« on: December 17, 2017, 03:37:00 AM »
இரு உள்ளம் இனைந்து காதல் ஆனதே
நாம் இருவர் இணைந்ததால் ஒரு உயிர் பிறந்ததோ.
உன்னை தினம் நினைத்து
மனம் ஏங்குகிறேன்.
உன் கால் ஓசை கேட்க என் காது திறக்க
உன் முச்சி காற்று கேற்று என் அகம் திறந்தேன்.
உன்னை எதுர்த்து பேசும் வல்லமை எனக்கில்லை
அதனால் தான் உன் கண்பார்க்க அஞ்சுகிறேன்.
உன் கரம் பிடித்தால் என் கன்னம் வழிக்குமோ எனும் அச்சத்தில்
சற்று விலகியே நிற்கிறேன் விண்மீன் போல.
என்னையாரும் திட்டி விட்டால் உன் மனம் தாங்காது
என் மடியில் சாய்ந்து நீ அழுவாய்.
நீ என் மடி சாய்வதேன்றால் உனக்காக
பல முறை திட்டு வாங்க தயாராகிறேன்.
உன் இதய கூட்டில் என்னை இணைத்ததும்
என்னை நானே மறந்து விட்டேன்.
புதிதாய் பூக்கும் பூவிற்கு தேனீ தேடிவருது போல்
எனக்கானவள் என்னை தேடி வருவால் என நம்புகிறேன் .....
« Last Edit: December 17, 2017, 04:36:41 AM by JeGaTisH »
Logged