
மேகம் இரண்டும் சேர்கையில்,
மோகம் கொண்ட ஞாபகம்.
வாயில்லாமல் போனால், வார்த்தை இல்லை பெண்ணே!
நீயில்லாமல் போனால், வாழ்க்கை இல்லை கண்ணே!
முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!
காதல் ரோஜாவே!
எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்,
கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால்,
நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!
வீசுகின்ற தென்றலே!
வேலை இல்லை நின்று போ!
பேசுகின்ற வெண்ணிலா!
பெண்மை இல்லை ஓய்ந்துப் போ!
பூ வளர்த்த தோட்டமே!
கூந்தல் இல்லை தீர்ந்துப் போ!
பூமி பார்க்கும் வானமே!
புள்ளியாகத் தேய்ந்துப் போ!
பாவை இல்லை பாவை, தேவை என்னத் தேவை?
ஜீவன் போன பின்னே, சேவை என்ன சேவை?
முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!
காதல் ரோஜாவே!
எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்,
கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால்,
நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!
-
படம்: இதயக்கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நா வறண்டு பாடுகின்றேன்
(வானுயர்ந்த சோலையிலே)
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாடியென்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை
(வானுயர்ந்த சோலையிலே)
ஆற்றங்கரை ஒரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடி வைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதையானதடி
(வானுயர்ந்த சோலையிலே)
-
படம்: அம்மன் கோயில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி
நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம
கேட்டாக்கா பதிலும் சொல்லாம
கூக்கூ எனக் கூவுவது ஏனடி
கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே
சொல்லாத சைகையிலே நீ ஜாடை செய்கையிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கை சேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
(சின்ன மணிக்குயிலே)
பட்டுத் துணி உடுத்தி உச்சி முடி திருத்தி
தொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள
உன் சேலை காற்றில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பார்த்து என் எண்ணம் கூத்தாட
மாராப்பு சேலையில நூலைப் போல நானிருக்க
நான் சாமியை வேண்டுறேன் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
(சின்ன மணிக்குயிலே)
-
படம்: சின்ன மாப்பிள்ளை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா
காட்டு குயில் பாட்டுச் சொல்ல
வீட்டுக் கிளி கேட்டுக் கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டுக்கிளி நானுமே
(காட்டு குயில்..)
மனசுல திறந்தது மணிக்கதவு
மரகத பதுமையை இனி தழுவு
இடையில விழுந்தது இளமனசு
இனிக்கிற சுகமது பல தினுசு
நாளெல்லாம் ராகம் பாடுதே தேகம்
வாழ்வெல்லாம் யோகம் வாழ்த்துதே யாவும்
விதவிதமா விருந்து வச்சு
விழி வழியே மருந்து வச்சு
விரல் தொட அதில் பல சுகம் வரும் பொழுதாச்சு
(காட்டு குயில்..)
விழியிலே தெரியுது புதுக் கணக்கு
விடியிற வரயினில் அது எனக்கு
தடைகளை கடந்தது மலை அருவி
தனிமையில் மறந்தது இளங்குருவி
தேகமே தேனா தேடினேன் நானா
மோகம்தான் வீணா மூடுதே தானா
தொடத்தொடத்தான் தொடர்கதையா
பட படத்தான் பல சுவையா
அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா..
(காட்டு குயில்..)
-
படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: MS விஸ்வநாதன், இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுரமணியம், S ஜானகி
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...
தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க...
காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்... இணைவோம்...
இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா...
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ...
தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...
-
படம்: டார்லிங் டார்லிங் டார்லிங்
இசை: ஷங்கர் - கணேஷ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: குருவிக்கரம்பை சண்முகம்
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
(ஓ நெஞ்சே..)
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
(ஓ நெஞ்சே..)
தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன்
சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில்
செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்
(ஓ நெஞ்சே..)
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்
(ஓ நெஞ்சே..)
