என் பஞ்சு கைகளால் இந்த தண்டனை
எதற்கிந்த தண்டனை தெரியுமா??
உன் கருவறையில் உன்னை உதைத்தபோது
வெறுக்காமல் விரும்பினாயல்லவா அதற்கு,
நீ உண்ட உணவை உன் தொப்புள்கொடி மூலம்
நான் களவாடியதை கண்டு மகிழ்ந்தாயல்லவா அதற்கு,
300 நாட்கள் என்னை இருட்டறையில் வைத்து
என்னை சுமந்தாயல்லவா அதற்கு,
எனக்கு இவ்வுலகம் காட்ட நீ உயிர் போகும்
வழியை அனுபவிதாயல்லவா அதற்கு,
இவ்வுலகில் நான் உண்ண உணவில்லை என
உன் உதிரத்தை உணவாகினயல்லவா அதற்கு,
உன்னை உறங்க விடாமல் நான் அழுதபோதும்
என்னை அடிக்காமல் தூக்கி உட்சிமுகர்ந்தாயல்லவா அதற்கு,
என் அர்த்தமற்ற மொழிக்கும்
புது புது அர்த்தம் கொடுத்தமைக்கு,
நான் செய்யும் அனைத்தையும்
ரசிக்கிரயல்லவா அதற்கு
நான் செய்யும் தவறை
மன்னித்து ரசிக்கிரயல்லவா அதற்காகத்தான்
இத்தனை தவறை செய்த உன்னை
என் பஞ்சு கைகளால் தண்டிப்பது சரிதானே !!!