FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ரித்திகா on April 28, 2017, 03:17:43 PM

Title: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: ரித்திகா on April 28, 2017, 03:17:43 PM
காத்திருப்பேன் மீண்டும் வா !!!

நீ கொடுத்த மேகத்தால்
மழைத்துளியானவள் நான் ...

மண்ணை வந்து சேருமுன்னே 
நான் மரித்துப் போன
தடம் தெரியவில்லை ...

ஒரு நாள் ஒரு பொழுது
உன்னுடன் வாழ்ந்ததில்லை
ஆனால்
ஓராயிரம் ஆண்டுகள் உன்னுள் வாழ்ந்த
நிறைவைத் தருகிறது ...
எனக்காய் நீ சிந்திய ஒரு துளிக் கண்ணீர் ...

இந்த முறை மட்டுமல்ல
நான் ஜனிக்கும் ஒவ்வொரு முறையும்
உனக்காய் காத்திருப்பேன் ...
நீ எனக்காய் ...
மீண்டும் வா ....
மீண்டும் வா !!!!
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: VipurThi on April 28, 2017, 03:38:16 PM
Hi rithi ma ;D un intro padikum pothu therinjikiten nee mazhai oda rasigainu ;D supera eluthiruka unna oru mazhai thuliya uruvagichu  :-* mazhai matum illa nanum kathirupen unoda kavithaigalukaga :) keep writting rithi chllm ;) and always keep smiling ma ;D
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: ரித்திகா on April 29, 2017, 09:01:07 AM


வணக்கம் பூர்த்தி மா ...!!!!

  ஹாஹாஹா ...நன்றி மா ....
  ஆனால் இது நான் எழுதிய கவிதை இல்லை பூர்த்தி ...
  ஒரு கதைப் படித்தேன் ...அக்கதையில் வரும்
  கவிதை இது ....பார்த்தேன்  படித்தேன் ...
  ரசித்தேன் ...பகிர்ந்தேன் ....
  வசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி பூர்த்தி ...!!!

Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: ரித்திகா on April 29, 2017, 03:18:33 PM
~ !! தருகிறேன் எந்தன் காதலை !! ~


எனக்குத் தாயுமானவன் நீ..
என் தந்தை நீ ...
என் நண்பன் நீ ...

என் மூச்சு நீ ...
என் பேச்சு நீ ...
என் உணர்வு நீ ...

எனக்கு எல்லாமும் நீ ...
எனக்குள் எல்லாமும் நீ ...

இப்படிக்கு எனக்கு சகலமுமாய்
இருக்கும் உனக்கு
வேறென்னத் தருவேன்
என் காதலைத் தவிர ...!!!
(http://www.picgifs.com/animal-graphics/animal-graphics/butterflies/animal-graphics-butterflies-091249.gif)
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: VipurThi on April 29, 2017, 04:10:54 PM
Hi rithi :D nan மனதை வருடிய கவிதைகள் intha heading vachu guess panirukanum ithu padithathil pidithathu nu :) en brain loose agiduchu he he he ;D
Kavithai rmba azhaga iruku kadhal kavithai nale athu oru thani feel la :) super chllm ;)
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: ரித்திகா on April 29, 2017, 05:07:19 PM
 ;D  Ya ya da purthi  ....kaadhal naale athu
oru thani feel thaan ...
enaku piditha kavithai unakum pidithathil ...
manam magizhnthen...thanks da... ;)
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: ரித்திகா on May 08, 2017, 11:09:11 AM
    மரணம்


அது இல்லாது போனால்
என்னவாகும் உலகம்
ஜனனமே தொடர்ந்தால்
பூமியே மூச்சிமுட்டிப்போகும்

