Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 338  (Read 747 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 338

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Lakshya

நேசிப்பவர்கள் எல்லாம் கூடவே இருந்துவிட்டால் இசையின் அர்த்தம் தெரிவதில்லை....விட்டு விலகிசென்ற பின் அதன் வலிகள் புரிகிறது ஏனோ...

மனிதர்களால் தரமுடியாத ஆறுதலை கூட இசை தருகிறது மருந்தாக...
செவிகளின் வழியாக புண்பட்ட மனதிற்கு தரும் மருந்து இசை... மகிழ்ச்சியாக இருக்கும்போது பாடல்களை  ரசிக்கிறேன்...வருத்தத்தில் மட்டுமே அதன் வரிகள் புரிகின்றது...


மகிழ்ச்சி, சோகம், கோபம்,வலி அனைத்திற்கும் தீர்வு இசை மட்டுமே !!இசைக்கு நினைவுகளை தூண்டும் சக்தி உண்டு சமயங்களில் வலியும் சேர்த்து...

இசையே நமது வாழ்க்கை...சில நேரங்களில் அதில் வரும் வரிகளே நமது வாழ்க்கை கதை...போதை மருந்தாக கருதப்படுகிறது ஏனெனில் மறப்பது எளிதல்ல...!!!

தனிமையை நாமே எடுத்து கொண்டால் இனிக்கும், மற்றவர்கள் அதை கொடுத்தால் வலி பெரிது... இசை இரண்டிலும் நம்முடன் பயணிக்கிறது..எதற்கு???

இசையை போதையாக கருதுவதற்கு காரணம், வரிகளின் வலி, குரளின் இனிமை, இசை கருவிகளின் தனித்துவம் என அனைத்தும் உள்ளடங்கிய காவியம் இசை...

என் தனிமையில் துணையாக இருந்தது இன்னிசை மட்டுமே...மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்கள் அனைத்திற்கும் பின்னே நீ இருப்பதை அறிவாயாக...

« Last Edit: March 06, 2024, 11:15:48 AM by Lakshya »

Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 131
  • Total likes: 804
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
கிறங்க வைக்கும் போதையாய் இருப்பதும் இசையே..
உற்சாகமூட்டும் ஊக்கமாய் இருப்பதும் சங்கீதமே..
பிணி தீர்க்கும் மருந்தாய் இருப்பதும் நாதமே..
அரவணைக்கும் பந்தமாய்
இருப்பதும் கீர்த்தனையே..

தாலாட்டில் ஆரம்பித்து ஒப்பாரி வரை தொடரும் இது..
தனியே சிரிப்பதற்கும் தனியே அழுவதற்கும் தலைசாய்க்கும் தலையணையாய் இருப்பதும் இதுவே...

பிறப்பு முதல் இறப்பு வரை
தொடர்ந்திடும் பேரொளியும் இதுவே..
பழமையாய் இருந்தாலும் நித்தம் புதுமை செய்வதும் இதுவே..

அன்னையின் தாலாட்டில் ஆரம்பிக்கும் இசை,
பிண்டமாய் நம்மை கரைக்கும் வரை தொடர்ந்து வருவது
மானுடத்தின் வரம்..

நாடு கடந்து, மொழி கடந்து ரசிக்க வைக்கும் இசை, நமக்குள் கரைந்து போகவும், அதற்குள் நாம் கரைந்து போகவும் செய்வது மானுடத்தின் அட்சய பாத்திரம்..

அன்னை சொல்லாத மொழியைக் கற்றுத் தரும் இன்னிசை..
நண்பன் தராத, ஆறுதலைப் பரிமாறுவது ஏழிசை ..

கணவன், மனைவி தராத மயக்கத்தை மல்குவது மெல்லிசை..
உறவுகளில் மட்டுமல்ல இயற்கையிலும் படர்ந்திருக்கும் பண்ணிசை..
நினைப்பதற்கு மட்டுமல்ல மறப்பதற்கும் யாழிசை..

