FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on December 06, 2017, 06:48:37 PM
-
ஒரு கவிதைக்கு
எனது கவிதை காணிக்கை
நண்பர்கள் இணையதளத்தில் சிறகடிக்கும்
ஒரு இளஞ்சிட்டு
இனிமையான ஒரு
மலர் கொத்து
சிலரைப் பார்த்தல் பிடிக்கும்
சிலரை பார்த்தாலும் பிடிக்காது
சிலரை பார்க்காமலேயே பிடிக்கும்
முகம் தெரியாவிட்டாலும்
நல் அகம் காட்டும்
இனிய நண்பி இவள்
பார்க்காமலேயே பிடித்துப் போன
அருமையான பெண் இவள்
குறும்பும் கலகலப்பும்
இவள் கூடப்பிறத்த உடன்பிறப்புகள்
மனம் கோணாமல் மனதை வருத்தாமல்
இனிமையாக பேசி மகிழ்ந்திடும்
இனியவள் இவள்
FTCயில் அழகுக்கு அழகு சேர்க்கும்
கலகலப்பான பெண் இவள்
பெண்கள் என்றாலே
போனுக்கு ரீசார்ஜ் பண்ணச்சொல்லி கேட்பார்கள்
அல்லது அழகுசாதன பொருட்களைத்தான் கேட்பார்கள்
என்று சொல்லுவார்கள்
ஆனால் இவள் கேட்பதெல்லாம்
முறுக்கும் அல்வாவும் தான்
நாடு விட்டு நாடு போனாலும்
எங்கள் நாட்டு உணவின் மேல்
அலாதி பிரியம் இவளுக்கு
அளவான வார்த்தைகள்
அமைதியான பேச்சு
யாருடைய மனதிலும் புண்படுத்தாமல்
கலகலவென்று பேசிடும் இவள்
பண்பட்ட இவள் குணம்
புண்பட்ட எவர் மனதிலும் ஆற்றிடும்
FTCயில் பல ரோசாக்கள் இருந்தாலும்
இவள் மட்டும் மாஷா
இவள் பேசும் போது
ஷா என்று பிரமிக்க வைக்கும்
அதனால் தானோ என்னவோ
இவள் பெயர் MASHA
-
அருமை தமிழன் அண்ணா
உங்க கவிதை பெற மாஷா அக்கா
என்ன பலன் செய்தாரோ
கவிதைகள் தொடரட்டும் அண்ணா
-
THAMILANNNN!!!! :D
மிக்க நன்றி தமிழன், சூப்பரா இருக்கு உங்க கவிதை.
முறுக்கு சாப்பிட wait பண்ணித்து இருக்கிறேன் haha! ;D
Thank you, can't wait to read more of your poems, especially those u write for me ;)
இப்படிக்கு உங்கள் நண்பி
MASHA