மரணம்
பிறப்பிற்கான சான்றிதழ்
பாவபாதையின் தடைக்கல்

மரணம்
இவ்வுலக வாழ்வின் சம்பளம்
மறுவுலக வாழ்வின் முன்பணம்

மரணம்
விதவையின் விரோதி
வெள்ளைச்சேலையின் நண்பன்

மரணம்
நல்லவைகளால் மணம் கமழும்
தீயவைகளால் மனம் உருகும்

 மரணம்
தேடிப்போவது “ரணம்”
தேடிவருவது சுகம்

மரணம்
அடைந்தபோது உடலாகும் “மரம்”
அதை காணும்போது
அச்சத்தால் உள்ளம் அஞ்சிநடுங்கும்

மரணம்
அடைந்தவருக்கு கிடைத்திடும்
சாந்தி
வாரிகொடுத்தவருக்கு தொலையும்
மனநிம்மதி

மரணம்
நான்குவகை பரிமாணம்
[ஜனனம் இன்பம் துன்பம் மரணம்]
நான்கு தோள்களின் பயணம்
[இறுதி ஊர்வலம்]

மரணம்
உலகுக்கு திரும்பமுடியாத
ஒற்றையடிபாதை
இதை உணர்ந்தால் தெளிந்திடும்
உலகபோதை

மரணம்
நான்கெழுத்தின் கவிதை
விவரிக்கமுடியாத சரிதை
மனம் கசிந்துருகும் அழுகை

மரணம்
வருமுன் காப்போம் மனதை
தவிர்த்துக்கொள்வோம் தீயதை
தொடர்ந்து செய்வோம் நல்லதை……..

மணம், ரணம், மரம், மரணம்!!
~ !! Yousuf !! ~
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: VipurThi on May 08, 2017, 11:59:39 AM
Hi Rithi ma :D

மரணம்
அடைந்தவருக்கு கிடைத்திடும்
சாந்தி
வாரிகொடுத்தவருக்கு தொலையும்
மனநிம்மதி

Intha line rmba unmaiyana oru vishayam la :( maranatha vella yaralum mudiyathu :) enaku itha padichathum harry potter and the deathly hallows la maranam and 3 sagotharargal nu oru storya sollrathu than click aachu :) life la nama unaravendiya oru kavithai :) thanks for posting here Rithi ma :D
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: SunRisE on May 08, 2017, 01:32:58 PM
மழை எல்லோருக்கும் பிடித்த ஒன்று
நீங்கள் ரசிக்கும் விதம் அருமை
உங்கள் மரண கவிதை
உண்மையின் வெளிப்பாடு யதார்த்தம்
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: ChuMMa on May 09, 2017, 07:47:50 PM
யாரங்கே?
வாருங்கள்...

விண்ணுக்கும் மண்ணுக்கும்
தண்ணீர்ப்பாலம் பாருங்கள்

திரவ முத்துக்கள்
தெறிப்பது பாருங்கள்

யாசித்த பூமிக்கு
அந்த வானம்
வைரக் காசுகள்
வீசுவது பாருங்கள்

மழை மழை மழை
மழை மழை மழை

மண்ணின் அதிசயம் மழை

பூமியை வானம்
புணரும் கலை மழை

சமுத்திரம் எழுதும்
சமத்துவம் மழை

மழைபாடும்
பள்ளியெழுச்சியில்
ஒவ்வொர் இலையிலும்
உயிர் சோம்பல்முறிக்கிறது

இது என்ன...?

மழையை இந்த மண்
வாசனையை அனுப்பி
வரவேற்கிறதா?

என்ன...?
என்ன சத்தம்...?
சாத்தாதீர் ஜன்னல்களை
அது மழைக்கெதிரான
கதவடைப்பு

குடையா?
குடை எதற்கு?
அது
மழைக்கெதிராய்
மனிதன் பிடிக்கும்
கறுப்புக் கொடி

ஏன்...?
ஏனந்த ஓட்டம்?
வரம் வரும் நேரம்
தபசி ஓடுவதா?

