ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 169
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/169.png)
பணம் பணம் பணம் !!
பணம் கொட்டிக் கிடப்பினும்
அதைக் கொண்டு வாங்க இயலாத
விஷயங்கள் தான் இன்னும் எத்தனை !!
பணம் கொண்டு கல்வியை வாங்கலாம்
பொது அறிவை வாங்க இயலுமா ?
பணம் கொண்டு மருந்துகள் வாங்கலாம்
ஆயுளை வாங்க இயலுமா ?
பணம் கொண்டு உண்ண உணவு வாங்கலாம்
பசியைத்தான் வாங்க இயலுமா ?
பணம் கொண்டு மெத்தை வாங்கலாம்
நித்திரையை வாங்க இயலுமா ??
பணம் கொண்டு இல்லம் வாங்கலாம்
நல்ல இல்லறம்தான் வாங்க இயலுமா ?
பணம் கொண்டு உறவுகளை வாங்கலாம்
உண்மையான அன்பை வாங்க இயலுமா ?
பணம் கொண்டு அழகை வாங்கலாம்
இளமையை வாங்க இயலுமா ??
பணம் கொண்டு திறமைகளை விலை வாங்கலாம்
உழைப்பைத்தான் வாங்க இயலுமா ?
பணம் கொண்டு பெயரையும் புகழையும் வாங்கலாம்
அதை பேணி காக்கும் ஒழுக்கத்தை வாங்க இயலுமா ??
பணம் கொண்டு பதவியை வாங்கலாம்
நம்பிக்கையையும் மரியாதையையும் வாங்க இயலுமா ?
பணம் கொண்டு மானம் காக்க ஆடைகள் வாங்கலாம்
பறிபோன மானத்தை மீண்டும் வாங்கத்தான் இயலுமா ?
இவ்வளவு ஏன்.. பணம் கொண்டு கடிகாரம் வாங்கலாம்
நேரத்தை தான் வாங்க இயலுமா ??
வாழ்வதற்கு தான் பணம் தேவையே தவிர
வாழ்வின் தேவையே பணம் அல்ல ..
குணம் இருப்பவனிடம் பணம் இருப்பதில்லை
பணம் இருப்பவனிடம் குணம் இருப்பதில்லை
இருப்பதைக் கொண்டு வாழ கற்றுக் கொள்வோம்
இருப்பதைக் கொடுத்ததும் வாழ கற்றுக் கொள்வோம்
~ தமிழ் பிரியை மைனா~