தமிழ் | ||
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்; பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும். | 1 | |
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை; உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை; ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்! | 2 | |
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்; மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலமையெனில் வெளிநாட்டோர்; அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். | 3 | |
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்; வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்; தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார். | 4 |
தமிழ்மொழி வாழ்த்து தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே | ||
1. | வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே! | |
2. | வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே! | |
3. | ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசைகொண்டு வாழியவே! | |
4. | எங்கள் தமிழ்மொரி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே! | |
5. | சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே! | |
6. | தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நாடே! | |
7. | வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழியே! | |
8. | வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே! |