இதுவரை நீங்கள்
மழையைப் பார்த்தது
பாதிக் கண்ணால்

ஒலி கேட்டது
ஒரு காதால்

போதும் மனிதர்களே

பூட்டுப் போட்டுப்
பூட்டுப்போட்டுப்
புலன்களே பூட்டாயின

திறந்து விடுங்கள்

வாழப்படாத வாழ்க்கை
பாக்கி உள்ளது

உங்கள் வீட்டுக்கு
விண்ணிலிருந்து வரும்
விருந்தாளியல்லவா மழை

வாருங்கள்

மழையை
நம் வீட்டுத்
தேநீருக்கழைப்போம்

----வைரமுத்து ----
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: ரித்திகா on May 31, 2017, 12:59:34 PM
(https://s2.postimg.org/iqj1wzdyh/sundd.jpg)
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: ரித்திகா on May 31, 2017, 12:59:55 PM
(https://s4.postimg.org/k1jjlfxfh/chummm.jpg)
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: ரித்திகா on May 31, 2017, 01:02:16 PM
~ !! அவன் !! ~
(https://scontent-kut2-1.xx.fbcdn.net/v/t1.0-9/18740630_1695158467452758_532304353443319623_n.jpg?oh=047dcee0143d46235b61ade13acb7d6a&oe=59A836AF)

முதலிரவு முடிந்ததுமே
முகமெல்லாம் மலர்ந்தவனாய்
'அப்பா' ஆகிவிட
ஆவலுடன் காத்திருப்பான்.
அவளுடைய அடிவயிற்றை
நாள்தோறும் வருடிவிட்டு,
எப்போது என்குழந்தை
இவ்வுலகு வருமென்பான்?
உண்மையில் அவன் ஆசை
அவளைவிட பேராசை.
அவள் ஆசைப்படுவதெல்லாம்
அழகாய் கொடுத்திடுவான்.
தாயாகிப் படுகின்ற
அவள்அவஸ்தை பார்ப்பதனால்
தன்னெஞ்சே வெடிப்பதுபோல்
தனிமையிலே அழுதிடுவான்.
சுகமாகப் பிரசவித்தால்
கொஞ்சமாக அழுதிடுவான்.
சீசரில் பிரசவித்தால் - அவள்
வலி தீர அழுதிடுவான்.
பெண்களுக்கு கண் குளத்தில்
வழியவழிய நீரிருக்கும்.
ஆண்களுக்கு அதுகொஞ்சம்
ஆழமாகப் போயிருக்கும்.
ஆணழுதால் மீன்போல
யாருக்கும் தெரிவதில்லை.
பெண்ணழுதால் பிடித்துவைக்கப்
பாத்திரங்கள் போதவில்லை.
அவள் முகத்தை தன்மார்பில்
தான் அணைத்துத் தாயாவான்.
அவள் வலியைத் தான் கொஞ்சம்
கடன் வாங்கி வைத்திருப்பான்.
குழந்தையைத் தோள்மீதும்
மனைவியைத் தன்மீதும்
சுமக்கின்ற சுமைதாங்கி
'அவன்' என்றால் அது மிகையல்ல !!
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: SarithaN on May 31, 2017, 11:04:15 PM
வணக்கம் தங்கச்சி

கவிதை அழகா இருக்கு
ஆழமான அன்போடு இருக்கு
ஆண்களையும் பேற்றி இருக்கு
படிக்கையில் மகிழ்ச்சியா இருக்கு

இதுக்கு மேல தங்கையின் கவிக்கு
வேறு எதுவும் சொல்லவும் முடியாது

மிக மிக சிறப்பான
உண்மையான வாழ்க்கையை
தாங்கி பிறந்து தவழ்கிறது கவிதை

வாழ்த்துக்கள்
நன்றிமா
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: ராம் on June 01, 2017, 07:10:39 AM
nice rithika. varum varum meendum wait pannunga hehe
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: ரித்திகா on June 02, 2017, 01:50:47 PM
(https://s23.postimg.org/uo9q0p7wr/sari_1.jpg)
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: ரித்திகா on July 24, 2017, 11:33:08 AM
~ !! என்னைத் தோடு !! ~

என்னைத் தோடு என் இதயத் தேவதையே ..
ஏங்கும் என் இதயம் நிறைந்திட
உன் அன்பெனும் தேனைப்  பாய்ச்சு
உன் அன்பினால் என்னைக் கவர்ந்தாயே ...

என்னைத் தோடு என் அன்பே ,
என் இதயத்தைத் தோடு ..
கலைந்த என் கனவுகள் தான் எத்தனை
 உன் நினைவுகள் என் கனவாகட்டுமே ...

என்னைத்  தோடு என்  இதய இளவரசியே..
உன் கனவுகள் என் கனவுகள்  ஆக ..
என் கனவுகள் உன்  கனவுகள்  ஆக ...
ஒன்றாய் நாம் இணைந்திடுவோமே ..

