மேகத்தை இழந்த
வானத்தை பார்க்கமுடியாது...
உப்பை இழந்த
கடலை பார்க்கமுடியாது...
தென்றலை
விரும்பாத பூக்களை
பார்க்கமுடியாது ...
நிலவை ரசிக்காத
காதலர்கள் கிடையாது
காதலை விரும்பாத
இளைஞர்கள் இல்லை
காதலை விரும்பாத மனிதனே இல்லை
அலைகள் இல்லாத
கடல் இல்லை கடலே
இல்லாத உலகம் இல்லை
காற்று இல்லாத
பூமி இல்லை
காற்றை துறந்தவன்
மனிதனே இல்லை
நம்பிக்கை இல்லாதவன்
வாழ்கையில் யாரும்
இல்லை
நண்பன் இல்லாதவன்
வாழ்வதே இல்லை!