-
படம்: தில்லு முல்லு
இசை: MS விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது ஆஆஆஆ
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
-
படம்: சத்யா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், லதா மங்கேஷ்கர்
வளையோசை கலகலகலவென
கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலுசிலு என
சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்னப் பெண் பெண்ணல்ல
வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான்
அன்று காதல் தேரோட்டம்
(வளையோசை கலகலகலவென)
ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக்கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்
(வளையோசை கலகலகலவென)
உன்னைக் காணாது உருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில்தான்
(வளையோசை கலகலகலவென)
-
படம்: நேற்று இன்று நாளை
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
ஆஆஆ ஓஓஓ ஆஹா ஓஓ
எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
-
படம்: ஒரு தலை ராகம்
இசை: T ராஜேந்தர்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வாசமில்லா மலரிது ஹஹஹஹஹ
வசந்தத்தைத் தேடுது
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்று
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
மாதங்களில் என்ன பன்னிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
-
படம்: இதய தாமரை
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலைவேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலைவேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா
பூவுக்கொரு பூஜைசெய்ய பிறந்தவன் நானில்லையா
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா
தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா
ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது
உன் மூச்சிலல்லவா என் மூச்சும் உள்ளது
ஒன்றானது
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலைவேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
யாருக்கு யாருறவு யாரறிவாரோ
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ
பொன்மகள் மூச்சுவிட்டால் பூ மலராதோ
பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ
கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது
இயல்பானது
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலைவேளையில்
லலலாலலாலலா லாலலலாலா
லலலாலலாலலா லாலலலாலா
-
படம் : அன்புள்ள ரஜினிகாந்த்
இசை : இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பனி விழும் புல்வெளியில் தினம்தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்
(உனை நினைத்தேன்)
இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
காதல் யோகம்தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்
(உனை நினைத்தேன்
-
படம் : தளபதி
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ்
காட்டு குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான்
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலைவிட்டு கச்சைகட்டு ஆடத்தான்
(காட்டுக்குயிலு... )
எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாசம் நெஞ்சத்திலே...
(காட்டுக்குயிலு... )
போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழச எல்லாம் சுட்டுத்தள்ளு
புதுசா இப்போ பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா டோய்
பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய்
ஊதக்காத்து வீச உடம்புக்குள்ள கூச
குப்பைக்கூளம் பத்தவெச்சு காயலாம்
தை பொறக்கும் நாளை.. விடியும் நல்ல வேளை
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்
அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கறும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்..
(காட்டுக்குயிலு... )
பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்லே..
பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லை
உள்ள மட்டும் நானே உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கோன்னு சொல்லுவேன்..
என் நண்பன் போட்ட சோறு நிதமும் திண்ணேன் பாரு
நட்பைக்கூட கற்பை போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டு தாளம் இட்டு
பாட்டு பாடும் வானம்பாடி நான் தான்..
-
படம்: அரவிந்தன்
இசை:யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஷோபனா
வரிகள்: வைரமுத்து
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்
(ஈர நிலா..)
நீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்
முள் மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்
நம்மை விழி சேர்த்ததோ
இல்லை விதி சேர்த்ததோ
உள்ளம் ஒன்றானதே
போதும் இன்பம் போதும்
(ஈர நிலா..)
தாயான பூமாது தோள்மீது சாய்ந்திடும்போது
என் நெஞ்சில் பாலூரும் அன்பு தவிப்பு
தலைமுறை கண்டாலும் தாளாது உந்தன் அன்பு
எப்போதும் வேண்டும் உன் இன்ப அழைப்பு
சேரும் நதி ரெண்டுதான்
பாதை இனி ஒன்றுதான்
வெள்ளை மழை மண்ணிலே
தூறும் வண்ணம் சூடும்
(ஈர நிலா..)
-
படம்: இளமை ஊஞ்சலாடுகிறது
இசை: இளையராஜா
பாடியவர்: வாணி ஜெயராம், SP பாலசுப்ரமணியம்
பாடல்: கவிஞர் வாலி
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
சங்கமங்களில் இடம் பெறும் சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன....
[ஒரே நாள்...]
நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன...
[ஒரே நாள்...]
பஞ்சனை பாடலுக்கு... பல்லவி நீ இருக்க
பஞ்சனை பாடலுக்கு... பல்லவி நீ இருக்க
கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிரண்டிலும் ஒரே லயம்
இரவும், பகலும், இசை முழங்க....
[ஒரே நாள்...]
