என் தமிழையும் ரசிக்க ஆட்கள் இருக்கின்றனரே என
தன்னிறைவு அடைய தயாராகி இருந்த தருணத்தில்
தன் மதி முகத்தின் பிரதி (நிழற்படம் )அதனை
என் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து
தன் முகத்தை பற்றி, என் வரிகளில், வர்ணனை வேண்டி
தன்னுள் தோன்றிய ஆசையாய் அதனுள்
என்னனவோ எழுதி ஒரு முழு படிவமாய்
விண்ணப்ப படிவமாய் அனுப்பியவரை ரதியோ என்று தான்
எண்ண தோன்றியது , கண்கள் குளிர
அக்குளிர் நிறைந்த
நன் முகத்தை நான் பார்த்த பொழுது
ஒன்றும் இல்லா என் பதிப்பை தான்,
பளபளக்கும்தன் பாராட்டால் பலபடுத்தி ,
பெருமை சேர்ப்பாள்என்றிருந்தேன்,
இப்படி ஒரு வாய்பளித்து
என் மதிப்பையும் மன்றத்தில் பலப்டுத்தினாள்
என் மதிப்பிற்கும்
மரியாதைக்கும் உரியவள் .
வர்ணனை வெகு விரைவில் .....