நிழல் படம் எண் : 040
இந்த களத்தின்
இந்த நிழல் படம் Dong Leeஅவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/040.jpg)
என் குழந்தையும் நானும்!
என் குட்டி மகள் சிரிக்க வைக்க
நான் செய்ததையெல்லாம்
எந்த ஒரு தந்தையும்
செய்திர்க்கமாட்டன் ....
அவளின் சிரிப்பை பார்த்து
என் மனைவி சிரிப்பாள்-ஆனால்
என்னை பார்த்து நீ கொடுக்கும்
செல்லம் நாளை உன்னை வதைக்கும்- என்று
என்னை கண்டிப்பால் என்னவள் கண்டிப்பை
புரியாத பிஞ்சு மகள் திக்கி தவிப்பால் ...
என்னவள் வீட்டு வேலைகளை
முடித்து வருவதற்குள் நித்திரை
அவளை கை தட்டி அழைக்க
என்னவள் அவளை துங்க வைக்க
பாடும் தாலாட்டை நானும்
அரைகுறையாய் அறிந்ததை கொண்டு ....
குட்டி மகள் தூங்க நான் பாடும்
தாலாட்டில் எந்த ராகமும் இல்லை
என்னவள் அம்மா என்பதை தவிர
அவள் பிஞ்சு விரல்கள் பதித்து
என்னை கட்டிப் பிடித்துத் தூங்க....
நானும் அவள் பிஞ்சு
கையை எடுத்துவிட்டால்
எழுந்துவிடுவாலோ -என்று
எடுக்கவுமில்லை அவள்
அயர்ந்து துங்கும் வரை ...
என்னவள் என்னை பார்த்து சிரிப்பாள்
தினமும் நித்திரை துளைபேன்
இன்று ஒரு நாலாவது மாமா நீங்க
விளித்து இருந்து பார்த்து கொள்ளுங்க
என்று குறும்புதனமாய் சொல்லிவிட்டு
என்னவள் நித்திரைக்கு செல்ல ...
அமர்ந்த வாரே நானும் தூங்க
விடிகிறது காலை பொழுது
எனக்கு முன் என் மகள்
பசியால் அழுக கண்விளிப்போம்
இருவரும் மகளை என்னவளிடம்
பசி தீர்க்க கொடுத்து விட்டு...
அலுவலகம் செல்ல என்னை
தயார் செய்து கொண்டு
காலை சாப்பாட்டிற்கு நான் அமர
என் அருகில் துள்ளி குதித்து
ஓடி வருவாள் அப்பா என்ற
புன்னகையுடன் .....
என் மடியில் அமர வைத்து
என் பசியை திர்த்து கொண்டு
அவளின் கன்னத்தில் முத்தம்
மிட்டு ஆசை பதில்கு என்மகள்
எனக்கு முத்தம் தந்து டாட்டா
கட்டி வளி அனுபிவைபால் ....
மாலை வீடு திரும்பியதும்
வீடு அழைப்பு மணி ஒலித்ததும்
ஓடி வந்து கதவு திறந்து
என் காலை கட்டி நிற்பாள்
அப்பா வந்தாச்சு என்னை
வெளியே அழைத்து செல்ல .....
நானும் உடைகளை மாற்றி
என்வளிடம் மகள்கு உடை
மாத்த சொல்லி இருவரும்
அருகில் இருக்கும் பூந் தோட்டத்திற்கு
என் கை விரலை பிடித்து
அழைத்து செல்ல அங்கு
உள்ள பூக்களையும் ....
பூவில் உள்ள பட்டாம் பூசிகளையும்
கண்டு ரசித்து அவளக்கு பிடித்த
பூவை பறித்து தர சொல்லி
அவள் வைத்து இருக்கும் கூடையை
நிரபியதும் என்னை அழைப்பால் ...
அப்பா அப்பா வாங்க பூவை
சாமிக்கு வைக்கணும் வீட்டுக்கு
போனதும் சாமி அறையில்
அதை வைத்து அழகான பிஞ்சு
விரல்களை கைகூப்பி கும்பிட்டும்
அழகே தனி கும்பிட்டதும்
விபுதி எடுத்து வந்து எனக்கும்
என்னவள்கும் நெட்ரில் வைத்து
சந்தோசமாய் சிரித்து மகிழ்வாள்
என் அன்பு மகள் எங்களை
காக்க பிறந்த கருத்தன மகள்