-
பாடல் பாடியவர் : வாணி ஜெயராம் , எஸ்.பி.பாலசுப்ரமணியம்
படம்: நீயா
வருடம் :1979
இசை: சங்கர்-கணேஷ்
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணாஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா
ஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ...ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ண
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணே ... ஏ....ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ....ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ண
பெண்: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
ஆண்: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே
பெண்: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
ஆண்: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே
பெண்: அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான
ஆண்: இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே
பெண்: என் மன்னனே... ஒரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா...ஆ...
ஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ண
ஆண்: இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்ற
பெண்: நான் வெறும் கோயில் ஆகாமல் காக்
ஆண்: உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும
பெண்: அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்கதேர் கொண்டு வா....கண்ணன் வந்து கீதம் சொன்னால், நான் ஆடுவேன்....
ஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஓ...ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே
பெண்: அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன
ஆண்: இந்த மழைமேகம் உன்மீது ஆடும
பெண்: அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன
ஆண்: இந்த மழைமேகம் உன்மீது ஆடும்வண்ணப் படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம
பெண்: இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும
ஆண்: புது வெள்ளமே... ஏ...ஒரே சொர்கம் எந்தன் பக்கம், வேறில்லையே...
பெண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா....
-
படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா
பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா கேள் இதை பொன்னையா
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஒரே ராகங்களைப் பாடும் விதம் மாறும் தினம் மாறும்
ஒரே ராகங்களைப் பாடும் விதம் மாறும் தினம் மாறும்
மேகங்களில் காணும் படம் மாறும் தினம் மாறும்
அழகிய கலை அது இவளது நிலை இது
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
நிலா காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி
நிலா காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி
தோகை இடம் காணும் சுகம் இன்னும் பல கோடி
பலவகை நறுமணம் தருவது திருமணம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா
பாரதி கண்ணய்யா நீயே சின்னய்யா கேளிதை பொன்னய்யா
அதிசய மலர்முகம், தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
விழாக் காலங்களில் கோவில் சிலை பாடும் உரை பாடும்
விழாக் காலங்களில் கோவில் சிலை பாடும் உரை பாடும்
காலை வரை காமன் கனை பாயும் வரை பாயும்
சுகம் ஒரு புறம் வரும் இடையிடை பயம் வரும்
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
அலைமோதும்படி ஓடும் நதி நெஞ்சம் இளநெஞ்சம்
அலைமோதும்படி ஓடும் நதி நெஞ்சம் இளநெஞ்சம்
ஆசை வலை தேடும் சுகம் மஞ்சம் மலர் மஞ்சம்
முதன்முதல் பயம் வரும் வரவர சுகம் வரும்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா
(பாரதி கண்ணய்யா)
-
படம்: திருமலை
இசை: வித்யாசகர்
பாடியவர்கள்: சுஜாதா, SP பாலசுப்ரமணியம்
வரிகள்: பா. விஜய்
அழகூரில் பூத்தவளே...
என்னை அடியோடு சாய்த்தவளே...
மலையூரில் சாரலிலே.. என்னை மார்ப்போடு சேர்த்தவளே
உன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்
ம்ஹ்ம்ஹ்ம்ம்.. ம்ஹ்ம்ஹ்ம்ம்.
ம்ஹ்ம்ஹ்ம்ம்.. ம்ஹ்ம்ஹ்ம்ம்.
அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சா..ய்..த்..த..வளே
நீயுடுத்தி போட்ட உடை.. என் மனதை மேயுதடா
நீ சுருட்டி போட்ட முடி.. மோதிரமாய் ஆகுமடி
இமையாளே நீ கிழிக்க இதழாலே நான் அளிக்க
கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே
சடையாலே நீ இழுக்க.. இடைமேலே நான் வழுக்க
காச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே
என்னை திரியாக்கி.. உன்னில் விளக்கேற்றி..
என்னாலும் பார்த்திருப்போம்
ஹோய்.. ஹோய்..
அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே
நீ முறிக்கும் சோம்பலிலே.. நான் ஒடிஞ்சு சாய்ஞ்சிடுவேன்
நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே.. நான் இறங்கி தூங்கிடுவேன்
குறிலாக நான் இருக்க.. நெடிலாக நீ வளர்க்க
சென்னைத்தமிழ், சங்கத்தமிழ் ஆனதடி
அறியாம நான் இருக்க.. அழகாக நீ திறக்க
காதல் மழை ஆயுள் வரை தூருமடா
என்னை மறந்தாலும், உன்னை மறவாத
நெஞ்சோடு நான் இருப்பேன்
ஹொய் ஹொய் ஹொய்.. அன்பூரில் பூத்தவனே
ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே
ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் மலையூரின் சாரலிலே
ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் என்னை மார்ப்போடு சேர்த்தவளே
உன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்த்தேன்
உயிர் நூலில் கோர்த்து.. உதிராமல் காப்பேன்..
-
படம்: விண்ணுக்கும் மண்ணுக்கும்
இசை: சிற்பி
பாடியவர்கள்: சுஜாதா, SP பாலசுப்ரமணியம்
உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வேனே கலந்தேனே
இதயத்தை இதயத்தில் இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே
(உனக்கென..)
திருவிழா போல காதல்தான்
அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில்
நம்மை தேடும் செய்தி தருவோமா
ஸ்ரீ ராம ஜெயத்தை போல உன் பெயரை
தினம் எழுதி பார்க்கிறேன்
கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி
தினம் சொல்ல கேட்கிறேன்
அடி ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஓசை
உயிர் வரை கேட்கிறதே
(உனக்கென..)
கடலாக நீயும் மாறினால்
அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால்
அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்
அறிதாரம் பூசும் ஒரு வானவில்லை
பரிசாக கேட்கிறேன்
பகல் தீபமாகி ஆகாய நிலவை
உறவோடு பார்க்கிறேன்
அடி பொய் என்றபோதும் உன்னோடு பேசும்
கனவுகள் வேண்டுகிறேன்
(உனக்கென..)
-
படம்: உழவன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ
(பெண்ணல்ல பெண்ணல்ல..)
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாளம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் சென்பகப்பூ....
(பெண்ணல்ல பெண்ணல்ல..)
தென்றலைப் போல நடப்பவள்
என்னைத் தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்த்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு..
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி
(பெண்ணல்ல பெண்ணல்ல..)
சித்திரை மாத நிலவொளி..
அவள் சில்லெனத் தீண்டும் பனித்துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தைப் போல இருப்பவள்
வெல்லப் பாகைப் போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனைப் பூமுடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்...
(பெண்ணல்ல பெண்ணல்ல..)
-
படம்: காதல் மன்னன்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்....
இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்....
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....
(உன்னை........)
ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாய இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ
(உன்னை..........)
நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீ இருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமயமலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ
(உன்னை...........)
-
படம்: மௌனராகம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேன்
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
காவேரியா கானல் நீரா பெண்மை எது உண்மை
முள்வேலியா முல்லைப் பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
பூஞ்சோலையில் வாடைக்காற்றும் ஆட சந்தம் பாட
கூடாதென கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரேயொரு வார்த்தை சொன்னாலென்ன தேனே
ஒரேயொரு பார்வை தந்தாலென்ன மானே
ஆகாயம் காணாத மேகம் ஏது கண்ணே
(நிலாவே வா செல்லாதே வா...)
-
படம்: இதயக்கோவில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுதான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுதான்
சோர்ந்தபோது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
(பாட்டுத் தலைவன் பாடினால் )
காதல் பேசும் தாழம்பூவே
ஓவியம் ஆனதே கைகள் மீது
கைகள் வண்ணம் தீட்டும் நேரம்
ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்
பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே
காதலே வாழ்கவே ஆயிரம் காலமே
நீதானே தாலாட்டும் நிலவே
(பாட்டுத் தலைவன் பாடினால் )
பாதி ஜாமம் சாயும் போதும்
பால்நிலா வானிலே காதல் பேசும்
ஊரைத் தூக்கம் ஆளும்போது
பார்வைகள் பேசுதே பாவையோடு
காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்
ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்
நாந்தானே தாலாட்டும் நிலவு
(பாட்டுத் தலைவன் பாடினால்)
-
படம்: உலகம் சுற்றும் வாலிபன்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்
(அவளொரு)
மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
(மரகத மலர்)
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் அஹஹஹா
(அவளொரு)
அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
(அறுசுவை)
ஊடல் அவளது வாடிக்கை
(ஊடல்)
என்னைத் தந்தேன் காணிக்கை அஹஹஹா
(அவளொரு)
-
படம்: இதய கோவில்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணப் பார்க்கையிலே
ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது
(கூட்டத்தில..)