என்னைத் தோடு என் இனிய கனவே ..
உன் நினைவுகள் தான் எத்தனை இனிமை ..
என் இதயத்தில் நீ  நிறைந்தாய் ...
உன் இதயத்தில் நான் ......

- This Poem Loshi Baby sutting From someone...
N now im sutting from loshi baby..
epdi paathalum inga intha kavithai
motha post pannathu Loshi baby...So its Belongs to Her...!!! :-*
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: LoShiNi on July 24, 2017, 11:58:27 AM
(http://i.imgur.com/Qu26ak3.jpg?1)
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: LoLiTa on July 24, 2017, 03:25:01 PM
Hi ritu bby! 'KADHALAI TARUGIREN' kavidhai arumai. Oru alagana kadhal padal keta mathriye irku!!!♡
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: LoLiTa on July 24, 2017, 03:29:16 PM
Ritu bby 'AVAN' kavidhai angalai patri , pirasavam epodhum angalai patri pesepaduvadhilai.. Enakum rombave pudice kavidhai odhu!!
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: DeepaLi on July 30, 2017, 11:29:58 AM
(http://gifgifs.com//animations/other-animations/love/hearts_2.gif) (http://gifgifs.com/)                                                                                                                                        (http://gifgifs.com//animations/other-animations/love/hearts_2.gif) (http://gifgifs.com/) Hi Rithika sis... Unga kavidhai ellamey romba feelings ah iruku.. padikum bodhey sila ninaivugal elam munnadi varuuthu.. Thanks keep it up sis...
(http://gifgifs.com//animations/other-animations/love/hearts_2.gif) (http://gifgifs.com/)                                                                                                                                        (http://gifgifs.com//animations/other-animations/love/hearts_2.gif) (http://gifgifs.com/)
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: ரித்திகா on July 31, 2017, 09:22:14 AM
(https://s3.postimg.org/r3luww8sj/loochiiii.jpg)

http://www.friendstamilchat.in/forum/index.php?topic=34197.msg262661#msg262661
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: ரித்திகா on July 31, 2017, 09:29:21 AM
(https://s2.postimg.org/3mpm69rix/loli.jpg)
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: ரித்திகா on July 31, 2017, 09:34:56 AM
(https://s2.postimg.org/mqtp43mbd/deep.jpg)
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~- ராசைய்யா நெனவிருக்கா
Post by: ரித்திகா on August 17, 2017, 06:48:13 AM
ராசைய்யா நெனவிருக்கா!

சேவல் கூவியதும்
வயக்காட்டில் கண்முழிச்சி
கம்மாக் கரையோரோ
கைக் கால் முகங் கழுவி..

கோமனத் துணியோட
மண்வெட்டிக் கை புடிச்சி
சேத்துக் குழிகுள்ள சோத்துக்கு
கால வச்சோம்.
ராசைய்யா நெனவிருக்கா!

கொம்புக்கு கலர் தீட்டி
திமிளுக்கு மண்பூசி
கருப்பன ஏர்பூட்டி
வயலுழுதோம் நெனவிருக்கா!

அர அடி நெலத்துக்கு
ஜென்மத்து பகை போல
அறியாமல் நான் போட்ட
வாய்க்கால் சண்ட நெனவிருக்கா!

பெத்தது  ஒவ்வொன்னும்
ஒத்துமையா ஓடையில
நாம போட்ட சண்டை எல்லாம்
மறந்த கத நெனவிருக்கா!

பொஞ்சாதிப் பொங்கிதந்த
புளியன் சோத்துருண்ட
தொண்டைக்குழி போனப்போ
இளஞ்சூடு நெனவிருக்கா!

அப்படி நெனவிருந்தா இனி
மறந்துரு,
எல்லாத்தையும் மறந்துறு..

வயக்காடு இன்னைக்கு
கோங்க்ரீட்டா மாறிடுச்சி
நம்ம ஊரு நெலத்தடிதண்ணி
எவனுக்கோ போயிருச்சு.

வாக்கு கேட்ட வாய்க் கெல்லாம்
எங்க சனம் தென்படல
ஈரேழு லோகத்து சாமிக்கும்
கண்ணில்ல!

