அன்னை!
மூன்றெழுத்தில் மூவுலகமும்
போற்றும் கண்முன்
வாழும், நம்மை வாழவைக்கும்
தெய்வம் அவள்!
அன்னையின் அன்பு!
ஈடு இணையற்றது,
எல்லையை கடந்தது,
அமிர்தம் போன்றது,
அவிழ்க முடியாதது,
ஜாதி,மதம்,இனத்தால்
பிரிவினை காணும் இவ்வுலகில்,
தனக்காக என்று சுயநலத்தோடு
சுற்றி வரும் இவ்வுலகில்,
பிரிவினை,சுயநலம்
இல்லாமல் கிடைப்பது அன்பு ஒன்றே
அன்னையின் அன்பு ஒன்றே!
அன்பிற்கே அன்னையாக
திகழ்ந்த அன்னை தெரேசா ,
இவ்வுலகிற்கும் அன்னையாக
திகழ்ந்தாள், கரு உண்டானதால?
இல்லையே கருணை உண்டானதால்,
என்ன பந்தமோ ,என்ன பாசமோ,
நான்கு கால்,இரண்டு கால்,
சிறிதும் ஒற்றுமை இல்லை,
ஆனாலும்,அடைகாக்கிறது
அன்னையாக,முட்டையிடாமல் !
வேற்றுமை காணும் மனிதர்களின்
செவிலிலே அறைகிறது இக்கோழி!
இக்கோழியும் ஒரு தெரேசாதான்!
ஏய் மனிதர்களே!
கடவுள் அனைவருக்கும் சமமாய்
கொடுத்தது அன்பு ஒன்றே
அன்பை அனைவருக்கும் அளித்து
வாழுங்கள் இல்லையேல்
இறந்து போங்களடா!!!