ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 223
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/0Latest/OU/223.jpg)
பரந்து விரிந்த கடல்பரப்பை
பகட்டாய் சுமக்கும் மணல்பரப்பில்
பந்து ஒன்றை மட்டை கொண்டு
பாங்கோடு அடித்து மகிழ்கின்றாரே
சுட்டெரிக்கும் சூரியனும.
சுகமாய் வீசும் இளம் காற்றும்
எல்லாம் எமக்கொன்றே என்று
தம்மில் ஏந்தி பொழுதை கழிக்கின்றாரே
காலை மாலை பேதமில்லை
கடிவாளங்கள் ஏதுமில்லை
இளவம் பஞ்சாய் மணலும் இருக்க
இன்பம் சேர்த்தே இருக்கின்றாரே
குயிலின் கூவல் செவி விழவில்லை
மயிலின் நடனம் மனம் தொடவில்லை
மகிழ்ச்சி என்றும் மனதை பொறுத்தே
என்றே சிறாரும் கற்பிக்கின்றாரோ??
நட்புடன் உங்கள் பீன்....
[/b][/color][/size]