FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: VipurThi on April 13, 2017, 06:02:17 PM

Title: அன்பிற்கு நேரம் (படித்ததில் பிடித்தது)
Post by: VipurThi on April 13, 2017, 06:02:17 PM
மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்..

🔔என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !

🔔🔔நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.!

🔔🔔🔔என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.!

👮தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார்.

📢அதற்கு அலெக்ஸாண்டரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை.!!

🔔தலைசிறந்த மருத்துவர்களால்கூட என்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது, சாவை தடுக்க முடியாது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக !

🔔🔔நான் இந்த பூமியில் சேகரித்த. கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானவை என்பதை தெரியப்படுத்துவதற்காக.!

🔔🔔🔔எனது கைகள் காற்றில் அசையும்போது, மக்கள் வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை உணர்ந்து கொள்வார்கள்.!!

நாம் இந்த பூமியில் பிறக்கும்போது கொண்டு வருவதெல்லாம் நாம் இந்த பூமியில் வாழும் காலமாகிய "நேரம் மட்டுமே:"
உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு உங்களின் நேரம் மட்டுமே.!!
Title: Re: அன்பிற்கு நேரம் (படித்ததில் பிடித்தது)
Post by: SarithaN on April 14, 2017, 06:29:29 PM
தங்கச்சி.....

அனைவரும் இவற்றை உணர்தல் நன்று.....
முன்னர் அறிந்திருக்கின்றேன்.....
மீண்டும் படித்து...
மனதில் நிலை நிறுத்திக்கொண்டேன்.....

பாராட்டுக்கள்... நன்றி...
Title: Re: அன்பிற்கு நேரம் (படித்ததில் பிடித்தது)
Post by: VipurThi on April 16, 2017, 08:10:08 PM
Sari na:) nandri and magizhchi anna;)