தண்டனை என்பது நீதிமன்றதால் விசாரிக்கப்பட்டு விதிக்கபடுவது. 99 சதவிகிதம் சரியான முறையிலேயே தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. 100 குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கபடகூடாது என்ற கருத்துக்காக இந்த தூக்கு தண்டனை வேண்டாம் என்று வாதாடுவதாக இருந்தால் , தப்பிசெல்லும் அந்த 99 குற்றவாளிகளும் எந்த ஒரு நிரபரதிக்காக இந்த தண்டனை வேண்டாம் என்கிறீர்களோ,அதே போன்று 100 அப்பாவிகளை அனுதினமும் கொல்லும் சூழ்நிலையை நாமே உருவாக்கி கொடுக்கிறோம். நானும் தூக்கு தண்டனை பற்றி பொதுவான கருத்தைத்தான் சொல்கிறேன்.இந்த தூக்கு தண்டனையே இல்லை என்ற பட்சத்தில் கொடிய குற்றவாளிகளை நாம் தெரிந்தே இவ்வுலகில் உலவவிடும் பொறுப்புக்கு ஆளாகிறோம்.
ஒருவர் செய்த குற்றம் உணர்ச்சிவசப்பட்டு செய்த குற்றமாக இருப்பின் அல்லது எதிர்பாரத விதத்தில் நடந்த குற்றமாக இருப்பின் எளிதில் நீதிமன்றத்தால் அறியப்படும். அது போன்ற குற்றங்களுக்கு வேண்டுமானால் தூக்கு தண்டனை தவிர மற்ற தண்டனைகள் கொடுக்கலாம்.
ஆனால் திட்டமிட்டு , வேண்டுமென்றே செய்கின்ற கொலைகளுக்கு மரண தண்டனையே சரி.