அடியவனுக்கு
சகோரர்கள் இருவர் இருக்க
சகோதரி இல்லை என்ற ஏக்கம் இருந்ததுண்டு
அவளிடம் செல்ல சண்டையிட்டு
பொய் கோபம் காமிக்க ஏங்கியதுண்டு
சின்ன சின்ன சீண்டலுக்கு அவளின்
கோபத்தை காண ஏங்கியதுண்டு
அவளோடு ஆடி பாடி
பொழுதை கழிக்க ஏங்கியதுண்டு
அதட்டலுக்கு அழும் அவளை தேற்றி
அரவணைக்க ஏங்கியதுண்டு
புயலுக்கு பின் அமைதி போல்
சண்டைக்கு பின் வரும்
சமாதானத்திற்கு ஏங்கியதுண்டு
இத்துணை ஏக்கங்களுக்கும்
விடை காண
வலைத்தளத்தில் வலையிட்டு
தேடும்போது
முகமறியா முகநூலின் உதவியாலும்
நல்ல தமிழ் அரட்டையாம்
நண்பர்கள் அரட்டையின் உதவியாலும்
என் ஏக்கம் கலைந்தது
இபோழுதோ அரட்டையின்
அத்துணை சகோதரிகளின்
அன்பு மழையில் நான்.........!!