* மாங்காய் - 1 கிலோ
* உப்பு - 1 குழிக்கரண்டி
* மாங்காயை தோல் நீக்கி மெல்லிய கண்ணுள்ள கேரட் துருவியால் துருவிக்கொள்ளவும்.
* இதனை உப்பு சேர்த்து உலர்ந்த பாட்டிலில் போட்டு வெயிலில் வைக்கவும்.
* மறுநாள் மாங்காயில் இருந்து சாறு வெளிப்பட்டு இருக்கும்.
* அதனை வடித்து விட்டு ஒரு தாம்பாளத்தில் மாங்காய்த்துருவலை உலர்த்தவும்.
* இரவில் மீண்டும் பாட்டிலில் சாறுடன் மாங்காய்த்துருவலை சேர்க்கவும்.
* மறுநாளும் மேற்கண்ட முறையில் செய்யவும்.
* மாங்காய் சாறு முழுமையாக வற்றியதும், தாம்பாளத்தில் பரப்பி வெயிலில் நன்கு மொறுமொறுப்பாக காயும் வரை காய வைத்து சேமிக்கவும்.