முதன் முதலில்
உன்னை
கண்டேன்
உன்
நிழலுக்கும்
குடை பிடிக்கும்
பேதை என
நான் மாற
கண்டேன்
வார்த்தைகள்
உச்சரிக்கும்
உன் இதழ்கள்
கண்டேன்
போதை ஏறிய
குரங்காய்
என் மனம் மாறிட
கண்டேன்
காகிதம் கூட
உன்னிடம் பேசும்
ஆயுதமாக
கண்டேன்
படிக்க படிக்க
வெட்கம் கூட
என் துணை நிற்க
கண்டேன்
நம்மில்
வார்த்தைகள்
வற்றிட கண்டேன்
கண்ணில்
ஈரம் நிறைந்திட
கண்டேன்
உன் மௌனத்தின்
நெருக்கம்
கண்டேன்
அது
நம் பிரிவின்
தொடக்கமாய்
கண்டேன்
****ஜோக்கர் ****