இவ்வுலகில் ஈடு இணையற்ற அழகு என்று இருப்பின். அது இயற்கையின் அழகே...
நட்சத்திரத்தினால் நெய்யப்பட்ட நீல நிற கம்பளத்தில், மிளிரும் அழகுடன், நாணத்துடன் அமர்ந்திருக்கும் மின்னும் அழகு சிலை ஒன்று .
அவளே! வழித்துணையாய் தொடரும் வழிபோக்கனின் ஸ்நேகிதி அவள் "நிலா".
பூமி தாயின் மடிதனில் மக்களாய் பிறந்து மானுடம் காக்க ஜீவகம் கொண்டது ஒன்று
அதுவே "மரம்" எனும் மாணிக்கமானது அது..
கருமேகம் சூழ, பெரும் மழை தூவ, கதிரவனை கண்டு வளைந்து ஆடும்,வண்ண மயில் எதுவோ?
காண்போரின் காதலான "வானவில்"ஆனது அது.
தத்தி தாவும் தாரகை எவளோ, தண்ணீர் தடத்தின் தமையந்தி அவள் "நீரோடை"..
வர்ணனை செய்ய வார்த்தைகள் போதவில்லை, "இயற்கை" அதன் அழகு தனை வர்ணிக்க...
இன்னிசையும் இசைந்தாடும், கருங்குயிலின் குரல் கேட்டு.
வான் மழையும் வர்ணனை செய்யும், வளந்து நிற்கும் மலைகள் அதன் வளைவு நெளிவை கண்டு.
காண்போர் அனைவரும் காதல் கொள்வர், கார்முகிலின் அழகை கண்டு...
நீல வானும் நேசம் கொள்ளும், நீல கடலின் நடனம் கண்டு.
பூங்காற்றும் புன்னகைக்கும், பூத்து குலுங்கும் பூக்களை கண்டு.
இத்தனை அழகையும் இணைத்தது, இயற்கை எனும் ஒன்று.
இயற்க்கை அனைத்தும் அன்பு கொள்ளும்,
"AARONN" எந்தன் உள்ளம் கண்டு.. 😉...
இன்றி அமையா இயற்கையை, எம்மோடு இணைத்த இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே சொந்தம்.....
(குறிப்பு : புதிய உறவுகளின் பதிவுகள் இருப்பின். எனது பதிவை விட்டு அவர்களது
பதிவை வாசிக்குமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்.)