நான் இந்தத் தளத்திற்குப் புதியவன். தமிழும் வாசிப்பும் என் பிரியமான விடயங்கள். கவிதை, நீச்சல், சைக்கிளோட்டம் என் பொழுதுபோக்கு அம்சங்கள். உலக நடப்புகளை அவதானித்து அடுத்தவருடன் பகிர்ந்து கொள்வதில் அலாதி விருப்பம். தினம் தினம் வாழ்க்கையின் மாற்றங்களை தேடி அலையும் வித்தியாசமான குணம் எனக்கு. அடுத்தவர் மனதை புண்படுத்தாமல், நம்மையும் காயப்படுத்திக் கொள்ளாமல் வாழ்வதே என் ஆசை. இந்த உலகில் பிறந்த நாம் எந்தத் துன்பத்திலும் துவண்டுவிடாமல் சவால்களை ஜெயிக்க வேண்டும் என்ற உறுதி தான் என் வாழ்வின் தாரக மந்திரம்.
தன்னம்பிக்கை உள்ளவன் வாழ்வில்
தோல்விகள் இல்லை.
என்றும் அன்புடன் உங்கள் நட்பை நாடி வந்திருக்கும்
தமிழ்நெஞ்சன் எனும் அஷ்