ஆழி சூழ் உலகினைப் போல
இசை சூழ் உலகாய் என்றும் நம்மை விருந்தாய், மருந்தாய் இருந்து உயிர்ப்பூட்டுவது ராகமும் தாளமும் தானே...
« Last Edit: March 04, 2024, 01:34:51 PM by Sun FloweR »

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 980
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
நானும் அவனும் இருந்த நாளில்
இசையின் இனிமை அறிந்தேன்
அவன்  இல்லாமல் நான் வாழும் நாளில் -தான்
இசையில் துணை அறிந்தேன்

இசை என்பது வெறுமனே
இனிமை மட்டும் அல்ல 
தனிமையில் நண்பன்
வெறுமையில் தோழன்

சிரிப்பில் சகோதரன்
அழுகையில் அன்பன்
எத்தனையோ ஏமாற்றத்தின்
மத்தியில் ஆறுதல்
 
இப்படி எப்பொழுதும்
இசை என் உடன் இருப்பு
யார் என்னை விட்டு நீங்கினாலும்
நீங்காமல் காக்கும் காவல்

பலர் சொல்லி அறிந்தேன்
இசை என்பது தோழன் என்று
நான் உணர்ந்தது இசை
என்பது போதை  என்று

அவன் இருந்த போது
என் போதை அவன்
அவன் இல்லாத போது
என் போதை இசை தான்
« Last Edit: March 07, 2024, 05:19:16 PM by NiYa »

Offline VenMaThI

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 190
  • Total likes: 823
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum



கருவறை முதல் கல்லறை வரை
எங்கும் இசை எதிலும் இசை..
புரியாத மொழியாயினும்..மனதில்
பதிய வைப்பது இந்த இசை...

சந்தத்தில் உள்ள ஏற்றமும் இறக்கமும்
கேட்கும் மனதில் உண்டாக்குமே சாந்தம்...
ஏற்றம் இறக்கம் நிறைந்ததே வாழ்க்கை..என்பதை
சொல்லாமல் சொல்லுதோ இவ்விசை....

என்றோ நடந்த நிகழ்வுகள் கூட
காலப்போக்கில் அழிந்து விடுகையில் ..
என்றோ எங்கோ கேட்ட பாடலை மட்டும்.. ஆழ்மனதில் அழியாமல் பதித்தது இந்த இசை....

காலத்தால் அழிக்க முடியாமல்
எந்த மருந்தாலும் நீக்க முடியாமல்
ரணமாய்ப்போன மனதை அரவணைக்கும் மருந்தாய்...
என்றுமே இருப்பதும் இந்த இசையே...

இசையானது....

காதலில் விழுந்தோரை
கற்பனையில் மிதக்கவிடும்
காணாமல் போனவரை
நம் கருத்தினில் நிறைத்துவிடும்...

கடும் பாறையாய் உள்ள இதயத்தையும்
கனப்பொழுதில் கரைத்துவிடும்..
தொலைவில் உள்ள தலைவனவன்
தொடுதலையும் உணர வைக்கும்...

கூட்டத்தில் குத்தாட்டம் போட வைக்கும்
தனிமையிலோ இனிமை காண வைக்கும்
தன்னையே மறந்து மயங்கும் நிலை கூட
இந்த இசையால் மட்டுமே சாத்தியம் ஆகும்...

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
முகமும் முகவரியும் அறியா நாமும் கூட ...இன்று
நண்பர்களாய் இங்கு இருப்பது
ஒரு வகையில் இந்த இசையால் தானே??

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️



« Last Edit: March 06, 2024, 03:08:57 PM by VenMaThI »

Offline Vethanisha

  • Full Member
  • *
  • Posts: 123
  • Total likes: 218
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
இருள் அகன்று
ஆதவன் உயிர்த்தெழ
புது விடியலுக்காக
காத்திருக்கும்

நாணலும் மலர்களும்
புன்னகைத்ததுவே
பச்சைக் கதிர்களும்
செவ்வந்திப் பூக்களும்
தலையசைத்ததுவே

ஏனோ நான் மட்டுíம்
நடைபிணமாய் இங்கு
படுக்கையோர சன்னலோடு நின்றிருக்க
விழிகளின் ஊடே நீர்க்கசிய
தூரத்தில் கேட்டது
ஆம் அது அந்த..