போதும்யா போதும்...
அந்தி சமஞ்சிருச்சி
அடி வானம் செவந்துருச்சி
ஊர் மேஞ்ச பொட்டக் கோழி
கூட்டுக்குள் அடஞ்சிருக்கும்.

ராத்திரி சோத்துக்கு வழியென்ன
தெரியாது
இப்படியே போனதுன்னா எங்க உயிர் தங்காது..!
 
~ !! ச.மனோ !! ~
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: ரித்திகா on August 23, 2017, 10:19:46 AM
உணர்தல் அழகு...

அந்த மேகதூதனின் ஈரமுணர்ந்து
அந்திக் குளிரின் கூதலுணரந்து...

வாட்டிய வெயிலின் வெப்ப முணர்ந்து
நீட்டியக் கடலில் தனிமையுணர்ந்து...

மண்ணின் மனமுணர்ந்து...
பூக்களின் வண்ணமுணர்ந்து..

வனாந்தரத்தின் சப்தமுணர்ந்து
மயானத்தின் நிசப்தமுணர்ந்து...

பணத்தின் வாசமுணர்ந்து
பிணத்தின் நாற்றமுணர்ந்து...

ரயிலில் பயணமுணர்ந்து
இராத்திரியில் பயமுணர்ந்து...

ராஜாவின் மெட்டுணர்ந்து
ரஹ்மானின் இசையுணர்ந்து...

கண்ணில் காதலுணர்ந்து
பெண்ணின் ஸ்பரிசமுணர்ந்து...

உதட்டில் சுவையுணர்ந்து
ஊடலின் சுகமுணர்ந்து...

கட்டிலில் காமமுணர்ந்து
தொட்டிலின் ஆட்டமுணர்ந்து...

மழழையின் மொழியுணர்ந்து
என் தமிழின் அழகுணர்ந்து...

யாம் இத்துணையும் காதலித்து - இவ் வையகத்தே வாழ்நாள் முடிக்க உணர்ச்சியே சிறந்தது.

ஆம் உணர்தலே காதல்..!


  ~ !! ச.மனோ !! ~ 

Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: AnoTH on August 24, 2017, 12:48:50 PM
உங்கள் வாசிப்பின் இரசனை உணர்ந்து
காதலில் நின் இனிமை உணர்ந்து
நிந்தன் கவி ஆற்றலின் காரணம் உணர்ந்து
என் தங்கையின் மனதையும் அவள்தன்
மனதோரம் இருக்கும்  கனாவையும்
உணர்ந்து கொண்டேன் .

அருமை கண்ணா
மென்மேலும் உங்கள் வாசிப்பு இரசனை
பெருக வாழ்த்துகிறேன்.
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: ரித்திகா on August 28, 2017, 09:16:53 AM
நெகிழி.... 

 நீ தூக்கிச் செல்லும்
பாலிதீன் பைகள்
தேசத்தின் தூக்கு கயிறு...

ஆய்வு சொல்லதுப்பா
நெகிழி உபயோகித்தால்
மீன்கள் முதல்
மான்கள் வரை
மாண்டுப் போகும்.

ஈக்கள் முதல்
பூக்கள் வரை
மலடாகும்.

அத்தனை நதியின் காம்புகளும்
அதிவிரைவில் வற்றிவிடுமாம்.

புத்தனைப்போல் வாழ்ந்தாலும்
புற்றுநோய் முற்றிவிடுமாம்.

தீவனமில்லா ஏழை கால்நடைகள்
தினம் தின்றுமடிகிறது
பாலிதீன் பைகளை
காகிதமென்று எண்ணி....

நெகிழி நம் தேசத்தின்
வற்றா மடுகளில் ரத்தம்
உறிஞ்சுமொரு உன்னி.

கால்நடை இறப்புக்கும்
சாக்கடை அடைப்புக்கும்
காரணமிந்த நெகிழி

சுகாதார கேடுக்கும்
சூதறியா நாடுக்கும்
இதுவே சகுனி.

