FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on September 16, 2018, 03:31:25 AM

Title: ★எழுதித் தீரா வலியின் ரா★
Post by: Guest on September 16, 2018, 03:31:25 AM

பேனாவற்றிருக்கும் நிம்மதியில்
தூங்கிட நினையும் பிரயத்தனங்கள்
தோல்வியுறுகையில்
கவிதையாகிறது இருள்

தப்பித்தலின் பொருட்டைத் தேடி
ஓடோடிக் களைப்படைந்ததும்
பகலின் வெளிச்சத்தில்
புலவன் பட்டம்

குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கும்
வாழ்க்கைக்குத் தெரியுமா
மனசாட்சியற்ற இராத்திரியை
எழுதித் தீர்ப்பதின் வலி