"காக்கைச்  சிறகினிலே நந்தலாலா-நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;
பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா -நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;"

எம் பாரதியின் கீதம்
கான கீதம்

வறண்ட என்
இதழ்கள் சட்டென்று மலர
கைரோமங்களும் உயிர்தெழ
உள்ளமும் கசிய

இந்த சுகம் போதாதா
என் வலி தீர
எம்  தமிழிசை போதாதா
என் மனம் குளிர

கசிந்த மனம் ஞாபகங்களில் நடைபோட
இசையால்   நான் பெற்ற வைத்தியங்கள்
சிலவற்றை விருப்பமாய்  பகிர

 இங்கனவே
 
குழந்தை பருவத்தில் யென்
வேதனைகளின் தீர்வு
"கற்பூர பொம்மை ஒன்று "
என்ற என் அன்னையின்  தாலாட்டு ❤️

என் முகம் வாடும் போது
அன்பாய் சீண்டியது
 "தென்றல் வந்து தீண்டும் போது "
என மெல்லிசையாய் ஒலித்த
 என் தந்தையின் பாட்டு❤️

துவண்டு போகும் போது
"இதுவும் கடந்து போகும்"

தனிமையின் மடியில் சாயும் போது
"இனிய தனிமையே "

காதலின்  கைப்பிடியில் சிணுங்கும் போது
"இது ஒரு கனவு நிலை"

உறவுகளோடு இணையும் போது
"இது அன்பு வாழும் கூடு  "

என்றும்

என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும்
இசையே
என் பசி தீர்க்கும் விருந்து
என் பிணி தீர்க்கும் மருந்து

அவன் இன்றி - ஓர்
அணுவும் அசையாது என்பர்
இசை இன்றி- அவன்
அணுவும் அசையாது என்பேன் யான்

கவிஞன் எழுதியது போல
இந்த ஜென்மம்
இசையால்
இசையோடு
இசையினுள்
இசையாகவே

❤️

VethaNisha.M
« Last Edit: March 07, 2024, 12:17:04 PM by Vethanisha »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 376
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
இசையென்னும் மாபெரும் கொடையை தந்த இயற்கை இறைவனுக்கு இணையானவன்!!!

காற்றிலே  மிதந்து செவிகளிலே தவழ்ந்து, மனதிலே படர்ந்து  நவரசங்களை வெளிக்கொணர முடிகிறதே  , இசையின் மாயம்..

மௌனங்கள் கூட உறைந்து போகும் கவலைகள்  கூட கரைந்து போகும் இசையை விரும்பாதவர்களைக்கூட விரும்ப வைக்கும்,

மொழிகள் அறியாதவர்களை கூட அதன் இசையை நம்மால் உணரமுடிகிறதே,! ஆச்சிரியம்!!!

நம்மை இயங்க வைக்கும் இசைக்கு இதயத்தை கொடுத்தோம் திரும்பும் திசையெங்கும் இசைமொழி பாடலால் நம்மை இறுக்கி வைத்திருக்கும்  ! !! 

மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் இசையை விரும்புகின்றோம்,
துயரத்தில் தான் பாடல் வரிகளை வர்ணனை செய்கின்றோம் ,மன பாரத்தின் மருந்து இசையே தான்!!!!

இரவில் உன் மடியில் இளைப்பாற
பல வகை உணர்ச்சிகளை பாடலாய் பருக, காயம் பட்ட மனமும் இசைக்கேட்டு உறங்கும்,
தாலாட்டு பாடுவதில் தாய்க்கு பின் நீ தானே!!!!

« Last Edit: March 06, 2024, 10:11:26 PM by mandakasayam »

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 849
  • Total likes: 2410
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself

மீள்

தொலைவதும்
மீண்டும் மீள்வதும்
சுலபமாக செய்திடும்
ஒரு சிறிய இசை

செவிவழியே
மனவலியை தீர்க்கும்
உருவம் இல்லா மருந்து
இசை

நேர்த்திக்கடன் எதிர்பாராமல்
பூஜைகள் எதுவும் செய்யாமல்
ஒவ்வொரு பக்தனுக்கும்
வரம் தரும் இறைவன்
இசை

நம்மை அறியாமல்
சிலரின் மீட்டெடுக்க
முடியாத நினைவில்
மூழ்கியபின் விழிவழி வரும்
கண்ணீரை துடைக்கும் கை
இசை

எனக்கு அவளும்
ஒரு இசை தான்

பேச்சுத்துணை போல்
அவள்
என் பாட்டு துணை

நான்
நிகழ்த்தும் உரையாடல்களில்
அவள் செருமலே
என் பின்னணி இசை

அவள்
குறுஞ்செய்திகளில்
பாடல் வரிகள் வந்து வந்து போகும்

அவள்
இல்லாதபோதும் அவள் பாடல்கள்
என்னோடு கதைகதையாய் பேசும்
அவள் வழக்கு மொழியில்
அவள் தமிழில்
அவள் குரலில்