பாலிதீன் பைகள்
பாவை நம் மண்ணோடு
பலவந்தமாக
பாலியல் வல்லுறவு கொள்கிறதே!
தமிழ் மக்களே நாமிதை
தடுக்க வேண்டாமா ?

மூச்சு திணறுதப்பா பூமிக்கு - அவள்
முந்தியில் பிறந்த
சந்ததிகள் நாமொரு
முடிவெடுக்க வேண்டாமா?

பொய்யும் புரட்டும் பேசும்
போலி உதட்டுக்கு
எதற்க்கப்பா லிப்ஸ்டிக்?
பெய்யும் மழையின்றி
தவிக்கும் நமக்கு
எதற்க்கப்பா பிளாஸ்டிக்?

பெண்சிசு கொலையைப் போல
மன்னிக்க இயலா
பெரிய குற்றம்
மண்சிசு கொலை.

ஊருக்கு விழிப்புணர்வு
ஊட்ட
ஊர் ஊராக
ஊர்வலம் வேண்டாம்
போலியாக
பேரணி வேண்டாம்.

நானிலம் நலம் பெற
நடைமுறை வாழ்வில்
நானினி நெகிழியை
பயன்படுத்த மாட்டேன்

டீக்கடையில் தந்தாலும்
நெகிழி குவளையில்
இனிக்கும் தேநீர்
இனியும் அருந்த மாட்டேன்.

இப்படி ஒவ்வொருவரும்
உறுதி கொள்வோம். -இதை
தனிமனித கொள்கையில்
இணைத்து கொள்வோம்.

முற்றிலுமாக பிளாஸ்டிக்கை
முடக்க பழக வேண்டும்.
நாளை நம் குழந்தைகள் வாழ
உலகம் வேண்டும்.

பாலிதீன் பை - எமனின்
பாசக் கயிறு போல
தவிர்த்திடுங்கள் தோழா
இனியெம் தலைமுறைகள்
உயிர் வாழ...

இவண் ..
இப்புவியின் பேச தெரிந்த விலங்கினம் .. ..
Title: Re: ~ !!! மனதை வருடிய கவிதைகள் !!! ~
Post by: ரித்திகா on February 17, 2018, 01:18:23 PM
ஒரே ஒருமுறை காதல் செய்!

கண்களுக்குள் கரைந்து போ
மூச்சிக்காற்றை பரிமாறிக்கொள்
இணையத்து திரைகிழித்து - இச்சை
மூட்டும் இயற்கை வாசலில் வந்து விழு!

உன் அவனோ அவளோ கைபிடி!
காதலில் இருக்கின்ற
இடைவெளி தேடு
கண்டுபிடித்தால்
மொத்தமும் நிரப்பி விடு!

கரை மணலில் கால் பதி
அலை நுரையில் கை நனை
அந்திச் சாயம் பூசிக்கொள்
ஆப்பிள் கடித்து
பனித்துளி குடித்து
ஆதாம் காலத்து காதல் செய்!

காமத்து பெருவெளியை ருசி
சந்தேகங்கள் தீர்த்து போ
தேகச்சூடு அதிகரித்து
ஹார்மோன் வெள்ளம் பெருக்கெடுத்து
காதலை காமமும்
காமத்தை காதலும் கடந்து
பூச்சொரிந்து புனிதக் காதல் செய்!

வார்த்தைகள் தேடி எடு
கவிதைகள் கிறுக்கு
கவிதையில்
சந்தேகம் ஏற்பட்டால் - அந்த
பாரதிக் கம்பனை உதவிக்கு அழை!

நிலவின் வெளிச்சத்தை
உறையவிட்டு
இரவின் அழகு போர்த்தி
நட்சத்திரங்கள் திருடி - அந்த
உலக அதிசயங்களுக்குள்
ஒண்டி ஒண்டி காதல் செய்!

சின்னச் சின்ன சண்டையிடு
செல்லக் கடிகள் பதியவிடு
தேகம் கடந்து
தேடல் தொடர்ந்து
திகட்டத் திகட்ட காதல் செய்!

தேடல்கள் முடிந்து
மரணித்துப் போயின் - மறவாது
அந்தக் கல்லறைத் தூக்கத்திலும்
கண்ணியமாய் காதல் செய்!   

 ~ !! ச. மனோ !! ~