தாயின் மடி இசை..
தந்தையின் பாதுகாவல் இசை..
தோழியின் நெருக்கம் இசை..
தோழனின் அணைப்பு இசை..
காதலின் ரீங்காரம் இசை..
கண்ணீரின் ஓங்காரம் இசை..
ஜனனத்தின் துவக்கம் இசை..
மரணத்தின் முடிவு இசை..
பால்யத்தின் தேடல் இசை..
பதின்மத்தின் பரிதவிப்பு இசை..
காமத்தின் ஆர்ப்பாட்டம் இசை..
இறைமையின் மௌனம் இசை..
உருவமற்ற இசை..
உயிர் மீட்டும் இசை..
உணர்வை எழுப்பும் இசை..
உணர்வை செதுக்கும் இசை..
என்றும் புதியதும் இசை..
என்றும் பழையதும் இசை..
இசையால் பிறந்து,
இசையால் வளர்ந்து,
இசையால்
மரித்துப் போகும் மானுடம்...
பிறப்பும் இல்லாது,
இறப்பும் இல்லாது,
என்றும் வாழ்ந்திருக்கும்
செழித்திருக்கும் நித்ய இசை...