அனேகமாய்,
தமிழகத்தை கொஞ்சம் காலமாய்
தன் வஞ்சகத்தால் வஞ்சிக்கும் .
மின்சாரத்தின் பெரும் பற்றாக்குறை
வெகு விரைவில் குறை தீர்க்க பட்டுவிடும் !
சில நாட்களாக தட்டுப்பாட்டில் இருக்கும்
மின்சாரம் நேற்று தன் கட்டுபாட்டை கடந்து
அவளை தொட்டு பார்க்க துணிந்திருக்கிறது .
தொட்ட சில நொடிகளிலே விட்டுவிட்டு
தெறித்திருக்கிறது ,ஆம் . அதே தான்
மின்சாரத்திர்க்கே மின்சாரம் தாக்கப்பட்டது !
தன்னை தாக்கிய பெண்ணை காட்டிட
தன் பரிவாரம் மொத்தத்திற்கும் துரிதமாய்
மின்- தந்தியில் தகவல் தந்ததாய், தகவல் .
ஆகவே ,
மின்சாரத்தின் பெரும் பற்றாக்குறை
வெகு விரைவில் குறைதீர்க்க பட்டுவிடும் !