FTC Forum

தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: regime on November 21, 2018, 07:51:00 PM

Title: Achcham Yenbadhu Madamaiyada
Post by: regime on November 21, 2018, 07:51:00 PM
தள்ளிப் போகாதே

http://youtu.be/PiL5UTTTrxk (http://youtu.be/PiL5UTTTrxk)
ஏனோ வானிலை மாறுதே
மணித்துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே

கண்ணெல்லாம்..
நீயேதான்..
நிற்கின்றாய்..
விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்..
இமை மூடிடு என்றேன்..

நகரும்
நொடிகள்
கசையடிப் போலே
முதுகின் மேலே
விழுவதினாலே
வரி வரிக் கவிதை..
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள்
எனது.. !!

கடல் போல பெரிதாக நீ நின்றாய்..
சிறுவன் நான்
சிறு அலை மட்டும் தான்
பார்க்கிறேன்.. பார்க்கிறேன்..
எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று
நான் வந்து நீராடும் நீரூற்று

ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே..
ஓ.. நான் மட்டும் தூங்காமல்
ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே..

கலாபம்
போலாடும்
கனவில் வாழ்கின்றனே..
கை நீட்டி
உன்னைத்
தீண்டவே பார்த்தேன்..
ஏன் அதில் தோற்றேன்.?
ஏன் முதல் முத்தம்
தர தாமதம் ஆகுது.?
தாமரை வேகுது..!

ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..
ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..

தள்ளிப் போகாதே..
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே..
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே
(தள்ளிப் போகாதே..
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே..
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே )

தேகம் தடை இல்லை
என நானும்
ஒரு வார்த்தை சொல்கின்றேன்..
ஆனால் அது பொய் தான்
என நீயும்
அறிவாய் என்கின்றேன்..
அருகினில் வா..

ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ...
ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ...

கனவிலே தெரிந்தாய்..
விழித்ததும் ஒளிந்தாய்..
கனவினில் தினம் தினம்
மழைத்துளியாய்ப் பொழிந்தாய்..

கண்களில் ஏக்கம்..
காதலின் மயக்கம்..
ஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்..

நொடி நொடியாய் நேரம் குறைய..
என் காதல் ஆயுள் கறைய..
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட..

விதியின் சதி விளையாடுதே..
எனை விட்டுப் பிரியாதன்பே..
எனை விட்டுப் பிரியாதன்பே..

ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
அன்பே..

அவளும் நானும்

அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அலையும் கடலும்..
அவளும் நானும்.. தவமும் அருளும்..
அவளும் நானும்.. வேரும் மரமும்..

ஆலும் நிழலும்.. அசைவும் நடிப்பும்..
அணியும் பணிவும்.. அவளும் நானும்..
அவையும் துணிவும்.. உழைப்பும் தழைப்பும்..
அவளும் நானும்..அளித்தலும் புகழும்..

மீனும் புனலும்..  விண்ணும் விரிவும்..
வெற்பும் தோற்றமும்.. வேலும் கூரும்..
ஆறும் கரையும்.. அம்பும் வில்லும்..
பாட்டும் உரையும்.. நானும் அவளும்..

நானும் அவளும்.. உயிரும் உடம்பும்..
நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..
நானும் அவளும்.. உயிரும் உடம்பும்..
நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..

அவளும் நானும்..தேனும் இனிப்பும்..
அவளும் நானும்..சிரிப்பும் மகிழ்வும்..
அவளும் நானும்..திங்களும் குளிரும்..
அவளும் நானும்..கதிரும் ஒளியும்..

 அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அலையும் கடலும்..
அவளும் நானும்.. தவமும் அருளும்..
அவளும் நானும்.. வேரும் மரமும்..

ஆலும் நிழலும்.. அசைவும் நடிப்பும்..
அணியும் பணிவும்.. அவளும் நானும்..
அவையும் துணிவும்.. உழைப்பும் தழைப்பும்..
அவளும் நானும்..அளித்தலும் புகழும்..

அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அமுதும் தமிழும்..

இது நாள் வரையில்

இது நாள் வரையில்
உலகில் எதுவும்
அழகில்லை என்றேன்
எனை ஓங்கி அறைந்தாளே
குறில் கூச்சத்தால்
நெடில் வாசத்தால்
ஒரு பாடல் வரைந்தானே
இன்றெந்தன் வீட்டின்
கண்ணாடி பார்த்து
பிறந்தநாள் வாழ்த்துச்
சொன்னேனே ஏ… ஏ… ஏ…
இதுவரை ஏதுமே உலகில்
அழகில்லை
என்று நான் நினைத்ததை
பொய் ஆக்கிநாள்
இதுவரை ஏதுமே
மொழியில் சுவை
இல்லை
என்று நான் நினைத்ததை
பொய் ஆக்கினாய்
இதுவரை காற்றிலே
தூய்மை இல்லை
என்றேனே அனைத்தையும்
பொய் ஆக்கினாள்
ஓ மெத்தை மேலே வான்
மேகம் ஒன்று
உக்கார்ந்து கொண்டு உன்
கண்ணை பார்த்தால்
அய் அய் அய்யய்யோ
இனிமேலே என்ன
செய்வாயோ?
என் வாழ்க்கை முன் போல்
இல்லை
அதனால் என்ன… பரவா
இல்லை…
இனிமேல் நீ என்ன
செய்வாயோ?......
இதுவரை ஏதுமே உலகில்
அழகில்லை
என்று நான் நினைத்ததை
பொய் ஆக்கினாள் ஆ… ஆ…
ஓ… ஓ…
அழகில்லை என்றேன் நான்
அதை அவள் பொய்
ஆக்கினாள்
இசை சுகம் இல்லை
என்றேன்
அதை அவள் பொய்
ஆக்கினாள்
மொழியில் சுவை
இல்லை என்றேன்
அதை அவள் பொய்
ஆக்கினாள்
அவள் அவள் அவள் அவள்
பொய் ஆக்கினாள்
அவள் அவள் அவள், அவள்
அவள் அவள்…