எனக்கு
அவளே இசை
அவளே மருந்து


இசை கட்டாயம்
நமக்கு மருந்துதான்
இடையில் வரும் வரிகள்தான்
நம்மை நோகடித்து விடுகிறது


« Last Edit: March 07, 2024, 11:59:45 AM by சாக்ரடீஸ் »

Offline Vijis

இசையின் பிறப்பிடம் எங்கே என தெரியவில்லை இசையை கேட்க எந்த உயிரிகளும் மறுப்பதில்லை

 பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் இசையுடனே பயணம் செய்கிறான்

 இதய துடிப்பின் பரிமாற்றம் மனிதரின் சந்தோசம் வேதனையின் கண்ணீரும் இசையே

என் தனிமையின் துணையாகவும் நம்பிக்கை தோழனும் அவனே

 என் வாழ்வில் நகர்ந்திடும் ஒவ்வொரு நிமிடமும் புதுமையாகவே உணர்தேன்

 பாறை போல் இருந்த என் மனம் ஈரம் கசிந்து போனதே காற்றில் கலந்து உயிரினில் நுழைந்து மனதில் கலப்பதே இசை

என் வாழ்வின் இன்பம் துன்பம் அனைத்தையும் இசையில் உணர்தேன்

கடவுள் படைப்பின் இயற்கை எங்கும் இசையாகவே உள்ளது பறவைகளின் ஓசையிலும் விலங்குகளின் சத்தத்திலும் இசையே நிரம்பி இருக்கின்றது


 எங்கும் இயற்கயிலே இருக்கும் இசை எப்போதும் பாடிக்கொண்டு இருக்கிறது

 மனிதன் தனது அழுகை என்னும் முதல் பாடலில் வாழ்க்கையை ஆரம்பித்து தாலாட்டு என்னும் மெல்லிசையில் உறங்கி  இசையில் வளர்ந்து ஒப்பாரி வரை வாழ்நாள் முழுவதும் இசையில் வாழ்கிறான்

 இசையில் அசையும் உலகம் மனிதனின் மனநோயை போக்கும் மருந்து

 இசை இன்றி எதுவும் இல்லை இசையே மனிதனின் மருந்து

Offline vaseegaran

யார் இந்த இசை சில நேரங்களில்  மறக்க நினைக்கும்  நினைவை கொண்டுவந்து இம்சிக்கிறான்
பல  நேரங்களில் துவண்டு கிடைக்கும் பொது உற்சாகம் கொடுக்கிறான்
அநேக நேரங்களில் மயங்க செய்து உருக செய்து நாம் அறியாத நம்மையே நமக்கு வெளிச்சம் போடு காட்டுகின்றான்

இந்த கொடூர உலகில் மனிதனின் ஆகச்சிறந்த நண்பன் இசை மட்டுமே என்பேன்
யாரையும் எவரையும் சார்ந்து  வாழாமல் உங்களுக்கு நீங்களே சந்தோசத்தை அள்ளி அள்ளி
கொடுக்க இசையால் மட்டுமே முடியும்

நட்புக்கு எப்படி மொழி இன மத வேறுபாடு இல்லையோ அதேபோல் தான்  இசையும்
எந்த இசையையும் வேறுபாடுன்றி ரசிப்பவன் வாழும்போதே சொர்க்கத்தில் வாழ்பவன்

பல நேரங்களில் சந்தோஷமான பாடல் கேட்கும் பொது அழுகையும்
சோகமான பாடல்கள் கேட்கும்போது வெடிச்சிரிப்பும் வரும்வேளையில்
ஆழ்மனதில் தேங்கியிருக்கும்  துயரை கரைக்கின்றது இன்னிசை

இசை என்னும் மாமருந்து எண்ணிலா அதிசயத்தை இம்மனிதகுலத்திற்கு தந்திருக்கிறது

தீராதநோயின்  வேதனையில் துடிக்கும் ஒரு குழந்தையை கொஞ்சநேரமெனும்
மனம் மகிழவைக்கும் இந்த இசை ஒரு கடவுள் போல் தெரிகிறான்

இசையை பற்றி கவிதை கேட்கிறார்கள் நண்பர்கள்
மழையில் நனைவது  சுகமா !
மழையை பற்றி எழுதுவது சுகமா ?