நான் பாடும் ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ தந்தது
என் பாடல் உன் நெஞ்சில் யாழ் மூட்டுது
என் ஆசை உன்னைத் தாளாட்டுது
பூங்குயிலே பூங்குயிலே உந்தன் பாதையிலே
ஆனந்தத் தேன் பொழிவேன்
பாவை உன்னை எண்ணிக்கொண்டு
பாடுகின்றேன் பாடலொன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து
வாழுகின்றாய் கோவில் கொண்டு
ஆனந்த மேடைல் பூவிழி ஜாடையில்
ஆயிரம் காவிய நாடகமாடிட
எண்ணுது என் மனமே
(கூட்டத்திலே..)
நீதானே நானாடும் பிருந்தாவனம்
நின்றாடும் தேகம் ரோஜாவனம்
ஆகாயம் காணாத பொன் மேகமே
என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே
கண்ணிப்பெண்ணே நீயும் இல்லையென்றால்
கானமழை வருமோ
தாமரை பூ நான் எடுத்து
நீ நடக்கும் வேளையிலே
தாலாட்டுடன் சந்தங்களைக் கற்றுக்கொண்டேன் பொன்மயிலே
என்னிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில்
வான் மழை போல் இந்த பாவலன்
நெஞ்சினில் வாழிய வாழியவே
(கூட்டத்திலே..)
-
படம்: நாணயம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
நான் போகிறேன் மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாலியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் போலே
தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும்
நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான
(நான் போகிறேன்..)
கண்ணாடி முன்னே நின்றேன் தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டிப்பார்த்தால் ஐயோ
உள் பக்கம் தாழ்ப்பால் போட்டும் அட என்னுள் நீ வந்தாய்
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூமாலை செய்தேன் வாடுதே
எண்ணத்தைத் தேடும் பார்வையாவும் சேலையாகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே ஹா
நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான
ஹ்ம்ம்ம்ம் நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான
என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
உள்ளத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
அன்றாடம் போகும் பாதையாவும்
இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டு செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேன்
(நான் போகிறேன்..)
நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான
-
படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போனதேன்
(வா வெண்ணிலா..)
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாயே பாவம்
ஒரு முறையெனும் திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் எனக்கது போதும்
உன்னைச் சேர உனைச் சேர எதிப்பார்த்து
முன்னம் ஏழு ஜன்மம் ஏங்கினேன்
(வா வெண்ணிலா..)
மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
இணை பிரியாமல் துணை வர வேண்டும்
உனக்காக உனக்காக பனிக்காற்றை
தினம் தூது போக வேண்டினேன்
(வா வெண்ணிலா..)
-
படம்: பகலில் ஒரு நிலவு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே சுகம்
(இளமையெனும்..)
தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கனவம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா
(இளமையெனும்..)
அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இதம் பதமாய்த் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தால் மறந்தால்
ஏள்வி எழுமுன் விழுந்தால்
எந்த உடலோ எந்த உறவோ
(இளமையெனும்..)
மங்கை இனமும் மன்னன் குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ
(இளமையெனும்..)
-
படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திரு தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்த கோயிலின் மணி வாசலை
இன்று மூடுதல் முறையோ
(மணியோசை..)
கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தாள் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன் ஆ..
கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தாள் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்
பேசக் கூடாதோ
ராதை மனம் ஏங்கலாமோ
கண்ணன் முகம் வாடாலாமோ
வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ
(மணியோசை..)
பாதை மாறிப் போகும்போது
ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போகும்போது
ராகம் தோன்றாது
பாதை மாறிப் போகும்போது
ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போகும்போது
ராகம் தோன்றாது
பாடும் புது வீணை இங்கே
ராகம் அதில் மாறும் அங்கே
தாளம் மாறுமோ ராகம் சேறுமோ
(மணியோசை..)
