FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on December 10, 2017, 09:15:43 AM

Title: கண்களால் என்னை கவர்ந்தவள்
Post by: thamilan on December 10, 2017, 09:15:43 AM
பெண்ணே
நீ அழகில்லை என்று சொன்னாய்
நானும் நம்பினேன்
உன்  கண்களைக் காணும் வரை
கண்ட பின்னோ
உன்னை விட பேரழகி எவருமில்லை
என்று புரிந்து கொண்டேன்

நான் பார்த்தது உன் கண்களை
மட்டும் தான்
சுனாமி வந்தால் தான் சேதம் வரும்
நீ பார்த்தாலே
பலத்த சேதம் என்
நெஞ்சுக்குள்

ஒரு முறையாவது
உன்னுடன் பேசலாம் என்று
தினமும் நினைத்தேன்
நான் நினைக்கும் ஒவ்வொரு முறையும்
உன் கருவிழி பேசும் பேச்சைக் கண்டு
பேச்சு மறந்து போகிறது

காந்த விழியால்
என்னை கவர்ந்தவளே
உன்னில் எனக்கு ஏதும் வேண்டாம்
உன் கண்களில் மட்டும் இடம் கொடு
உன் கண்வழியே
உன் இதயத்துக்குள்
இறங்கி விடுவேன் நான்

உன்னை படைத்த
இறைவனுக்கு கூட புரியாது
உன் பார்வையின் அர்த்தங்கள்
அதில் இருப்பது
ஏக்கமா , காதலா இல்லை தேடுதலா
தேடிப் பார்க்கிறேன்
இன்னும் புரியவில்லை எனக்கும்

உன் கண்களின் கீழே
அந்த அழகிய மூக்கும்
அதில் தொங்கும் வளையமும்
நான் கிளியாக வரம் கேட்கிறேன்
அந்த மூக்கை கொத்திட  ஆசை எனக்கு
அந்த வளையத்துக்குள் உட்கார்ந்து
ஊஞ்சல் ஆடிடவும் மிக ஆசை

பெண்ணே இதற்கு மேல்
உன் முகத்தை காட்டாதே
உன் செவ்விதழ் பார்த்தால்
சிதறிப் போவேன் நான்
உன் புன்சிரிப்பை பார்த்தால்
உன் பைத்தியம் ஆவேன் நான்

உன் கண்களுக்கே நான்
ஆயுள் கைதியாகி விட்டேன்
என்னை விடுதலை செய்யாதே   
Title: Re: கண்களால் என்னை கவர்ந்தவள்
Post by: MaSha on December 10, 2017, 03:17:35 PM
Thamilaaaaannnnnn!!!  :D
Adadaaaaa adadaaaa, kangalai paarthe ippadi oru azhagana kavithaiya eluthividdeenga..  ;D Ithuvum antha Thenrala?  ;)
Title: Re: கண்களால் என்னை கவர்ந்தவள்
Post by: SweeTie on December 15, 2017, 01:23:06 AM
காந்த விழிகளில் உங்கள் இரும்பு இதயம்  ஈர்க்கப்பட்டது   இயற்கையே.
வாழ்த்துக்கள்