-
படம்: சிகரம்
இசை: SP பாலசுப்ரமணியம்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: வைரமுத்து
இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதமாகுமோ
(இதோ..)
என் வானமெங்கும் பௌர்ணமி
இது என்ன மாயமோ
என் காதலா உன் காதலா
நான் காணும் கோலமோ
என் வாழ்க்கை என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ
பசியென்பதே ருசியல்லவா
அது என்று தீருமோ
(இதோ..)
அந்த வானம் தீர்ந்து போகலாம்
நம் வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம் மாறலாம்
நம் பாசம் மாறுமா
ஒரு பாடல் பாட வந்தவள்
உன் பாடலாகிறேன்
விதி மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் க்ஊடுமா
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா
(இதோ..)
-
படம்: உன்னால் முடியும் தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
(இதழில்..)
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுத
நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்க தனிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திருமோ
காலை மனம் அதுவரை பொருத்திடுமோ
மாலை மலர் மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருதுகள் படைத்திடும்
(இதழில்..)
தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகாஇச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும்
சுந்தர நிலவோ
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரடைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கனைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது
(இதழில்..)
-
படம்: இதய கோவில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், இளையராஜா
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்
(இதயம்..)
ஆத்மா ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல
எனது ஜீவன் ஒன்றுதான் என்றும் புதிது
(இதயம்..)
காமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதங்கள்
ராம நாமன் மீதிலே நாடத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது
(இதயம்..)
நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேறும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேரம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேரம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதுயிர் ஜீவன் எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே
(இதயம்..)
-
படம்: அமர்க்களம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சுவரை கொல்லையிட்டு போனதில்லை
ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எறி அமிலத்தை வீசியவர் யாரும் இல்லை
(மேகங்கள்..)
பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே
என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எறியும் உடலென்று தெரியும் பெண்ணே
என் இளமைக்கு தீயிட்டு எறிக்க மாட்டேன்
(மேகங்கள்..)
கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்
என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்
துண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம்
அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்
(மேகங்கள்..)
செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி
தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி
எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன்
என் இரவினைக் கவிதையாய் மொழி பெயர்த்தேன்
(மேகங்கள்..)
மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்
மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி
ஓடி ஓடி போகாதே ஊமைப்பெண்ணே
நாம் உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி
(மேகங்கள்..)
-
படம்: சலங்கை ஒலி
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி துடிக்குது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
சுருதியும் லயமும் ஒன்று சேர
(தகிட..)
உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் துளிநீர்
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை
ஆ...
(தகிட..)
பழைய காலம் மறந்து நீ பறந்ததென்ன பெரிது
இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் பொங்கிடும் ஓடம் நானே
பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்க வில்லை
(தகிட..)
-
படம்: சலங்கை ஒலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபினயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேரு பெருமே
ராகங்களே ஆ.. பழகுவதே ஆ..
ராகங்களே பழகுவதே பாவங்களே கலையசைவே
குழலோடு உயர்வுகள் இணைகின்ற தவமிது
(நாத..)
கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பௌர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒலி தீபம்
நவரச நடனம் தனிதனி தனிசா
ஜதி தரும் அமுதம் தனிதனி தனிச
நவரச நடனம் ஜதி தரும் அமுதம்
அவன் விழி அசைவில் எழுதுளி அசையும்
பரதமென்னும் நடனம் ஆ..
பிறவி முழுதும் தொடரும் ஆ..
பரதமென்னும் நடனம் பிறவி முழுதும் தொடௌம்
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
திமிதிமி திமிதிமி
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாழும்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நடனம்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நாட்டியம்
உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவ கவசம்
நடராஜ பாதம் நவரசம்
திரன திரன திரதிர திரதிர
(நாத..)
-
படம்: இதய கோவில்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
(நான் பாடும்..)
உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னை காண வெண்ணிலா வந்து போனதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடி தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இன்று பாடுது
உடு இன்று குயிலைத் தானே தேடுது
(நான் பாடும்..)
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே யோகம் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது
காம்பு இங்கு வாடுது
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று கேலியாகிப் போனது
(நான் பாடும்..)